மகாபாரதம்
பா. காருண்யா

பாரத தேசத்தின் மகாகாவியமான ‘மகாபாரதம்’ உலகிலேயே மிக நீளமான மற்றும் அதிக சுலோகங்களைக் கொண்ட காவியம் ஆகும். பண்டைய கிரேக்கக் காவியங்களான ஒடிஸி மற்றும் இலியத் ஆகிய இரண்டு காவியங்களையும் விட மகாபாரதம் பல மடங்கு பெரியதாகும். அதேபோல இராமாயணத்தை விட நான்கு மடங்கு பெரியது மகாபாரதம்.
* ஒடிஸி - 12,110 சுலோகங்கள்
* இலியத் - 15,693 சுலோகங்கள்
* இராமாயணம் - 24,000 சுலோகங்கள்
* மகாபாரதம் - 100,000 சுலோகங்கள்
மகாபாரதம் குறித்த மேலும் சில சுவையான தகவல்கள்;
1. மகாபாரதத்தின் சுலோகங்கள் எல்லாம் இரட்டையாக அமைந்துள்ளதால், உண்மையில் மகாபாரதம் 2,00,000 சுலோகங்களைக் கொண்டுள்ளதாகும்.
2. இருபெரும் இதிகாசங்களில் ஒன்றுதான் மகாபாரதம். இதிகாசம் என்றால் வரலாற்று நிகழ்வு எனப் பொருள்படும்.
3. மகாபாரதம் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. மகாபாரத நிகழ்வுகள் சுமார் 5000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது என்றும், இந்நிகழ்வுகளை வியாசர் கணேசருக்குச் சொல்லக் கணேசர் இதனை இயற்றி அருளினார் என்பர்.
4. கணேசர் அருளிய மகாபாரதம் ஆரம்பகாலத்தில் 8,800 சுலோகங்களையேக் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதிபர்வத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், சில கூடுதலான நிகழ்வுகள் சேர்க்கப்பட்டு 24,000 சுலோகங்கள் ஆனது. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இது 100,000 சுலோகங்களுடம் நிறைவு பெற்றது.
5. மகாபாரதம், ஆதி பர்வம், சபா பர்வம், வன பர்வம், விராத பர்வம், உத்யோக பர்வம், பீஷ்ம பர்வம், துரோண பர்வம், கர்ண பர்வம், ஷால்ய பர்வம், சௌப்திக பர்வம், ஸ்திரி பர்வம், சாந்தி பர்வம், அனுஷாசன பர்வம், அஷ்வமேதிக பர்வம், ஆஷ்ரமவாசிக பர்வம், மௌசால பர்வம், மகாபிரஸ்தானிக பர்வம், சுவர்கரோகன பர்வம் என்று 18 பர்வங்களைக் கொண்டது.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|