எட்டுக் குணங்கள். இவை நல்லவை தீயவை என இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
எண்குணம் நல்லவை
இவை இறைவனின் அருட்குணங்கள் எனப்படுகின்றன. அவை;
1. தன்வயனாதல்
2. துய உடம்பினனாதல்
3. இயற்கை உணர்வினனாதல்
4. முற்று முணர்தல்
5. இயல்பாகவே பாசங்களை நீக்குதல்
6. பேரருள் உடைமை
7. முடிவிலா ஆற்றல் உடைமை
8. வரம்பில் இன்பமுடைமை (பேரின்பம்)
எண்குணம் தீயவை
இவை உயிரின் எட்டுக் குற்றங்கள் எனப்படுகின்றன. அவை;
1. சுதந்திரமில்லாமை
2. தூய உடம்பில்லாமை
3. இயற்கை உணர்வில்லாமை
4. பேரருள் இல்லாமை
5. முடிவிலாற்றல் இல்லாமை
6. முற்றும் உணர்தல் இல்லாமை
7. வரம்பில் இன்பமில்லாமை
8. இயல்பாகவே பாசம் நீங்காமை