வீட்டில் தரித்திரம் மறைந்து, செல்வம் நிலைக்கக் கடைப்பிடிக்க வேண்டியவை;
1. வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
2. ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசற்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க, வாங்க வேண்டும்.
3. உங்கள் வீடுகளில் லட்சுமி கடாட்சம் தழைத்து, செல்வம் பெருக வெற்றிலை, வாழையிலை போன்றவைகளை வாட விடக்கூடாது.
4. வெற்றிலையைத் தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.
5. உப்பைத் தரையில் சிந்தக்கூடாது. அரிசியைக் கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
6. பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது
7. இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியேக் கொட்டக் கூடாது. வீட்டில் தூசி, ஒட்டடை சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
8. அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமேப் பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவைகள் மாமிசத்துக்குச் சமம்.
9. செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது, அப்படி வீசினால் பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
10. செல்வச் செழிப்போடு வாழ, நமது வீட்டில் நமது ஆடைகள், துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது. நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும், புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
11. நமது வீட்டிற்குள் நுழைந்ததும், எப்போதும் நறுமணம் வீச வேண்டும். அப்படி இருந்தால், செல்வம் சேரத் தொடங்கும். எங்கோப் போக வேண்டிய பணம், நமது வீட்டை நோக்கி வரும். அதே சமயம் தேவையற்ற செலவுகளும் குறையும்.