இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

நவ புலியூர்க் கோயில்கள்

உ. தாமரைச்செல்வி


நவ புலியூர்க் கோயில்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள, புலியூர் என்பதோடு தொடர்புடைய ஒன்பது சிவன் கோயில்களாகும். இந்த நவ புலியூர்க் கோயில்கள் குறித்த கதை ஒன்று வழக்கத்திலுள்ளது.

அந்தக் கதை இதுதான்.

ஆதிசேடனும், வியாக்ரபாத முனிவர் எனப்படுகின்ற புலிக்கால் முனிவரும், சிவபெருமானின் கூத்தினைக் காண மிக ஆவல் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் தைப்பூச நாளன்று வந்து தரிசிக்கும்படி சிவபெருமான் கூறினார். மேலும் அவர், அவர்கள் முன்பாக நடனத் தரிசனமும் தந்து அவர்களுக்கு அருளினார். அப்போது வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் மோட்சத்தை வேண்டி சிவனைத் தொழுது நின்றார்கள். அப்போது சிவபெருமான் ஒன்பது புலியூரைத் தரிசித்து, கடைசியாக திருவரங்கத்தில் அவர்களின் புனிதமான கோயில் யாத்திரையை நிறைவு செய்து கொள்ளும்படிக் கூறினார். திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள பெருமாளும், சிதம்பரத்தில் உள்ள நடராஜரும் ஒரே பரம்பொருளின் இரு வடிவங்கள் என்பதை உணர்த்திய யாத்திரை என்றும் இதனைக் கூறுவதுண்டு.


1. பெரும்பற்றப்புலியூர்

இத்தலம் பொற்புலியூர் என்றும் தில்லை என்றும் அழைக்கப்படுகின்ற சிதம்பரம் ஆகும். பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலமாகும். நடராஜருக்குத் தினமும் நடைபெறுகின்ற பூஜைகளில், பதஞ்சலி பூஜை சூத்திரப்படி வைதீக பூஜையும், வியாக்ரபாதர் புஷ்பார்ச்சனை விதிப்படியும் நடைபெற்று வருகிறது. சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்த சபை, ராஜ சபை என்ற ஐந்து சபைகள் இங்கு உள்ளன.

2. திருப்பாதிரிப்புலியூர்

இத்தலம் கடலூர் புது நகர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள நடுநாட்டுத் தலமாகும். பாதிரி மரத்தைத் தல மரமாகக் கொண்டுள்ளதாலும், வியாக்ரபாதர் வழிபட்டதாலும் திருப்பாதிரிப்புலியூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் பாடலீஸ்வரர், இறைவி பெரியநாயகி ஆவர்.

3. எருக்கத்தம்புலியூர்

இது மற்றொரு நடுநாட்டுத் தலம் ஆகும். வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. ராஜேந்திரப் பட்டினம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. வெள்ளெருக்கைத் தல மரமாகக் கொண்டதாலும், வியாக்ரபாதரால் வழிபட்டதாலும் இப்பெயரினைப் பெற்றது. இங்குள்ள இறைவன் நீலகண்டேஸ்வரர், இறைவி நீலமலர்க்கண்ணி. ஞானசம்பந்தருக்கு யாழ் வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவதாரத் தலமான இத்தலத்தில் அவருக்குத் தனியாக ஒரு சன்னதி இருக்கிறது.

4. ஓமாம்புலியூர்

சோழ நாட்டின் வடகரைத் தலம். சிதம்பரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமா தேவிக்குப் பிரணவப் பொருளை உபதேசித்ததாலும், வியாக்ரபாதர் வழிபட்டதாலும் இத்தலம் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி மூல மூர்த்தியாக, சிலை வடிவில் உயர்ந்த பீடத்திலிருந்து அருள் பாலிக்கின்றார். இக்கோயிலில் நடராஜர் இருக்குமிடத்தில் தட்சிணாமூர்த்தியும், தட்சிணாமூர்த்தி இடத்தில் நடராஜரும் உள்ளனர். இறைவன் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர், துயர்தீர்த்த நாதர் என்றழைக்கப்படுகிறார். இறைவி புஷ்பலதாம்பிகை, பூங்கொடிநாயகி என்றழைக்கப்படுகிறார்.


5. சிறுபுலியூர்

மயிலாடுதுறையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள இறைவன் வழித்துணைநாதர், மார்க்கபந்தீஸ்வரர், கங்காளநாதர் என்றவாறு அழைக்கப்படுகின்றார். வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் இந்த ஊரை அடையும் நேரத்தில் இருட்டி விட்டது. சிவபெருமானும், அரங்கப்பெருமாளும் அவர்களுக்குக் காட்சி தந்ததாக் கூறுவர். இங்குள்ள பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்ற பெருமையுடையதாகும். அங்குள்ள மூலவர் அருள்மாகடலமுத பெருமாள் ஆவார். வியாக்ரபாதர் பெருமாளை வணங்கிய நிலையில், அவரது திருவடியின் கீழ் அமர்ந்த நிலையில் உள்ளார்.

6. அத்திப்புலியூர்

கீழ்வேளூருக்கு மேற்கே 5 கி. மீ. தொலைவில் உள்ளது. அத்தி என்றால் யானை என்று பொருளாகும். யானையும், புலியான வியாக்ரபாதரும் வழிபட்டதால் அத்திப்புலியூர் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள மூலவர் சிதம்பரேஸ்வரர், இறைவி சிவகாமசுந்தரி. இத்தலம் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும், அகத்தியருக்கும் திருமணக் காட்சி நல்கிய தலம் என்ற பெருமையுடையது.

7. தப்பளாம்புலியூர்

திருவாரூருக்குத் தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலம் வியாக்ரபாதருக்கும், மண்டூக மகரிஷிக்கும் அருள் தந்த இடமாகும். வியாக்ரபாதரின் புலிக்கால், புலிக்கைத் திருமேனியை நீக்கியதாக வரலாறு கூறுகிறது. பதஞ்சலி, வியாக்ரபாதர், மண்டூக மகரிஷி ஆகிய மூவரும் இறைவனின் நடனக் காட்சியை இங்கு கண்டுகளித்தனர்.


8. பெரும்புலியூர்

திருவையாற்றுக்கு வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலம், வியாக்ரபாதர் வழிபட்ட தலமாகும். இங்குள்ள இறைவன் வியாக்ரபுரீஸ்வரர், இறைவி செளந்தர நாயகி.

9. கானாட்டம்புலியூர்

சிதம்பரத்திற்குத் தென்மேற்கே 30 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தினைச் சிதம்பரத்திலிருந்தும், ஓமாம்புலியூரிலிருந்தும் வந்து அடையலாம். பதஞ்சலி முனிவர் வழிபட்ட இந்தத் தலத்தின் இறைவன் பதஞ்சலிநாதேசுரர், இறைவி கண்ணார்குழலி. வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் தரிசித்த தலமாகும்.

வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் மேற்காணும் ஒன்பது புலியூர்களையும் தரிசித்தனர். அதற்குப் பின்னர் அவர்கள் இருவரும் திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதரைத் தரிசித்துவிட்டு, பின்னர், திருப்பட்டூர் சென்று அங்குள்ள பிரம்மபுரீஸ்வரரையும், பிரம்மாவையும் வணங்கி ஜீவ சமாதி அடைந்ததாகக் கூறுவர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p922.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License