சிங்க வடிவத்தினைக் கொண்டு அமைந்த புனிதக் கிணறும், தீர்த்தம் ஆகியன தமிழகத்தின் பல பாகங்களிலும் உள்ள திருக்கோயில்களில் அமைந்திருக்கின்றன.
இவ்வகைக் கிணறுகளை, சிம்மக்குளம் என்றழைப்பர். திருவிடைமருதூர், கங்கைகொண்ட சோழபுரம், மகாபலிபுரம், பேரூர், விரிஞ்சிபுரம் போன்ற இடங்களில் அமைந்துள்ள திருத்தலங்களில் இத்தகு சிம்மக்குளங்கள் காணப்படுகின்றன.
இக்குளங்களில் விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் ஆலயத் திருத்தலத்தினைத் தவிர, ஏனைய திருத்தலங்களில் அமையப்பெற்றிருக்கும் சிம்மக்குளங்களின் புனித நீரானது இறைவனின் திருமஞ்சனத்திற்காக மட்டும் பயன்படுத்தப்படுகின்றது.