1. சரவணம்
கேட்டல் அதாவது பல நிலைகளில் பல பெரியோர்களின் மூலம் இறைவனைப் பற்றிக் கேட்டு அறிந்து, அவனிடம் பக்தி கொண்டொழுகுவது சரவணம் ஆகும்.
2. கீர்த்தனம்
இறைவனின் புகழ்பாடும் பொருட்டு கீர்த்தனங்களை உருவாக்கி, அதன் மூலம் இறைபுகழ் பாடித் தொழுவது கீர்த்தனம்.
3. ஸ்மரணம்
இறைவன் நம் மனதைப் படைத்த பயன் நிறைவேறும் வகையில் எப்போதும் அவனைப் பற்றி நினைத்துருகுவது ஸ்மரணம்.
4. பாதஸேவனம்
இறைவனின் திருவடிகளை விட்டு நீங்காது, குற்றமற்ற தூய உணர்வுடன் கைங்கர்யம் செய்தல் பாதஸேவனமாகும்.
5. வந்தனம்
இந்த உடல் இறைவன் கொடுத்தது. எனவே, உடலோடு என் உள்ளத்தையும் உனக்களித்தேன் எனும்படி கீழே விழுந்து சாஷ்டாங்கமாய் இறைவனை வணங்கி எழுதல்.
6. தஸ்யம்
எப்போதும் இறைவனுக்குத் தம்மை அடிமையாய்க் கருதி திருப்பணி விடை செய்தல் தஸ்யம் ஆகும்.
7. ஸக்யம்
அடியவன் இறைவனை தம் தோழனாய், தம் அன்பிற்குரியவனாய்க் கருதி நேசத்துடன் பக்தி செய்வது.
8. ஆத்ம நிவேதனம்
இந்த ஆத்மாவை அவனுடையது என இறைவனுக்கு அன்னமாய் நிவேதனம் செய்து பூஜிப்பது.