அருணாசலக் குருவின் ‘நிஜானந்த போதம்’ என்ற நூலில் தச தீட்சையைப் பற்றிய விவரங்கள் உள்ளன. அவையாவன;
1. உடலிலுள்ள கெட்ட நீர் அனைத்தும் வியர்வையாக வெளியேறும்
2. முத்தோசங்களான வாதம், கபம், சிலோத்துமம் நீங்கும்.
3. கெட்ட உதிரங்கள் கசியும்.
4. பாம்பு தோலை உரிப்பதைப் போல, சரீரத்தில் தோல் உரியும்.
5. சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாகும். பஞ்ச மூர்த்திகள் வேண்டியதைத் தருவர், அதாவது, பஞ்ச பூதங்கள் வசத்துக்குள் வரும்.
6. சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறக்கும், தொலைப்பார்வை கிட்டும்.
7. சட்டை வெளுப்பாகக் கழன்று தேகம் தீபம் போல பிரகாசிக்கும்.
8. சடலம் பாரமற்றதாகும், லாகிரி என்ற இன்ப நிலை ஏற்படும். கூடுவிட்டுக் கூடு பாயும் திறம் வாய்க்கும்.
9. தேகம் சூரியப் பிரகாசம் பெறும். அஷ்டமாசித்தி கூடும். செயலற்ற நிலையான கைவல்யம் கிட்டும். தேவர்கள் சேவை புரிவர்.
10. தேகம் தீபம் போலப் பிரகாசிக்கும். அதைக் கத்தியாலும் வெட்ட முடியாது. இதுவே சொரூப சித்தி. அந்த யோகி இவ்வுலகில் மௌன நாளையில் நரை திரை, பிணி, மூப்பு, சாக்காடு இல்லாமல் வாழ்வார்.