இறைவன் சிவபெருமானுக்கும், ஐந்து எனும் எண்ணிக்கைக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. அவற்றுள் சில;
* பஞ்சாட்சரம்
1. நமசிவாய - தூல பஞ்சாட்சரம்
2. சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம்
3. சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம்
4. சிவசிவ - காரண பஞ்சாட்சரம்
5. சி - மகா காரண பஞ்சாட்சரம்
* சிவமூர்த்தங்கள்
1. பைரவர் - வக்கிர மூர்த்தி
2. தட்சிணாமூர்த்தி - சாந்த மூர்த்தி
3. பிச்சாடனர் - வசீகர மூர்த்தி
4. நடராசர் - ஆனந்த மூர்த்தி
5. சோமாஸ்கந்தர் - கருணா மூர்த்தி
* பஞ்சபூதத் தலங்கள்
1. நிலம் - திருவாரூர்
2. நீர் - திருவானைக்கா
3. நெருப்பு - திருவண்ணாமலை
4. காற்று - திருக்காளத்தி
5. ஆகாயம் - தில்லை
* பஞ்சலிங்க சேத்திரங்கள்
1. முக்திலிங்கம் - கேதாரம்
2. வரலிங்கம் - நேபாளம்
3. போகலிங்கம் - சிருங்கேரி
4. ஏகலிங்கம் - காஞ்சி
5. மோட்சலிங்கம் - சிதம்பரம்
* பஞ்சவனதலங்கள்
1. முல்லை வனம் - திருக்கருகாவூர்
2. பாதிரி வனம் - அவளிவணல்லூர்
3. வன்னிவனம் - அரதைபெரும்பாழி
4. பூளை வனம் - திருஇரும்பூளை
5. வில்வ வனம் - திருக்கொள்ளம்புதூர்
* பஞ்ச ஆரண்ய தலங்கள்
1. இலந்தைக்காடு - திருவெண்பாக்கம்
2. மூங்கில் காடு - திருப்பாசூர்
3. ஈக்காடு - திருவேப்பூர்
4. ஆலங்காடு - திருவாலங்காடு
5. தர்ப்பைக்காடு - திருவிற்குடி
* பஞ்ச சபைகள்
1. திருவாலங்காடு - இரத்தின சபை
2. சிதம்பரம் - பொன் சபை
3. மதுரை - வெள்ளி சபை
4. திருநெல்வேலி - தாமிர சபை
5. திருக்குற்றாலம் - சித்திர சபை
* ஐந்து முகங்கள்
1. ஈசானம் - மேல் நோக்கி
2. தத்புருடம் - கிழக்கு
3. அகோரம் - தெற்கு
4. வாம தேவம் - வடக்கு
5. சத்யோசாதம் - மேற்கு
* ஐந்தொழில்கள்
1. படைத்தல்
2. காத்தல்
3. அழித்தல்
4. மறைத்தல்
5. அருளல்
* ஐந்து தாண்டவங்கள்
1. காளிகா தாண்டவம்
2. சந்தியா தாண்டவம்
3. திரிபுரத் தாண்டவம்
4. ஊர்த்துவ தாண்டவம்
5. ஆனந்த தாண்டவம்
* இறைவனும் பஞ்சபூதமும்
1. நிலம் - 5 வகை பண்புகளையுடையது (மணம், சுவை, ஒளி, ஊறு, ஓசை)
2. நீர் - 4 வகை பண்புகளையுடையது (சுவை, ஒளி, ஊறு, ஓசை)
3. நெருப்பு - 3 வகை பண்புகளையுடையது (ஒளி, ஊறு, ஓசை)
4. காற்று - 2 வகை பண்புகளையுடையது (ஊறு, ஓசை)
5. ஆகாயம் - 1 வகை பண்பு உடையது (ஓசை )
* ஆன் ஐந்து
1. பால்
2. தயிர்
3. நெய்
4. கோமியம்
5. கோசலம்
* ஐங்கலைகள்
1. நிவர்த்தி கலை
2. பிரதிட்டை கலை
3. வித்தை கலை
4. சாந்தி கலை
5. சாந்தி அதீத கலை
* பஞ்ச வில்வம்
1. நொச்சி
2. விளா
3. வில்வம்
4. கிளுவை
5. மாவிலங்கம்
* ஐந்து நிறங்கள்
1. ஈசானம் - மேல் நோக்கி - பளிங்கு நிறம்
2. தத்புருடம் - கிழக்கு - பொன் நிறம்
3. அகோரம் - தெற்கு - கருமை நிறம்
4. வாம தேவம் - வடக்கு - சிவப்பு நிறம்
5. சத்யோசாதம் - மேற்கு - வெண்மை நிறம்
* பஞ்ச புராணம்
1. தேவாரம்
2. திருவாசகம்
3. திருவிசைப்பா
4. திருப்பல்லாண்டு
5. பெரியபுராணம்
* இறைவன் விரும்ப நாம் செய்யும் ஐந்து
1. திருநீறு பூசுதல்
2. உருத்ராட்சம் அணிதல்
3. பஞ்சாட்சரம் ஜெபித்தல்
4. வில்வ அர்ச்சனை புரிதல்
5. திருமுறை ஓதுதல்
* பஞ்சோபசாரம்
1. சந்தனமிடல்
2. மலர் தூவி அர்ச்சித்தல்
3. தூபமிடல்
4. தீபமிடல்
5. அமுதூட்டல்.