விஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டருள்வது தெரிந்ததுதான். ஆனால், மனிதர்களைப் போல் மேல்நோக்கிப் பார்த்தபடி ஆதிசேசப் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கும் சிலை ஒன்று பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீரில் மிதந்து கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லை.
நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புத்தானி கந்தா கோவில். இந்தக் கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக் கொண்டு இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பதினான்கு அடி உயரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்தச் சிலை பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீரில் மிதந்தபடியே உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்தச் சிலையை நிறுவியதாக இதன் வரலாறு கூறுகிறது. இந்தச் சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும் அபிசேகங்களும் தினமும் நடந்த வண்ணமே உள்ளன.