இந்து சமயத்தில் 13 வகையான சாபங்கள் இருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. அவை;
1. பெண் சாபம்
2. பிரேத சாபம்
3. பிரம்ம சாபம்
4. சர்ப்ப சாபம்
5. பித்ரு சாபம்
6. கோ சாபம்
7. பூமி சாபம்
8. கங்கா சாபம்
9. விருட்ச சாபம்
10. தேவ சாபம்
11. ரிஷி சாபம்
12. முனி சாபம்
13. குலதெய்வ சாபம்
1. பெண் சாபம்
பெண்களை ஏமாற்றுதல், சகோதரிகளை ஆதரிக்காமல் இருத்தல், மனைவியைக் கைவிடுதல் போன்றவைகளால் ஏற்படும் சாபம் இது. இச்சாபம் ஏற்பட்டால் வம்சம் அழிந்து போய்விடும்.
2. பிரேத சாபம்
இறந்த மனிதனின் உடலை வைத்துக் கொண்டு, அவரை இழிவாகப் பேசுதல், அவருடைய உடலைத் தாண்டுதல், பிணத்தின் இறுதி காரியங்களைச் செய்யவிடாமல் தடுத்தல், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுத்தல், பிரேத சாபத்தை ஏற்படுத்துதல் போன்றவைகளால் ஏற்படும் சாபம் இது. இச்சாபத்தால் ஆயுள் குறையும்.
3. பிரம்ம சாபம்
கற்றுக்கொடுத்த குருவை மறத்தல், கல்வியைத் தவறாகப் பயன்படுத்துதல், தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்காமல் மறைத்தல் போன்ற காரணங்களால் ஏற்படும் சாபம் இது. இச்சாபத்தால், கல்வி இல்லாமல் போகும்.
4. சர்ப்ப சாபம்
பாம்புகளைத் தேவையின்றி கொல்வது, அவற்றின் இருப்பிடங்களை அழிப்பது போன்றவைகளால் சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷம் ஏற்பட்டுத் திருமணத் தடை ஏற்படும்.
5. பித்ரு சாபம்
முன்னோர்களுக்குச் செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களைச் செய்யாமல் மறப்பது, தாய், தந்தை, தாத்தா, பாட்டி போன்றோரை ஒதுக்குவது, மதிக்காமலிருப்பது போன்றவைகளால் பித்ரு சாபம் ஏற்படும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்து போவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
6. கோ சாபம்
பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதிருப்பது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
7. பூமி சாபம்
ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், மக்காதப் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை ஏற்படுத்தும். பூமி சாபம் நரக வேதனையைக் கொடுக்கும்.
8. கங்கா சாபம்
பலர் அருந்தக்கூடிய நீரைப் பாழ் செய்வது, ஓடும் நதியை அசுத்தம் செய்வது போன்ற தண்ணீரைத் தவறாகப் பயன்படுத்தும் செயல்களால் கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
9. விருட்ச சாபம்
பச்சை மரத்தை வெட்டுவது, கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வது, மரத்தை எரிப்பது, மரங்கள் சூழ்ந்த இடத்தை வீடு கட்டும் மனையாக்குவது போன்ற செயல்களால் விருட்ச சாபம் ஏற்படும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
10. தேவ சாபம்
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால் தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்து விடுவர்.
11. ரிஷி சாபம்
ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் மற்றும் ஆன்மிகப் பணி செய்பவர்களை அவமதிப்பது போன்றவற்றால் ரிஷி சாபம் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
12. முனி சாபம்
எல்லைதெய்வங்கள் மற்றும் சின்னச்சின்னத் தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
13. குலதெய்வ சாபம்
நமது முன்னோர்கள் பூஜித்த குலதெய்வத்தை மறக்காமல் இருப்பது. குல தெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்து கொள்ளும்.