1.கோயிலில் தூங்கக்கூடாது.
2. கோயிலில் தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது.
3. கோயிலில் கொடிமரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது.
4. கோயிலில் விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக்கூடாது.
5. கோயிலில் அபிசேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக்கூடாது.
6. கோயிலுக்குக் குளிக்காமல் செல்லக்கூடாது.
7. கோயிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொட்டு வணங்கக்கூடாது.
8. கோயிலில் கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது.
9. கோயிலுக்குள் மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது.
10. கோயிலுக்குச் சென்று திரும்பியவுடன் கால்களைக் கழுவக் கூடாது.
11. கோயில் படிகளில் உட்காரக்கூடாது.
12. சிவபெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும். பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது.
13. வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது இறை உருவங்களுக்கு வைக்கக்கூடாது.
14. கோயில்களில் மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளைக் கழுவி, சுத்தம் செய்யாமல் ஏற்றக்கூடாது.
15. கிரகண வேளைகளில் கோவிலுக்குச் சென்று வணங்கக் கூடாது.
16. கோவிலுக்குச் சென்று விட்டு, வெளியே வந்து தர்மம் செய்யக்கூடாது.
17. புண்ணிய நதிகளில் நீரை எடுத்துத் தலையில் தெளித்துக் கொண்டு, அதன் பிறகுதான் கால் அலம்ப வேண்டும். நீர்நிலைக்கு வந்தவுடன் அதில் காலை வைக்கக்கூடாது.
18. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
19. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
20. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது, அதைப் பார்த்தல் கூடாது.
21. தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது.
22. கோயிலில் எவருடனும் வீண் வார்த்தைகள் பேசக்கூடாது.