நந்திதேவர் பதினாறு பேறுகளைத் தனக்கு தந்தருளும்படி இறைவன் சிவபெருமானை வேண்டினார். இறைவன் சிவபெருமானும் அவர் கேட்ட பதினாறு பேறுகளையும் வரமாகத் தந்தருளினார். அவை;
1. வேதங்களையும் சைவத்தையும் நிந்தனை செய்வதைப் பெறாத மனம்.
2. ஐம்புலன்களுக்கு அடிமையாகி அவற்றுக்காகப் பணி செய்யாத நிலை.
3. பிறவி என்பது தீதென்று கருதி உலக சுகத்தைப் பெரிதென்று கருதும் பேதையரை விலகி நிற்கும் உறுதி.
4. நல்லறங்களைச் செய்தவர்களுடன் உறவு.
5. நல்லவர்கள் என்ன கேட்டாலும் உதவி செய்கின்ற இயல்பு.
6. அரும்தவம் செய்தோரை வணங்கிடும் பண்பு.
7. நல்ல உபதேசங்களை ஏற்றுக் கொள்ளும் தன்மை.
8. அன்பர்கள் தீது செய்தாலும் அவற்றை சிவச்செயல் என ஏற்கும் தெளிவு.
9. மனமும் வாக்கும் அன்பர்பால் ஒருமைப்படும் செயல்.
10. கனவிலும் சிவனடியார்க்கு அடிமையாதல்.
11. சிவபெருமானைத் தவிர வேறு யாரையும் கடவுளாக வழிபடாத நிலை.
12. சிவபெருமானின் புகழை நாள்தோறும் உரைத்திடும் பொலிவு.
13. பிற சமயங்களை விட்டு விலகி நிற்கும் ஆற்றல்.
14. பிறர் பொருள்மீது ஆசை ஏற்படாமை.
15. நல்ல நோன்புகளை நோற்றிருத்தல்.
16. நான், எனது என்னும் செருக்கும் சுயநலமும் இல்லாமை.
இந்தப் பதினாறு வரங்களையும் நந்திதேவர் தனக்காகக் கேட்கவில்லை, உலக மக்களுக்காகவே சிவபெருமானிடம் இப்படி வேண்டினார். நந்திதேவர் வேண்டியதை நாமும் இறைவனிடம் வேண்டி நற்பேறுகளைப் பெறுவோம்.