அம்மன் வழிபாட்டில் 64 வகையான விருந்தோம்பல் எனப்படும் உபசாரங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை;
1. பாத்யம் - திருவடிவகளைக் கழுவதற்கான தீர்த்தம் கொடுத்தல்.
2. ஆவராணாவரோபணம் - நகைகளைக் கழற்றுதல்.
3. ஸுகந்திதைலாப்யங்கம் - வாசனை எண்ணெய் தேய்த்தல்.
4. மஞ்ஜனசாலாப்ரவேசனம் - குளியலறைக்குச் செல்லுதல்.
5. மஞ்ஜனசாலாமணிபீடோபவேசனம் - குளியலறையிலிலுள்ள மணிமயஆஸனத்திலிருத்தல்
6. திவ்யஸ்னானீயோத் வர்த்தனம் - ஸ்நானத்திற்குரிய வாஸனைப் பொடிகளை சரீரத்தில் தேய்த்தல்.
7. உஷ்ணோதகஸ்நானம் - வென்னீரில் குளித்தல்.
8. கனககலசச்யுதஸகல தீர்த்தாபிஷேகம் - தங்கமயமான குடங்களிலிருந்துகொட்டும் எல்லாவித தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்தல்.
9. தௌதவஸ்த்ரபரிமார்ஜ்ஜனம் - வெளுத்ததுணியால் உடம்பு துடைத்தல்
10. அருணதுகூலபரிதானம் - சிவப்பு பட்டை உடுத்துதல்.
11. அருணகுசோத்தரீயம் - சிவப்பு ரவிக்கை அணிவித்தல்.
12. ஆலேபமண்டபப்ரவேசனம் - அலங்கார அறைக்குச் செல்லுதல்.
13. ஆலேபமண்டப மணிபீடோபவேசனம் - மேற்கூறின அறையில் உள்ள ரத்னமயமான பீடத்தில் இருத்தல்.
14. சந்தனாகரு குங்கும ம்ருகமத கஸ்தூரி கோரோசனாதி திவ்யகந்தஸர்வாங்கீண விலேபனம் - அகில், குங்குமப்பூ, புனுகு, பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, கோரோசனை முதலான வாசனைப் பொருட்கள் கலந்த உயர்ந்த சந்தனத்தை உடம்பில் பூசுதல்.
15. கேசபாரஸ்ய காலாகருதூபம் - தலை காய்வதற்கும், வாசனைக்கும் தூபமிடுதல்
16. மல்லிகா, மாலதி, ஜாதி, சம்பகா சோக சதபத்ர பூக குஹளி, புன்னாக கல்ஹார முக்யஸர்வர்த்து குஸுமமாலா - மல்லிகை (பிச்சகம்-பிச்சி), மாலதி, சம்பகம், அசோகம் தாமரை, பாக்குப் பூ, குஹளி (வாழைப்பூவில் இருக்கும் கேஸரம்) புன்னைப்பூ, செங்கழுநீர், ஆறுருதுக்களிலும் உண்டானவையாவும் வாசனையாயும் இருக்கும் மலர்களால் கட்டப்பட்ட மாலைகள்.
17. பூஷண மண்டபப்ரவேசனம் - நகைகள் அணிவதற்காக உள்ள அறையில் செல்லுதல்
18. பூஷண மண்டமணிபீடோபவேசனம் - முன்கூறிய அறையில் ரத்னபீடத்தில் இருத்தல்.
19. நவமணிமகுடம் -புதிதான ரத்ன கிரீடம் அணிதல்.
20. சந்த்ர சகலம் - சந்த்ர கலை.
21. ஸீமந்தஸிந்தூரம் - வகிட்டில் சிந்தூரம் வைத்தல்
22. திலகரத்னம் - நெற்றிப்பொட்டில் வைக்கும் ரத்னம்.
23. காலாஞ்ஜனம் - கறுப்பு மை.
24. வாளீயுகளம் - காதுகளில் அணியும் வாளி என்ற நகை (ஜிமிக்கி என்பர் இப்போது)
25. மணிகுண்டலயுகளம் - ரத்ன குண்டலங்கள்.
