நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...
1. சந்தனாதித் தைலம் - சுகம்தரும்.
2. திருமஞ்சனப்பொடி- கடன், நோய், தீரும்.
3. பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்.
4. பால் - நீண்ட ஆயுள் கிட்டும்.
5. தயிர் - நன்மக்கட்பேறு கிடைக்கம்.
6. நெய் - வீடு பேறு அடையலாம்.
7. தேன் - சுகம்தரும், குரல் இனிமை தரும்.
8. கரும்பின் சாறு - நல்ல உடலைப் பெறலாம்.
9. இளநீர் - போகம் அளிக்கும்.
10. எலுமிச்சம் பழம் - பகைமையை அழிக்கும்.
11. விபூதி - போகமும், மோட்சமும் நல்கும்.
12. சந்தனக் குழம்பு, பன்னீர் - திருமகள் வருவாள்.
13. வலம்புரிச் சங்கு - தீவினை நீக்கும், நல்வினை ஆக்கும்.
14. நெல், எண்ணை - விஷசுரம் நிவர்த்தி.
15. நீர் - சாந்தி உண்டாகும்.
16. வாழைப்பழம் - பயிர் விருத்தி ஆகும்.
17. வெல்லம் - துக்க நிவர்த்தி.
18. சர்க்கரை - சத்ரு நாசம்.
19. அன்னம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
20. மாம்பழம் - வெற்றி கிடைக்கும்.
21. சொர்ணாபிஷேகம் - இலாபம் தரும்.
22. கலாபிசேகம் -நினைத்தவை நடக்கும்.
23. பால் பஞ்சாமிர்தம் - சம்பத்து நல்கும்.