வேதாந்த சாத்திரங்கள் கூறும் இல்லற தருமம், சமூக தருமம், இராஷ்டிர தருமம், மானவ தருமம் ஆகிய தருமங்களில் தனி மனிதன் கடைபிடிக்க வேண்டிய வியக்தி தருமங்கள் பின்வருமாறு:
தம - புற உறுப்புகளை அடக்கி ஆள்வது
சம - அக உறுப்புகளை அடக்கி ஆள்வது
அகிம்சை - எவ்வுயிருக்கும் தீங்கு இழைக்காமல் இருத்தல்
வாய்மை அல்லது சத்தியம் - மனதாலும் செயலாலும் வாய்மையைக் கடைப்பிடித்தல்
பிரம்மச்சரியம் - உடல் தொடர்பான ஆசைகளையும் உணர்ச்சிகளையும் அடக்குதல்
அக்ரோதா - கோபப்படாதிருத்தல்
மகிழ்ச்சி - மனநிறைவு, மனத்திருப்தி
தியாகம் - தன்னலத்தைத் துறத்தல்
அபைஷுண - புறங்கூறாமை, இழித்துப் பேசாது இருத்தல்
அலோலுப்த்வ - பேராசைப்படாதிருத்தல்
அபரிக்கிரகம் - பிறரிடமிருந்து தேவையற்ற வெகுமதிகளைப் பெறாதிருத்தல்
ஹ்ரீ - அடக்கத்துடன் இருத்தல்
மார்தவ - மென்மையுடன் இருத்தல்
தயா - கருணையுடன் இரக்கத்துடனும் இருத்தல்
சாந்தி - மனதை அடக்கி அதனால் உண்டாகும் மன அமைதி
க்ஷமா - மன்னிக்கும் தன்மை
சௌசம் - உடல் மற்றும் மனதை தூய்மையாக வைத்திருத்தல்
அத்ரோஹ - தீங்கு செய்யும் எண்ணம் இல்லாதிருத்தல்