26. நாஸாபரணம் - மூக்குத்தி - புல்லாக்கு.
27. அதரயாவகம் - உதட்டின் சிவப்புசாயம்
28. ப்ரதமபூஷணம் - மாங்கல்யம்.
29. கனகசிந்தாகம் - தங்கமயமான புளியிலை போன்ற நகை.
30. பதகம் - பதக்கம்
31. மஹாபதகம் - நவரத்னங்கள் இழைத்த ஸ்ரீ சக்ரம்(பெரியோர் கூற்று)
32. முக்தாவலி - முத்துமாலை.
33. ஏகாவளி - ஒருவடமாலை (நக்ஷ்த்ர மாலை)
34. ச்சன்னவீரம் - ஒரு ஆபரண விசேஷம்.
35. கேயூரயுகளசதுஷ்டயம் - ஒவ்வொருகையிலும் இரண்டிரண்டு தோள் வளைகள்.
36. வலயாவளி - வளைகள்.
37. ஊர்மிகாவளி - மோதிரங்கள்.
38. காஞ்சீதாம - ஒட்டியாணம்.
39. கடிஸூத்ரம் - அரைஞாண்கயிறு.
40. ஸௌபாக்யாபரணம் - அரை மூடி (அரசிலை).
41. பாதகடகம் - கால்காப்பு.
42. ரத்னநூபுரம் - ரத்னமயமான கொலுசு
43. பாதாங்குளீயகம் - கால்மெட்டி.
44. ஏககரேபாசம் - ஓர்கையில் பாசக்கயிறு.
45. அன்யகரேஅங்குசம் - மற்றொருகையில் தொரட்டி
46. இதரகரேபுண்ட்ரேக்ஷுசாபம் - வேறொருகையில் நாமக்கரும்பு.
47.அபரகரேபுஷ்பபாணம் -மற்றொருகையில் புஷ்பபாணங்கள்.
48. ஸ்ரீமன்மாணிக்க பாதுகே - ரத்னமயமான மிதியடிகள்.
49. ஸ்வஸமான வேஷாபிஃ ஆவரணதேவதாபி: ஸஹ மஹா சக்ராதிரோஹணம் - தன்னைப் போலவே இருக்கும் ரூபத்துடன் கூடின ஆவரண தேவதைகளுடன் மஹாசக்ரத்தில் ஏறி இருத்தல்.
50. காமேஸ்வராங்கபர்யங்கோபவேசனம் - காமேச்வரனுடைய இடது பாகமாகிற கட்டிலில் இருத்தல்.
51. அம்ருதாஸவ சஷகம் - பானம் செய்யும் அம்ருதத்தோடு கூடிய பாத்திரம்.
52. ஆசமனீயம் - ஆசமனம்.
53. கற்பூர வீடிகா - பச்சை கற்பூரம் சேர்ந்த பாக்குடன்கூடின பீடா (செய்விதம்- ஏலக்காய், லவங்கம், பச்சை கற்பூரம், கஸ்தூரி, பாக்கு, கொப்பரை, திப்பிலி, சுக்கு, கருங்காலி, இவைகளின் பொடிகளுடன் சுண்ணாம்பு சேர்த்த வெற்றிலையை மேருபோல் செய்வது.)
54. ஆனந்தோல்லாஸவிலாஸஹாஸம் - ஆனந்த களிப்பில் ஏற்பட்ட சிரிப்பு
55. மங்களாரார்த்திகம் - தங்கம்முதலான பாத்திரங்களில் ஏற்றும் மாவிளக்கு தீபம்.
56. சத்ரம் - குடை.
57. சாமரயுகளம் - இரண்டு வெண்சாமரங்கள்.
58. தர்பணம் - கண்ணாடி.
59. தாளவ்ருந்தம் - விசிறி.
60. கந்தம் - சந்தணம்.
61. புஷ்பம் - பூ
62. தூபம் - சாம்பிராணி தூபம்
63. தீபம் - நெய் தீபம்.
64. நைவேத்யம் - நிவேதனம்.