சங்கடஹர சதுர்த்தி அன்று முறையாக விரதம் இருந்து பிள்ளையாரை வழிபடுகிறவர்களுக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதோடு கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். சங்கடம் என்றால் கஷ்டம் என்று பொருள் ஹர என்றால் அழிப்பது என்று பொருள். விரதம் இருந்து சங்கடங்களை அழிப்பதற்கான நாளையே சங்கடரஹர சதுர்த்தி என்கிறோம். சங்கடஹர சதுர்த்தி நாளில் கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லி வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.
“ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய
மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது
அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா”
மேற்காணும் மந்திரத்தின் பொருள் இதுதான்.
பக்தர்கள் வேண்டிய வரத்தை நல்கும் சங்கடஹர கணபதியே தங்களை வணங்குகிறேன். முழு முதற் கடவுளாகவும், பூத கணங்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருப்பவரே, பக்தர்களை துன்பத்தில் இருந்து காத்து இன்பம் அளிப்பவரே, பக்தர்கர்களோடு எப்போதும் நிலைகொள்பவரே, பக்தர்கள் தொடங்கும் எந்த ஒரு செயலையும் வெற்றிகொள்ளச் செய்பவரே, பக்தர்களைச் சுற்றியுள்ள எதிர்மறையானவற்றை விலக்கி நன்மைகளைத் தரும் நேர்மறை ஆற்றலைப் பெருகச் செய்பவரே, உங்களை மீண்டும் வணங்கி வேண்டுகிறேன்.
சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தைக் கூறுவதன் பயனாக எடுத்துக் கொண்ட செயலில் வெற்றி கிடைக்கும். திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும். இப்படிப் பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.