திருவாரூரில் அமைந்துள்ள, தியாகராஜர் கோயில் பற்றிய பல்வேறு சிறப்புகளைத் தெரியுமா உங்களுக்கு...?
* 9 ராஜ கோபுரங்கள்,
* 80 விமானங்கள்,
* 12 பெரிய மதில்கள்,
* 13 மிகப்பெரிய மண்டபங்கள்,
* 15 தீர்த்தக்கிணறுகள்,
* 3 நந்தவனங்கள்,
* 3 பெரிய பிரகாரங்கள்,
* 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),
* 100க்கும் மேற்பட்ட சன்னதிகள்,
* 86 விநாயகர் சிலைகள்,
* 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் கொண்டது.
சோழர்கள் கட்டிய இக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலைச் சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலைச் சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.
திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.
* தெற்கு வடக்காக 656 அடி அகலமும்,
* கிழக்கு மேற்காக 846 அடி நீளமும்,
* சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை
* நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.
சுவாமியின் நடனம் அஜபா நடனம். சுவாமி திருமேனி தரிசனம் கிடையாது. மார்கழி திருவாதிரை ஒரு பாதமும், பங்குனி உத்திரம் மற்றொறு பாதமும் தரிசனம் கிடைக்கும். திருமேனியை யாரும் பார்த்தது கிடையாது. பார்த்தால் கண் குருடாகிவிடும் என்பதால் யாருக்கும் தரிசனமும் கிடையாது. அர்ச்சகர்களும் பார்த்தது கிடையாது என்கின்றனர்.
கிழக்குக் கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக் காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.
“கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி” என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம், 700 அடி அகலம் கொண்ட நிலப்பரப்பு).
கோவிலின் மொத்தப் பரப்பளவு 33 ஏக்கர் ஆகும். அதாவது பதினான்கு லட்சத்து முப்பத்து ஏழாயிரத்து நானுற்று என்பது (1437480) சதுர அடியாகும்.