ஒவ்வொரு கிழமையிலும் துர்க்கை வழிபாடு செய்வதற்கான நேரம் கீழேத் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
ஞாயிறு
ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் புதிய வெள்ளைத் துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.
திங்கள்
திங்கள் கிழமைகளில் காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதுடன், வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும்.
செவ்வாய்
ராகு கால நேரமான மாலை 3.00 மணி முதல் 4.30 மணிக்குள் வடக்கு முகமாகத் தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
புதன்
புதன் கிழமை மதியம் 12.00 மணி முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரி செய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பதுடன் ரத்த சம்பந்தமான நோய் இருந்தால் அதுவும் நீங்கும்.
வியாழன்
வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 மணி முதல் முதல் 3.00 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வணிகர்களுக்கு அதிக லாபம் கிட்டும். இதயம் தொடர்பான நோய்கள் நீங்கும்.
வெள்ளி
வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து ராகு கால நேரமான காலை 10.30 மணி முதல் முதல் 12.00 மணிக்குள் துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டு, அதைக் குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய்ச் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்யப் பலம் பெருகும்.
திருமணம் தடைப்படுபவர்கள், நாள்தோறும் துர்க்கையினை வழிபாடு செய்தால், விரைவில் அவர்களுக்கான திருமணத்தடை நீங்கி நல்ல இல்வாழ்க்கை அமையும்.