இந்து சமயக் கோயில்களில் திருவிழாக் காலங்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்காகக் கோயிலுக்கு வெளியேக் கொண்டு செல்லப்படும் இறை உருவம் உற்சவர் என்றழைக்கப்படுகிறது. இந்த உற்சவரைக் கொண்டு செல்லப் பயன்படுத்தும் வாகனங்களை உற்சவ வாகனங்கள் என்றழைக்கின்றனர்.
இந்த வாகனங்கள் மரத்தினால் செய்யப்படுகின்றன. சில கோயில்களில் மரத்தினால் ஆன வாகனங்கள் மேல் வெள்ளி, தங்க தகடுகள் பதித்துள்ளனர். இந்த வாகனங்களை இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாக்க கோயிலில் வாகன மண்டபம் என்ற பகுதியில் தனித்து வைக்கின்றனர்.
இந்து சமயத்தில் ஒவ்வொரு இறைவனுக்கும் தனித்த வாகனம் இருக்கிறது. அவைகளில் சில;
1. அதிகார நந்தி வாகனம்
2. அனுமந்த வாகனம்
3. ஆடு வாகனம்
4. கண்ட பேரண்ட பட்சி வாகனம்
5. கந்தர்வ வாகனம்
6. கருட வாகனம்
7. கல்பவிருட்சம் வாகனம்
8. காக்கை வாகனம்
9. காமதேனு வாகனம்
10. கிளி வாகனம்
11. குதிரை வாகனம்
12. கைலாச வாகனம்
13. கோவர்த்தனகிரி வாகனம்
14. சந்திரப் பிரபை வாகனம்
15. சிம்ம வாகனம்
16. சூரியப் பிரபை வாகனம்
17. சேஷ வாகனம்
18. தாரகாசுர வாகனம்
19. திருப்புளி ஆழ்வார் வாகனம்
20. நரகாசுர வாகனம்
21. பத்ம வாகனம்
22. புருசா மிருக வாகனம்
23. புலி வாகனம்
24. புன்னை மர வாகனம்
25. பூத வாகனம்
26. மயில் வாகனம்
27. மான் வாகனம்
28. மூஞ்சூறு வாகனம்
29. யாளி வாகனம்
30. யானை வாகனம்
31. ரிஷப வாகனம்
32. ஹம்ச வாகனம்
இவை தவிர, மேலும் சில வீதியுலா வாகனங்களும் இருக்கின்றன. அவை;
33. கண்ணாடி பல்லக்கு
34. ஆளும் பல்லக்கு
35. விமானம்
36. சப்பரம்
37. பல்லக்கு
38. பரங்கி நாற்காலி
39. தேர்
40. கோரதம்