1. அடுத்தவரின் மனைவி / கணவன் மீது ஆசைப்படுதல்.
2. அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு, அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.
3. தங்களின் சுய நலத்திற்காக எளியவர்களின் கனவை, வாழ்வை அழிப்பது, அவர்களின் மீது இல்லாதப் பழியைச் சுமத்துவதும், இறைவனின் மூன்றாவது கண்களிலிருந்து தப்பிக்க முடியாத பாவம்.
4. ஒருவன் தொடர்ந்து தீய வழியிலேச் செல்வது அல்லது சிறிய நன்மை கூட அடுத்தவர்களுக்கு செய்யாமலிருப்பது இரண்டுமே இறைவனின் கோபத்திற்கு ஆளாகும் பாவங்கள்.
5. கர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்து கொள்வதும், அவர்களைத் தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதே போல் மாதவிலக்கின் போது பெண்களைத் திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.
6. இன்னொருவரைப் பற்றி அப்படமான பொய் கூறி, அவரை சீர்குலைய வைப்பதும் இறைவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
7. வதந்திகளையும், தேவையில்லாத விசயங்களையும், மனதிற்கு நிம்மதியளிக்காத செய்திகளையும் அனைவரிடமும் பரப்புவது மோசமான செய்கையாகும். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
8. ஒருவரின் செய்கையால், மற்றொருவரின் வாழ்வு நாசமானால் அதுவும் மிகப் பெரிய பாவம். அடுத்தவரைக் கொலை செய்வது, அழிப்பது போன்றவைகளாகும்.
9. சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்கிற நிலையை மீறி, அதனைச் சாப்பிடுவது பாவச் செயல்.
10. வன்முறையைக் கையாள்வது. குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் செய்யும் வன்முறைகள் போன்றவை மன்னிக்க முடியாத பாவமாகும்.
11. மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதையின்றி நடத்துவது, அவர்களை அடித்துத் துன்புறுத்துவது போன்றவைகளால் இறைவனின் கடும் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும்.
12. முறையற்ற வழியில் சொத்து சேர்ப்பது, தானமாகக் கொடுத்தப் பொருளை திரும்பக் கேட்டு வாங்குவது இறைவனின் பாவத்தின் கணக்கில் அடங்கும்.