வடமொழி இந்து இலக்கியங்களில் தர்மம் குறித்து இடம் பெற்றிருக்கின்றன. வேதங்களில் தர்மத்தின் மூலமாய் அமைந்த சுருதிகளை அடிப்படையாகக் கொண்டு சமயக் கடமை, தத்துவங்களைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதப்பெற்றவையேத் தர்மசாத்திரங்கள். இவை மனித வாழ்வுக்குரிய நீதி நியாயங்களை விதிகளாக விளக்கும் நூல் என்றும் பொருள் கொள்ளப்படுகின்றன.
தர்மசாத்திரங்களுள் குறிப்பிடத்தக்கவைகளாக இருப்பவை;
1. மனுதரும சாத்திரம்
2. ஆபஸ்தம்ப தர்மசூத்திரம்
3. விதுர நீதி
4. ஆசாரக்கோவை
5. கௌதம சூத்திரம்
6. விஷ்ணு தர்ம சூத்திரம்
7. போதாயன தர்ம சூத்திரம்
8. நாரத ஸ்மிருதி
9. சுக்கிர நீதி
10. காமாண்டக நீதி சாரம்
11. பிரகஸ்பதி ஸ்மிருதி
12. ஆங்கிரச ஸ்மிருதி
13. வியாச ஸ்மிருதி
14. தக்ஷ ஸ்மிருதி
15. யாக்யவல்க்கிய ஸ்மிருதி
16. சம்வர்த்த ஸ்மிருதி
17. அத்ரி ஸ்மிருதி
18. காத்யாயன ஸ்மிருதி
19. எம ஸ்மிருதி
20. வசிஷ்ட தர்ம சூத்திரம்
21. சங்க ஸ்மிருதி
22. லகு ஹாரித ஸ்மிருதி