சிவபெருமானுக்கு அபிசேகம் செய்யும் போது ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும், அதன்படி, மிகப்பெரிய பிரச்சனைகளைத் தீர்க்க எளிமையான ஒரு சில அபிசேகப் பொருட்கள் கிடைக்கும். அந்தப் பொருட்களும், அதற்கான பலன்களும் கீழே...
1. அருகம்புல் நீரினால் சிவாபிசேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.
2. நல்லெண்ணெய் அபிசேகத்தினால் கடன்கள் தீரும்.
3. பசும்பால் அபிசேகத்தினால் அனைத்து நலன்களும் கிடைக்கும்.
4. தயிர் அபிசேகத்தினால் பலம், உடம் நலம் கிடைக்கும்.
5. பசு நெய்யினால் அபிசேகம் செய்தால் செல்வம் கிடைக்கும்.
6. கரும்புச் சாற்றினால் அபிசேகம் செய்தால் தன விருத்தி கிடைக்கும்.
7. மிருதுவான சர்க்கரையினால் அபிசேகம் துன்பம் நீங்கும்.
8. தேன் அபிசேகத்தினால் உடல் மெருகு கிடைக்கும்.
9. புஷ்ப நீரினால் அபிசேகம் செய்தால் இலாபம் கிடைக்கும்.
10. இளநீரினால் அபிசேகம் செய்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும்.
11. உத்திராட்ச நீரினால் அபிசேகம் செய்தால் அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும்.
12. பஸ்மத்தினால் அபிசேகம் செய்தால் பெரும் பாவங்கள் நீங்கும்.
13. கந்தத்தினால் (அரைத்தெடுத்த சந்தனம்) அபிசேகம் செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும்.
14. ஸ்வர்ண (தங்கம்) ஜலத்தினால் அபிசேகம் செய்தால் கோரமான துன்பங்கள் நீங்கும்.
15. சுத்த நீரினால் அபிசேகம் செய்தால் நஷ்டமானவை திரும்ப கிடைக்கும்.
16. வில்வ நீரினால் அபிசேகம் செய்தால் போக பாக்யங்கள் கிடைக்கும்.
17. அன்னத்தினால் அபிசேகம் செய்தால் அதிகாரம், மோட்சம் மற்றும் தீர்க்காயுள் கிடைக்கும்.
18. திராட்சைச் சாற்றினால் அபிசேகம் செய்தால் எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும்.
19. கர்ஜூரம் (பேரிச்சம்பழம்) சாற்றினால் அபிசேகம் செய்தால் எதிரிகள் இல்லாமல் போவர்.
20. நாவல்பழச் சாற்றினால் அபிசேகம் செய்தால் வைராக்கிய சக்தி கிடைக்கும்.
21. கஸ்தூரி நீரினால் அபிசேகம் செய்தால் உயர்பதவி கிடைக்கும்.
22. நவரத்தின நீரினால் அபிசேகம் செய்தால் தான்யம் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கிடைக்கும்.
23. மாம்பழச் சாற்றினால் அபிசேகம் செய்தால் தீராத நோய்கள் தீரும்.
24. மஞ்சள் நீரினால் அபிசேகம் செய்தால் மங்களம் உண்டாகும்.