சிவபெருமானின் வடிவங்களில் ஐந்து வடிவங்கள் மிகவும் சிறப்புடையவை. நமக்கு என்ன பலன் தேவையோ, அதற்கேற்ற வடிவத்தில் சிவபெருமானை வழிபட்டுப் பலன் பெறலாம்.
* சாந்தமே உருவான தட்சிணாமூர்த்தியாக வழிபடுபவர்கள் மனஅமைதியும் ஞானமும் கைவரப்பெறுவர்.
* வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால் முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும்.
* வக்ரமூர்த்தியாக விளங்கும் பைரவராக வழிபட்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும். தைரியம் உண்டாகும்.
* ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜராகத் துதித்தால் மனமகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும்.
* அம்மையப்பராக சிவபார்வதி வீற்றிருக்க, முருகன் நடுவில் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தமூர்த்தியைத் தரிசித்தால் வாழ்வில் நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும்.