இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
பிற சமயங்கள் & பிற கருத்துகள்

மனித வாழ்க்கையும் சக்ராக்களும்

ரங்கநாயகி


சக்ராக்கள் ஏழு வகையானது. இந்த ஏழு சக்ராக்கள் மனிதனுக்கு அரிய சக்தியை அதாவது ஆற்றல், அறிவு, விவேகம், பொறுமை, சாந்தம் போன்ற குணங்களைக் கொடுக்கிறது. சக்ராக்கள் மனிதனுடைய இயல்பை அதாவது தன்மையை குறிக்கிறது. ஸ்ரீசக்ரா ஏழு சக்ராக்களையும் ஒன்றாக இணைத்து இயக்குகிறது. ஏழு சக்ராக்கள் ஏழு கிரகங்களின் குணங்களை எடுத்துக் காட்டுகிறது. மூலதாரா, ஸ்வாதிஷ்தனா, மணிபுரா, அநாஹாடா, விசுத்தி, ஆஜனா, ஸஹஸ்ராரா என்று ஏழு வகைகளாக சக்ராக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. பிறவி எடுத்தவுடன் மனிதனின் மனமும் மூளையும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த மூளை தெரியாதவொன்றை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறது. மனிதனுக்கு சிந்தனை அறிவை வளர்க்க சக்ராக்கள் பெரிதும் உதவி புரிகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் சக்ராக்களின் குணங்களை கிரகங்களின் இயல்போடு ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. அன்றைய ஜோதிடம் செவ்வாய் கிரகம் சிவப்பாகவும், சனி கிரகம் கருப்பாகவும் அல்லது நீலமாகவும் காட்சி தருகிறது என்று சொல்லுகிறது. சூரிய குடும்பம் ஒன்பது கிரங்களை கொண்டது. அவற்றுள் ஏழு கிரகங்கள் மனிதனுக்கு நல்ல பலன்கள் அல்லது கெட்ட பலன்களைக் கொடுக்கிறது.

அது போல எண்களுக்குள் ஏழாம் எண் மிகவும் விந்தையானது. இந்த எண் எதையும் யூகிக்க முடியாத நிலையையும், எதையும் சுலபமாகப் பெற முடியாத தன்மையைக் கொண்டது. ஏழு கிரகங்கள் மனிதனுக்குப் போராட்டமான வாழ்க்கையை கொடுக்கிறது. ஏழு கிரகங்கள், ஏழு கடல்கள், ஏழு காண்டங்கள், வானவில்லின் ஏழு நிறங்கள், ஏழு மலைகளுடைய ஏழுமலைவாசா, பைபிளில் கூறப்படும் ஏழு தேவாலயங்கள், எகிப்து புராணம் சொல்லும் ஏழு தேவதைகள், உலக ஏழு அதிசயங்கள், ஏழு நாட்கள் என்று ஏழாம் எண்ணின் குணங்களைப் பற்றி புராணங்கள் சொல்லுகிறது.

மூளை இடை விடாது செயல்படுவதால் மனிதனுக்கு மன அழுத்தம் உருவாகிறது. இதற்கு தியானம், யோகா, ரெய்கி போன்ற வழிகளை மேற்கொள்ளலாம். தோன்றும் எண்ணம், நிகழும் சம்பவம், கேட்கும் ஒலி அனைத்தையும் மறந்து மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யும் தியானம் முதல் வகையானது. பொதுவாக எழும்பும் அதிர்வால் மனிதன் விழிப்புணர்வை உருவாக்கி செய்யும் தியானம் இரண்டாவது வகையானது. தியானத்தை மேற்கொள்வதற்கு ஏழு சக்ராக்கள் பெரிதும் உதவுகிறது.



ஏதோ ஒரு சக்தி இந்த உலகத்தை இயக்க வைக்கிறது. ஏதோ ஒரு அணுசக்தி உலகில் வாழும் உயிரினங்களை வாழ வைக்கிறது. காலச்சக்ராக்கள் மூலம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். இந்த சக்தி ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் போது புதிய சூழ்நிலையை உருவாக்குகிறது. பூமியிலுள்ள தகடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதால் பூகம்பம் ஏற்படுகிறது, மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதால் புயல் அடிக்கிறது, கடல் அடியிலுள்ள மலைகள் மோதிக் கொள்வதால் கடல் கொந்தளிக்கிறது. புயற்காற்று வட்டமான பாதையையும், பூகம்பம் விரிவான பாதையையும், கடல் கொந்தளிப்பு உயரமான பாதையையும் அமைத்துக் கொண்டு தோன்றுகின்றன. அது போல ஏழு சக்ராக்கள் மனித உடலில் ஒரு சக்தியை உருவாக்குகிறது. இந்த சக்தி மனிதனுக்கு புதிய சூழ்நிலையை கொடுக்கிறது. புதிய சூழ்நிலையே மனித வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைகிறது.

மனித உடலில் இடம் பெற்றுள்ள சக்ராக்கள் ஒவ்வொன்றும் அரிய சக்தியை கொடுக்கிறது. ஒவ்வொரு சக்ராவும் ஒவ்வொரு கிரகத்தின் தன்மையை கொண்டது. ஒரு முழுமையான சக்ரா பல ஆயிரக்கணக்கான சக்ராக்களையும், பல்லாயிரக்கணக்கான நாடிகளையும் கொண்டது. இந்த சக்ராவானது உள்ளுக்குள்ளேயே சக்தியை உருவாக்கி, விழிப்புணர்வைக் கொடுத்து சுற்றி நிகழும் சம்பவங்களை பற்றி ஆராய்ந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்துகிறது. ஏழு சக்ராக்களில் முதல் சக்ரா மூலதாரா சக்ரா என்று சொல்லலாம்.

