இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இசுலாம் சமயம்

ரமலான் நோன்பு


அனைத்து சமுதாயங்களாலும் நோன்பு என்னும் ஓர் ஏர்பாடு பின்பற்றப்படுகின்றது. ஆனால், அது முன்னால் செய்த பாவச் செயல்களுக்காக மன வருத்தமடையும் செயலாகவேயன்றி உணவு, பானம் முதலிய இச்சைகளை அடக்கி இந்தீரியங்களைக் கட்டுப்படுத்தும் முறையாகக் கருதப்படவில்லை.

ஆனால், இசுலாமிய நோன்பு இதற்கு மாற்றமானது. அதாவது இந்தீரிய இச்சைகளிலிருந்து காப்பாற்றி, உடல் உணர்ச்சிகளை ஒரு குறிப்பிட்ட கால அளவில் மட்டும், அதாவது பகல் வேளையில் மட்டும் அடக்கி மிருக உணர்ச்சிகளை நேர்மையான பாதையில் செலுத்துவதே இசுலாமிய நோன்பின் சிறப்பாகும்.

வீணாக உடலைத் துன்புறுத்துவது கண்டிக்கப்பட்டு விலக்கப்பட்டுள்ளது. உடலை அடக்குவதன் மூலம் ஆத்மாவை உயர்த்துவதற்காக உடல் நலமுள்ளோர் மீதும், பலசாலிகள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

ஆனால், பல்வீனர்கள், நோயாளிகள், பிரயாணிகள், ஜிகாதே அக்பர் எனப்படும் அறிவைத் தேடுவதில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், மார்க்க விரோதிகளுடன் அல்லாவுக்காகப் போர் செய்யும் போர் வீரர், நோய்வாய்ப்பட்டுள்ள பெண்கள் ஆகியோருக்கு விதிவிலக்கு செய்யப்பட்டுள்ளது.

மனிதனிடமுள்ள மிருக உணர்ச்சிகளை அடக்குவதற்கு இசுலாமிய நோன்பு அற்புதமாக அமைந்துள்ளது. (அமீர் அலி. ப.169)



நோன்புக் காலம்

முசுலீம் மாதங்களில் ரமலான் மாதம் ஒன்பதாம் சந்திரமான மாதமாகும். அதுதான் நோன்பு நோற்கும் மாதம். திருக்குரான் அருளப்பட்ட மாதமும் அதுதான். அந்த மாதம் முழுமையும் முசுலீம்கள் நோன்பு நோற்க வேண்டும். சூரியோதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை உணவும் பானமும் அகற்றப்பட்டு, ஒவ்வொரு நாளும் தொழுகையிலும், புனிதமான எண்ணங்களிலும் அர்ப்பணிக்க வேண்டும். மேலும், இதே ரமலான் மாதம் ஜகாத் - பித்ரா முதலிய தானங்கள் செய்யும் மாதமாகும்.



நோன்பின் நன்மைகள்

அல்லாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஒரு முசுலீம் நோன்பு நோற்கிறான். பகல் முழுவதும் பட்டினியாக இருப்பதால் உடல் பலவீனமடைகிறது. அதனால் உலக இச்சைகள் குறைகின்றன. எனவே, ஆத்மா வன்மையடைகின்றது. ஆத்மிக உணர்ச்சிகளால் உந்தப்பட்ட நோன்பாளி இறைவனையும், இறைவன் நமக்கு அருளும் நன்மைகளையும் நினைக்கிறான். வேறு விதமான ஆத்மிக அனுகூலங்களையும் பெறுகிறான்.

இதே நோன்பினால் உடலுக்கும் நன்மையுண்டாகின்றது. நோன்பாளி உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருக்கும் பொழுது உடலிலுள்ள நீர் சுரக்கும் உறுப்பு (சுரப்பி) களிலிருந்து உண்டாகும் அமிலங்கள் மனிதனுடைய இரைப்பையிலுள்ள நோய்க் கிருமிகளைக் கொன்று விடுகின்றன. மேலும், கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும் பொழுது அவற்றைப் பொறுத்துக் கொள்ளும் சக்தியை வழக்கம் போல் தன் தினசரி வாழ்க்கையின் கடமைகளைச் செய்யவும் பழகிக் கொள்கிறான்.

இறைவனுடைய அன்பைப் பெறுவதற்காக ஒருவன் நோன்பு நோற்கும் பொழுது அவனுக்கு உடல் சம்பந்தமான நன்மைகளும் கிடைக்காமல் போகவில்லை. ஆண்டவனுக்காகவே ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அது உடல் - ஆத்மா இரண்டிற்கும் பயனுள்ளதாக அமைகின்றது.

