* பசுவுக்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை, களவு செய்வதால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் இருந்தால் அந்தப் பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.
* பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த பலன்கள் கிடைக்கும்.
* பசுவை வழிபடுவதால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த பலன்கள் கிடைக்கும்.
* பசு உண்பதற்குப் புல் கொடுத்தாலும் (கோக்ராஸம் ), பசுவின் கழுத்துப் பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும்.
* பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியாக் காலம் கோதூளிக் காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும்.
* பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைத்தான் அன்றைய காலத்தில் மாமன்னர்கள் பூசிக் கொண்டார்கள்.
* "மா" என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.
* பசு வசிக்கும் இடத்தில், அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.
* மனிதன் கண்களுக்குப் புலப்படாத ம்ரத்யு, எமன், எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமேப் புலப்படுவார்கள்.
* ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.
* உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனைப் பாதிப்புகள் நிகழ்ந்தாலும், பசுக்கள் வசிக்கும் இடத்தி்ல் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது.