வாத்சாயனர் தனது நியாயசூத்திர பாஷ்யத்தில் மூன்று வகையான தர்மங்களைக் குறிப்பிடுகிறார். அவை;
1. உடல் தர்மம் (உடலால் ஆற்றவேண்டிய அறம்)
அ) தானம் - தேவைப்படுவோருக்குத் தானம் தருதல்
ஆ) துயர்துடைப்பு - துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்து அவர்களின் கண்ணீரைத் துடைத்தல்
இ) சேவை - சக மக்களுக்கும் உலக உயிர்களுக்கும் சேவை செய்தல்
2. மன தர்மம் (மனத்தால் கடைப்பிடிக்கவேண்டிய அறம்)
அ) கருணை - உயிர்களிடம் கருணை கொள்தல்
ஆ) திருப்தி - தன்னிடம் இருப்பதைக் கொண்டு மனநிறைவு கொள்தல்
இ) இறைநம்பிக்கை - இறைவனைப் பற்றிய நம்பிக்கை மனதில் நிலைத்திருத்தல்
3. வாக்கு தர்மம் (வாய்ச்சொற்களால் கடைப்பிடிக்கவேண்டிய அறம்)
அ) உண்மை - ஒன்றைப்பற்றி தீர விசாரித்து மெய்யென அறிந்தபின் பேசுதல்
ஆ) இனிமை - கசப்பான கடுஞ்சொற்களைத் தவிர்த்துவிட்டு இனிய சொற்களைப் பேசுதல்
இ) பணிவு - எல்லோரிடமும் மரியாதையுடன், பணிவாகப் பேசுதல்