1. நமச்சிவாய எனும் நாமம் உச்சரிப்பவர்களைச் சனி பாதிப்பதில்லை.
2. பாவ வினைகளுக்குப் பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதைத் தடையின்றி செய்பவர்களைச் சனி தண்டிப்பதில்லை.
3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களைச் சனி கருணையுடன் பார்ப்பார்.
4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களைச் சோதித்தாலும் பாதிப்பதில்லை.
5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களைச் சனி நேசிப்பார்.
6. ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்குப் பிடித்தமான ஒன்று.
7. எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரைச் சனி நெருங்குவதே இல்லை.
8. வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தைப் பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை.
9. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லை.
10. உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனிக்குக் கொள்ளைப் பிரியம். உடனேப் பற்றிக் கொள்வார்.
11. ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள்செல்பவர்களைப் பார்த்தால் சனிக்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களைப் பீடித்துக் கொள்வார்.
12. முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களைப் பார்த்தால் சனிக்கு அவர்களை மிகவும் பிடிக்கும். எப்படியும் சனி பிடித்துக் கொள்வார்.
13. குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களைக் கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களைக் கண்டாலும் சனிக்குப் பிடிக்கும்.
14. விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களைப் பேசுபவர்களைக் கண்டால் சனிக்கு மிகவும் பிடித்தமானவர்கள். தன் தீய பார்வையால் எப்படியும் திரும்பிப் பார்ப்பார்.
15. சுத்தம் இல்லாத இடத்தில் சூன்யம் குடியிருக்குமே தவிர, திருமகள் இருக்க மாட்டாள். ஆனால் சனிக்கு அவ்விடங்கள்தான் அதிகம் பிடிக்கும்.
16. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைக் கூட வாழவிடாமல் தண்டிக்கச் சனிக்குப் பிடிக்கும்.
17. மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சண்டாளர்களை முதலில் ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனிக்கு நிகர் சனியே.
18. அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி நீங்காமல் நிரந்தரமாக இருப்பார்.
19. தாய்க்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களைச் சனி கால நேரம் பார்த்துத் தண்டிப்பார்.