சோடச இலட்சுமி என்பவர்கள் பதினாறு வகையான இலட்சுமிகளாவர். சோடச என்றால் 16 என்று பொருளாகும். அட்ட இலட்சுமிகள் என்பவர்கள் எட்டு வகையான இலட்சுமிகளாவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு தலைகள் உள்ளன. அதனால் ஒவ்வொரு தலையையும் ஒரு இலட்சுமி என்ற வகையில் இந்த பதினாறு இலட்சுமிகள் கூறப்படுகிறார்கள்.
திருவரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள அட்டலட்சுமி மண்டபத்தில் இந்த பதினாறு இலட்சுமிகளும் சுதை சிற்பமாக உள்ளனர்.
1. தனலட்சுமி
2. தான்யலட்சுமி
3. வித்யாலட்சுமி
4. வீரலட்சுமி
5. சௌபாக்யலட்சுமி
6. சந்தானலட்சுமி
7. காருண்யலட்சுமி
8. மஹாலட்சுமி
9. சாந்திலட்சுமி
10. கீர்த்திலட்சுமி
11. சாயாலட்சுமி
12. ஆரோக்கியலட்சுமி
13. த்ருஷ்ணாலட்சுமி
14. சாந்தலட்சுமி
15. விஜயலட்சுமி
16. சக்திலட்சுமி
பதினாறு வகையான இலட்சுமிகளை வழிபடுதலை சோடச மகாலட்சு விரதம் என்று அழைக்கின்றனர். வளர்பிறை அஷ்டமியிலிருந்து தொடர்ந்து 16 நாட்கள் ஒவ்வொரு இலட்சுயையும் வழிபடுகின்றனர். சிலர் இரண்டு நாட்களுக்கு ஒரு அட்ட லட்சுமியை எடுத்துப் பூசை செய்வதும் உண்டு. இந்த வழிபாட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.