1. கடவுளின் வெளிப்படாத உண்மைப் பொருள்
சிவனடியார்கள் அனைவரும் சிவபெருமானேக் கடவுள் என்றும், அவரின் முழுமுதற்பொருளான பரசிவம் காலம், உருவம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கிறது என்றும் நம்புகின்றனர். “அது இதுவல்ல. அது அதுவல்ல” என்று யோகிகள் மௌனமாக வியக்கின்றனர். ஆம் அத்தகைய அறியொணா கடவுள்தான் சிவபெருமான்.
2. கடவுளின் வெளிப்படும் தன்மையாம் யாவற்றிலும் அன்பு வடிவாய் பரவி நிற்பது
சிவனடியார்கள் அனைவரும் சிவபெருமானேக் கடவுள் என்றும், அவரின் உள்ளார்ந்த இயல்பான அன்பே பராசக்தி என்றும், அதுவே ஆதாரத்தளமாக மூலப்பொருளாக அல்லது தூய மெய்யுணர்வாக அனைத்து வடிவங்களோடும் சக்தியாக, உள்பொருளாக, அறிவாக, பேரின்பமாகப் பரவி நிற்கிறது என்றும் நம்புகின்றனர்.
3. கடவுளே ஈஷ்வரன், அவரே அனைத்தையும் படைப்பவர்
சிவனடியார்கள் அனைவரும் சிவபெருமானேக் கடவுள் என்றும் அவரின் உள்ளார்ந்த இயல்பு பரமான்மா என்றும், அவர் தேவதேவ மகாதேவர் பரமேஷ்வரர் என்றும், அவரே வேத ஆகமங்களை அருளியவர் என்றும், பொருள்கள் அனைத்தையும் அவரேப் படைக்கிறார், காக்கிறார், அழிக்கிறார் என்றும் நம்புகின்றனர்.
4. யானை முக மூர்த்தி
சிவனடியார்கள் அனைவரும் எந்த வழிபாட்டையும் அல்லது எக்காரியத்தையும் தொடங்குவதற்கு முன் சிவசக்தி மைந்தனான மகாதேவர் கணேசப்பெருமானை வணங்க வேண்டும் என்று நம்புகின்றனர். அவரின் ஆட்சி இரக்கமிக்கது, அவரின் சட்டநீதி நேர்மையானது. நியாயமே அவரின் மனம்.
5. கார்த்திகேயன் (முருக) மூர்த்தி
சிவனடியார்கள் அனைவரும் சிவசக்தி மைந்தன் மகாதேவர் கார்த்திகேயனை (முருகனை) நம்புகின்றனர். அவரின் திருக்கை வேல் அறியாமை என்னும் தளையை நீக்குகின்றது. பத்மாசனத்தில் (அமர்ந்திருக்கும்) யோகிகள் முருகனை வணங்குகின்றனர். மனம் அடங்கிப் போவதால் அது அமைதியாகிறது.
6. ஆன்மாவின் படைப்பும் கடவுளுடன் அதன் ஒற்றுமையும்
நம் ஒவ்வொருவரின் ஆன்மாவும் சிவபெருமானால் படைக்கப்படுகின்றது என்றும், அது சிவபெருமானை ஒத்திருக்கிறது என்றும், இந்த ஒற்றுமையை எல்லா ஆன்மாக்களும் சிவபெருமானின் அருளால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய தளைகள் நீங்கியபின் முழுமையாய் உணரமுடியும் என்றும் நம்புகின்றனர்.
7. பருமையான, நுண்ணிய, காரண உலகங்களின் இருப்பு
சிவனடியார்கள் அனைவரும் மூன்று உலகங்கள் இருப்பதாக நம்புகின்றனர். ஆன்மாக்கள் தூல உடம்பெடுக்கும் பருமை உலகத்தையும், ஆன்மாக்கள் நுண்ணிய உடம்பெடுக்கும் நுண்ணிய (சூக்கும) லோகத்தையும், அன்மாக்கள் சுயஞ்சோதியாய் இருக்கும் காரண லோகத்தையும் அவர்கள் நம்புகின்றனர்.
8. கன்மம், சம்சாரம் மற்றும் மீண்டும் பிறக்காமல் விடுதலையடைவது
சிவனடியார்கள் அனைவரும் வினைக் கொள்கையை நம்புகின்றனர். ஒருவர் ஏற்படுத்திய எல்லா வினைகளின் பலனையும் ஒருவர் அனுபவித்தே ஆகவேண்டும் என்றும், எல்லா வினைகளும் தீர்ந்து மோட்சம் என்னும் விடுதலை அடையும்வரை, ஒவ்வொரு ஆன்மாவும் தொடர்ந்து மறுபிறவிகள் எடுக்கின்றன என்றும் நம்புகின்றனர்.
9. மனத்தளவில் முன்னேறிச் செல்லும் நான்கு நெறிகள்
சிவனடியார்கள் அனைவரும் ஞானம் என்னும் பேரறிவை வெளிப்படுத்த சரியை என்னும் செந்நெறி வாழ்வியலும், கிரியை என்னும் ஆலய வழிபாடும், யோகம் என்ற பரசிவ நிலைக்கு இட்டுச்செல்லும் உயிர்வாழும் குருவின் அருளும், மிகவும் அவசியம் என நம்புகின்றனர்.
10. எல்லாமே நல்லது
சிவனடியார்கள் அனைவரும் உள்ளார்ந்த தீமை இல்லையென்று நம்புகின்றனர். அறியாமையினால் தீமைக்குத் தோற்றுவாய் இருக்கிறது என்று தோன்றினாலும், தீமைக்கு (உண்மையில்) தோற்றுவாய் இல்லை. கடைசியில் நன்மையும் இல்லை தீமையும் இல்லை என்று தெரிந்து கொண்டு அவர்கள் இரக்கமிக்கவர்களாக இருக்கின்றனர். எல்லாம் சிவ சித்தம்.
11. ஆலய வழிபாட்டின் அருள்ஞான நோக்கம்
மூவுலகங்களின் ஒருசார்ந்த நல்லிணக்க உறவே சமயம் என்றும், ஆலய வழிபாட்டின்மூலம் இந்த நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் என்றும், மூவுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஆலயத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள இயலும் என்றும் சிவனடியார்கள் அனைவரும் நம்புகின்றனர்.
12. பஞ்சாட்சரம் (மந்திரம்)
சிவனடியார்கள் அனைவரும் புனிதமான ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை, ஐந்தெழுத்து மந்திரத்தை, சைவ சமயத்தின் மிகவும் உன்னதமான முக்கியமான மந்திரம் என்று நம்புகின்றனர். நமசிவாய மந்திரத்தின் ரகசியம் யாதெனில், அதனை சரியான (குருவின்) உதட்டிலிருந்து சரியான நேரத்தில் கேட்பதே.