1. ஆடைகள் தானம்
ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்து விடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.
வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.
2.தேன் தானம்
குழந்தைப்பேறு இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப் பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று சுத்தமான தேனைத் தானம் செய்ய வேண்டும்.
3. நெய் தானம்
பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6, 8, 12 ஆம் அதிபதியின் திசை), நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். அனைத்து நோய்களும் தீரும்.
4. தீப தானம்
விரும்பும் தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும் அல்லது வசதியில்லாத கோவில்களுக்கு தீபம் அல்லது மின் வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.
5. அரிசி தானம்
முற்பிறவி தோசங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக, ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்யவேண்டும்.
6. கம்பளி - பருத்தி தானம்
வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்குக் கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்தி தானம் (பருத்தி உடைகள்) செய்து அதிலிருந்து மீண்டு விடலாம்.