வசதி வாய்ப்பு இல்லாதவா்களை 'அன்னக்காவடி' என்று சிலா் இழிவாக பேசும் பழக்கம் உண்டு.
பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் 'அன்னக்காவடி' என்பது தவறான பொருள் தரும் சொல் அல்ல.
'கா' என்றால் காப்பாற்றுதல், 'அடி' என்றால் முருகனின் திருவடி என்று பொருள். காவடி எடுத்தலில் பால்காவடி, பன்னீா்க் காவடி, புஷ்பக் காவடி, சந்தனக் காவடி என்று பல வகைகள் உண்டு. இவற்றில் அன்னக்காவடியும் அடக்கம்.
இந்த அன்னக்காவடிக்கு ஒரு சின்ன வரலாறு உண்டு.
ஒரு காலத்தில் சென்னை இராயபுரத்தில் சாமியப்பக் கவிராயா் என்பவா் வாழ்ந்து வந்தார்.
அவரது பரம்பரையே, கவி பாடுவதில் புலமை பெற்றது. 'கவிராயா்' என்ற பட்டமே அவரின் குடும்பச் சொத்தாகவே இருந்தது.
அவரது மகனான துரைசாமிக் கவிராயா் பழனி முருகனை நினைந்து, மனம் கசிந்துருகி எத்தனையோ பாடல்களைப் பாடியிருக்கிறார்.
அவா் பழனி முருகனின் திருவுருவப் படத்திற்கு தினமும் பக்தியுடன் மலா்மாலை சூட்டி , வழிபாடு செய்வார். தினந்தோறும் யாருக்கேனும் அன்னமிட்ட பிறகே, தாம் உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், அவரது வருமானம் குறைந்தது. ஒரு கட்டத்தில் தன் மனைவியின் திருமாங்கல்யத்தை விற்று, அதனைக் கொண்டு அன்னதானத்தை விடாமல் செய்து வந்தார்.
திடீரென அவரை நோய் வருத்தியது. பழனிமலை முருகன் அவரது துன்பத்தைப் போக்கி அருளினார்.
துரைசாமிக் கவிராயா் பழனி முருகனுக்குக் காவடி எடுத்து வருவதாக பிரார்த்தனை செய்து கொண்டார். என்ன வேண்டுதல் தெரியுமா?
தமக்கு நோய் நீக்கி அருள்பாலித்த ஆறுமுகனுக்கு 'அன்னக்காவடி' சமா்ப்பிப்பதுதான் சரியான நோ்த்திக் கடன் என்பதுதான் அவரது எண்ணம்.
பேருந்து, தொடருந்து வசதி இல்லாத அந்தக் காலத்தில், தோளில் அன்னக்காவடி சுமந்து 45 நாட்கள் பாதயாத்திரைக்குப் பின், வறுமையிலிருந்த அவருக்கு கருணைக் கடவுளான கந்தன் அருள் செய்ய... அன்னக்காவடியின் கலயத்தை கந்தனது சன்னதியில் திறந்தார்.
அதிசயம் என்னே அவனின் திருவிளையாடல்?
ஒன்றரை மாதத்திற்கு முன்பு சமைத்துக் கட்டிய சோற்றிலிருந்து சூடாக ஆவி மேலெழுந்தது.
அதைப் பார்த்த அனைவரது உடலும் சிலிர்த்தே விட்டது. இது எப்படி சாத்தியம்?
ஆம், முருகனின் முழு அருளைப் பெற்றவர்களால் மட்டுமேச் சாத்தியமாகும்.
'மகிமை பொய்யா, மலைக் குழந்தை
வடிவேல் முருகையா'
என்று கவிராயா் பாடத் தொடங்கினார்.