திருநீற்றுக் கொப்பரை என்பது சைவர்கள் தங்கள் இல்லங்களிலும், ஆலயங்களிலும் திருநீறு வைத்துக் கொள்ளும் கொள்கலன் ஆகும். இதனை விபூதிக் கொப்பரை என்கின்றனர்.
இந்து சமயக் கடவுள்களில் வெகு சில கடவுள்கள் இந்த திருநீற்றுக் கொப்பரையைத் தாங்கிய வடிவத்துடன் காணப்படுகின்றன.
\
உதாரணமாக,
* குலசேகரப் பட்டினம் முத்தாரம்மன் இந்தத் திருநீற்றுக் கொப்பரையைத் தாங்கியபடி உள்ளார்.
* மதுரை வடக்குவாசல் செல்லத்தம்மனும் இந்தத் திருநீற்றுக் கொப்பரையை இடக்கையில் வைத்துள்ளார்.
சிவ பக்தர்கள் கோயில்களுக்குத் தானமாகத் தருகின்ற பொருட்களில் இதுவும் ஒன்றாகும்.
சைவ சன்னியாசிகளுக்கும், பரதேசிகளுக்கும் இந்த திருநீற்றுக் கொப்பரையைத் தானமாகத் தருவர்.