விநாயகரை 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகிறது. 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வதால் அடையக்கூடிய பலன்கள் பற்றிய தகவல்கள்;
1. முல்லை இலை - அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி இலை - வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை - இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அருகம்புல் - அனைத்து உடல் நலன்களும் கிடைக்கும்.
5. இலந்தை இலை - கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை - பெருந்தன்மை கைவரப் பெறும்.
7. வன்னி இலை - பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
8. நாயுருவி - முகப்பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்திரி - வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.
10. அரளி இலை - எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
11. எருக்கம் இலை - கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
12. மருதம் இலை - மகப்பேறு கிடைக்கும்.
13. விஷ்ணுகிராந்தி இலை - நுண்ணறிவு கைவரப் பெறும்.
14. மாதுளை இலை - பெரும் புகழும், நற்பெயரும் கிடைக்கும்.
15. தேவதாரு இலை - எதையும் தாங்கும் மனோதிடம் கிடைக்கும்.
16. மருக்கொழுந்து இலை - இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.
17. அரசம் இலை - உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.
18. ஜாதிமல்லி இலை - சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.
19. தாழம் இலை - செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.
20. அகத்தி இலை - கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை - நல்ல கணவன் / மனைவி அமையப்பெறும்.