இந்து சமயத்தில் வணங்கும் முறைகள் கீழ்க்காணும் ஏழு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1. ப்ரதுதானா - எழுந்து நின்று வணங்கி வரவேற்பது.
2. நமஸ்காரா - நமஸ்தே / வணக்கம் என்று கூறி வணங்குதல்.
3. உபஸங்க்ரஹன் - பெரியோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதங்களைத் தொட்டு வணங்குதல்.
4. அஷ்டாங்க / ஸாஷ்டாங்க - இறைவன் மற்றும் பெரியோரின் முன்னேக் கால்கள், முழங்கால்கள், வயிறு, மார்பு, நெற்றி மற்றும் கைகள் நிலத்தில் படுமாறு கீழே விழுந்து வணங்குதல். ஆண்களுக்கு மட்டுமே உரியது. எட்டு அங்கங்கள் தரையில் படும்படி வணங்குவதாகும்.
5. ப்ரத்யபிவாதனா - பிறர் வணக்கத்திற்கு பதிலாக வணக்கம் கூறுதல்.
6. பஞ்சாங்கநமஸ்காரம் - இது பெண்களுக்குரியது. இறைவன் மற்றும் பெரியோர்களை நெற்றி, முழங்கால்கள் இரண்டு, பாத நுனிகள் இரண்டும் பூமியில் படுமாறு வணங்குதல்.
7. உத்தம நமஸ்காரம் - லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டுக் கரங்களை இணைத்து, இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து மனதில் மந்திரங்களை உச்சரித்து இறைவனை மனதார வணங்குதல். மனிதன் தன் ஆத்ம இருப்பிடமான இதயத்திலிருந்து வணங்குவதாகத் தொன்ம நம்பிக்கை.