இசுலாம் கட்டளையிட்டுள்ள தொழுகை - ஜகாத் -ஹஜ் போன்ற ஆத்மீக அனுஷ்டானங்களும் அப்பியாசங்களும் இதே குறிக்கோளுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒருவன் உலக இச்சைக்காக மட்டும் ஒரு செயலைச் செய்தால் அவன் ஆத்மீகப் பலன் அடைய மாட்டான்.

நோன்பு தனி மனிதனுக்கு மட்டும் உயர்வு தந்து நின்றுவிடவில்லை. உலகிலுள்ள முசுலீம் சமுதாயத்தார் அனைவரும் ஒரே ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று இறையச்சமுள்ளோராக வாழ்க்கை நடத்துவதால், சமுதாய உணர்ச்சியும் தொடர்பும், அன்பும் அனுதாபமும், தரும சிந்தனையும் உண்டாகின்றன. ரமலான் மாதத்தில் பட்டினியிருக்கும் முசுலீம் செல்வந்தர், அதே சமயத்தில் பட்டினியாயிருக்கும் ஏழையின் கஷ்டத்தை உணர முடிகிறது.

இசுலாமியச் செயல்முறைகள் எல்லாம் ஆண்டவனுடைய சொல்லாகிய குர் - ஆனிலிருந்து கட்டளையிடப்பட்டுள்ளன. இசுலாம் என்பது பூரண வாழ்க்கை வழியாதலால் அது இம்மைக்கும் மறுமைக்கும், உடலுக்கும் ஆத்மாவுக்கும் வழி காட்டுகின்றது. எனவே, ஒரு முசுலீம் உலகக் கடமைகளைச் செய்யும் பொழுது, ஆத்மாவுக்கும் அனுகூலம் உண்டாகிறது. அதைப் போன்று ஆத்மிகக் கடமைகளைச் செய்யும் பொழுது உடலுக்கும் பயனுண்டாகிறது.

ரமலான் மாதம் சந்திரமான மாதம். இந்த நோன்பு மாதம், இலையுதிர்க் காலம், குளிர் காலம், வசந்த காலம், கோடை காலம் என்று அனைத்து தட்ப வெப்பநிலைகளிலும் வருவதால் பல மாதிரியான கஷ்டங்களை ஏற்றுக் கொள்ள நோன்பாளி பழகிக் கொள்கிறான். இறைவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இவ்விதமான ஆத்மிகப் பயிற்சியை ஏற்றுக் கொள்கிறான். இதையன்றி, உலக விசயங்களில் உடலுக்காகச் சுகாதார சம்பந்தமான பயிற்சியும், இராணுவப் பயிற்சியும், மனவுறுதியை வளர்க்கும் பயிற்சியும் பெறுகிறான். இறைவனுக்காக ஒருவன் நோன்பு நோற்கும் பொழுது இருலோக பாக்கியங்களையும் பெறுகிறான்.

ஆயுள் முழுமையும் அல்லது ஆண்டு முழுமையும் நோன்பு நோற்கலாகாதென்று நபி பெருமானார் தடுத்துள்ளார்கள். இறைவன் மீது கடமை இருப்பது போன்று, “உங்கள் மீதும் உங்களுக்குக் கடமை இருக்கின்றது” எனக் கூறியுள்ளார்கள். ரமலான் மாத கடமையாக்கப்பட்ட நோன்பையன்றி தேவைக்கு மேற்பட்ட தொழுகை தொழலாம். ஆனால், இந்த விருப்பத் தொழுகை ஒரே தடவையில் இரண்டு நாட்களுக்கு அதிகமாகத் தொழலாகாதெனவும் பெருமானார் போதித்துள்ளார்கள். நாற்பது நாட்களுக்கு அதிகமாக நோன்பு நோற்றால் அது வழக்கமான ஒரு செயலாகி, உடலுக்குப் பயன் தருவதில்லை என்று மருத்துவர்கள் கூட கூறுகிறார்கள்.

இசுலாம் மாதத்தில் தொழுகை, நோன்பு, ஜகாத், தீமையிலிருந்து விலகியிருத்தல் முதலிய புறக்கடமைகளும், இறைநம்பிக்கை, இறைவனுக்கு நன்றி செலுத்தல், நேர்மை, கர்வமின்மை முதலிய அகக்கடமைகளும் உள்ளன. ஆனால், புறக்கடமைகளும் ஆத்மாவைத் தூய்மையாக்கவே ஏற்படுத்தப்பட்டுள்ளன.



நோன்பின் சன்மானம்

நோன்பு நோற்கும் ஆண்களும், நோன்பு நோற்கும் பெண்களும் அவர்களுக்காக மன்னிப்பையும், மேலான சன்மானத்தையும் அல்லா ஆயத்தமாக்கி வைத்திருக்கிறான். (அஹ்ஸாப் - 33:35)

-சையித் இப்ராஹிம் தொகுத்த "குர் ஆன் போதனைகள்" நூலிலிருந்து கணேஷ் அரவிந்த்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/islam/p5.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License