* இறைவன் சிவபெருமான் பார்வதிக்கு வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்த தலம் - உத்திரகோசமங்கை
* தட்சிணாமூர்த்தி உமாதேவிக்குப் பிரணவப்பொருள் உபதேசித்த தலம் - ஓமாம்புலியூர்
* இறைவன் சிவபெருமானிடம் அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்ற தலம் - இன்னம்பர்
* இராமர் சேது அணை கட்டுவதற்கு இறைவன் சிவபெருமானிடம் மந்திர உபதேசம் பெற்ற தலம் - திருவுசாத்தானம்
* சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்ற தலம் மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்ற தலம் - ஆலங்குடி
* இறைவன் சிவபெருமான் அகத்தியருக்கு மூலிகை வைத்தியம் பற்றி உபதேசம் செய்த தலம் - திருவான்மியூர்
* அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்த தலம் மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளிய தலம் - திருவாவடுதுறை
* பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்த தலம் - சிதம்பரம்
* இறைவன் சிவபெருமான் நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம் செய்த தலம் - திருப்பூவாளியூர்
* இறைவன் சிவபெருமான் சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம் செய்த தலம் - திருமங்களம்
* இறைவன் சிவபெருமான் சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம் செய்த தலம் - திருக்கழுக்குன்றம்
* இறைவன் 1000 முனிவர்களுக்கு அறநெறிகளை அறிவுறையாக வழங்கிய தலம் - திருமயிலை
* இறைவன் சிவபெருமான் வேதம் பற்றியும், கருப்பொருள் பற்றியும் தவசிகள் பலருக்கு அருளுரை வழங்கிய தலம் - செய்யாறு
* குருமூர்த்தியிடம் நான்முகன் ஞானோயதேசம் பெற்ற தலம் - திருவெண்காடு (இங்கு அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர் பெற்றார்)
* அம்பாள் சுவாமியிடம் ஞானோபதேசம் பெற்ற தலம் - திருப்பனந்தாள்
* இறைவன் சிவபெருமானிடம் பிரம்மன் ஞானோபதேசம் பெற்ற தலம் - திருக்கடவூர்
* இறைவன் சிவபெருமானிடம் அம்பிகை ஞானோபதேசம் பெற்ற தலம் - திருவானைக்கா
* குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்ற தலம் - மயிலாடுதுறை
* இறைவன் அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம் செய்த தலம் - திருவாவடுதுறை
* இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விட்ட தலம் - விருத்தாசலம்
* இறைவன் சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம் செய்த தலம் - திருப்பெருந்துறை
* ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்த தலம் - உத்தரமாயூரம்
* இறைவன் சிவபெருமான் ஸப்தரிஷிகளுக்கு உபதேசம் செய்த தலம் - காஞ்சிபுரம்
* இறைவன் சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம் செய்த தலம் - திருப்புறம்பயம்
* இறைவன் சிவபெருமான் அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம் செய்த தலம் - விளநகர்
* இறைவன் சிவபெருமான் பிரம்மசாரியாய் வேதத்தைத் தாமே சொன்ன தலம் - திருத்துருத்தி
* இறைவன் சிவபெருமான இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தைச் சுக்கிரனுக்கு உபதேசித்த தலம் - கரூர்
* இறைவன் சிவபெருமான் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்த தலம் - திருவோத்தூர்