முப்பத்தி மூன்று தேவர்கள் எனப்படுபவர்கள் வேதகால ஆரிய மக்களின் தேவர்களாவர். 12 ஆதித்தியர்கள், 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகியோரைச் சேர்த்து மொத்தம் முப்பத்தி மூன்று தேவர்கள் என ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முப்பத்தி மூன்று தேவர்களைத் தற்போது முப்பத்தி முக்கோடி தேவர்கள் எனச் சொல்கின்றனர்.
பன்னிரு ஆதித்தியர்கள்
1. வருணன்
2. மித்திரா
3. ஆர்யமான்
4. பாகன்
5. யமன்
6. அம்சன்
7. துவஷ்டா
8. பூஷண்
9. சூரிய தேவன்
10. சாவித்தர்
11. இந்திரன்
12. விஷ்ணு
பதினோரு ருத்திரர்கள்
1. ஆனந்தம் (பேரின்பம்)
2. விஞ்ஞானம் (பகுத்தறிவு)
3. மனம் (எண்ணங்கள்)
4. பிராணன் (மூச்சுக் காற்று அல்லது வாழ்க்கை)
5. வாக் (நா வன்மை)
6. ஈசானன் (உலகை ஆட்சி செய்பவர்)
7. தத்புருஷம் (பரம் பொருள்)
8. அகோரர் (கோபமற்றவர்)
9. வாமதேவம் (அமைதியானவர்)
10. சத்யோஜாதம் (நினைத்தவுடன் பிறப்பவர்)
11. ஆத்மன்
எட்டு வசுக்கள்
கீழ்க்காணும் இயற்கைப் பொருட்களை ஆள்பவர்கள் வசுக்கள் எனப்படுகின்றனர்.
1. புவி
2. அக்னி
3. ஆகாயாம்
4. நீர்
5. காற்று
6. சூரியன்
7. நட்சத்திரங்கள்
8. சந்திரன்