மூலதாரா சக்ரா

‘ல’ என்ற அக்ஷரத்தைக் கொண்ட இந்த சக்ரா சூரியனைக் குறிப்பிடுகிறது. மரத்துடைய வேரைப் போல மூலதாரா சக்ரா மனித உடலில் வலிமையான அஸ்திவாரத்தை உருவாக்குகிறது. இந்த சக்ரா மற்ற சக்ராக்களுக்கு சக்தியைக் கொடுக்கிறது. சூரியன் உலகத்திற்கு வெப்பத்தை கொடுப்பது போல மூலதாரா சக்ரா உடலுக்கு வெப்பத்தை கொடுக்கிறது. தேவையான வெப்பத்தை ஏற்றுக் கொண்டு மற்றவையை ஆசன வாயின் வழியாக வெளியேற்றுகிறது. மூலதாரா சக்ரா மனித உடலில் ஆசன வாயை இடமாக அமைத்துக் கொண்டுள்ளது.

ஸ்வாதிஷ்தனா சக்ரா

மனிதனுக்கு காம உணர்வுகளை கொடுக்கிறது. இந்த சக்ரா இன்னொரு ஜீவனை படைக்க வல்லமை பெற்றது. ஆதனால் இந்த சக்ரா உடலில் கர்ப்பப் பகுதியை தனது இடமாக அமைத்துக் கொண்டுள்ளது. இந்த சக்ரா சுக்ர கிரகத்தின் குணத்தைக் கொண்டது. மனிதனின் ஜாதகத்தில் சுக்ரன் நீசம் பெற்றிருந்தால் கெட்ட சகவாசத்தையும், அது போல உச்சம் பெற்றிருந்தால் அனைத்து சுக போகங்களையும் வாரி வழகுகிறது. அது போல இந்த சக்ரா மனிதனுடைய காம இச்சைகளைப் பூர்த்தி செய்கிறது.

மணிபுரா சக்ரா

‘ர’ என்ற அக்ஷரத்தை கொண்ட இந்த சக்ரா உடலில் தொப்புள் கீழேயும் கணையத்தின் முன் பகுதியிலும் இடம் பெற்றுள்ளது.ஜோதிட சாஸ்திரத்தில் இந்த சக்ராவை புதன் கிரகத்தோடு ஒப்பிட்டு எழுதப் பட்டுள்ளது. உச்சம் பெற்ற புதன் மனிதனுக்கு சிறந்த படிப்பையும் அறிவாற்றலையும் கொடுக்கிறது. அது போல இந்த சக்ராவும் மனிதனுக்கு அறிவையும், ஆற்றலையும் கொடுக்கிறது.



அநாஹாடா சக்ரா

‘ய’ என்ற அக்ஷரத்தை கொண்ட இந்த சக்ரா உடலில் இருதயத்தை தனது இடமாக அமைத்துக் கொண்டுள்ளது. மேலே இடம் பெற்றுள்ள மூன்று சக்ராக்களுக்கும், கீழே இடம் பெற்றுள்ள மூன்று சக்ராக்களுக்கும் நடுவில் இடம் பெற்றுள்ள அநாஹாடா சக்ரா அனைத்து உறுப்புகளையும் இயங்க வைக்கிறது. ஜோதிட வழியாக இந்த சக்ரா சந்திர கிரகத்தோடு ஒப்பிட்டு பேசப்படுகிறது. மனித வாழ்க்கையின் வளமான வளர்ச்சிக்கு இந்த சந்திர கிரகம் உதவுவதைப் போல அநாஹாடா சக்ரா ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொடுக்கிறது.

விசுத்தி சக்ரா

‘ஹ’ என்ற அக்ஷரத்தை கொண்ட இந்த சக்ரா மனிதனின் தொண்டைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. ஜோதிடம் இந்த சக்ராவை செவ்வாய்க் கிரகத்தோடு ஒப்பிடுகிறது. செவ்வாய்க் கிரகம் மனிதனுடைய நன்னடத்தை பற்றி, சொல் சுத்தத்தை பற்றிக் குறிப்பதைப் போல இந்த சக்ரா மனிதனுக்கு தூய்மையான சொல்லையும் சுத்தமான மனதையும் கொடுக்கிறது. எந்த சூழ்நிலையிலும் செவ்வாய் கிரகம் மனிதனுக்கு துணிச்சலைக் கொடுப்பது போல விசுத்தி சக்ராவும் உடலில் தோன்றும் மாற்றங்களைப் பக்குவத்தோடு ஏற்றுக் கொண்டு இயங்க வைக்கிறது.

ஆஜனா சக்ரா

‘ஓம்’, ‘அஹம்’ என்ற அக்ஷரங்களைக் கொண்ட இந்த இரு சக்ராக்களும் மனித உடலில் மேல் பகுதியில் இடம் பெற்றுள்ளது. ஆஜனா சக்ரா நெற்றிப் பகுதியையும், ஸஹஸ்ராரா சக்ரா மண்டைப் பகுதியை இடமாக அமைத்துக் கொண்டுள்ளது. ஆஜனா சக்ராவை குரு கிரகத்தோடு ஒப்பிட்டுப் பேசப்படுகிறது. உச்சம் பெற்ற குருகிரகம் மனித வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது. அது போல ஆஜனா சக்ரா மனிதனுக்கு திருஷ்டியை நெறிப்படுத்தி உயர்ந்த குணத்தை கொடுக்கிறது.

ஸஹஸ்ரா சக்ரா

ஸஹஸ்ரா சக்ரா ஜோதிட சாஸ்திரத்தில் சனி கிரகத்தோடு ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. சனி கிரகம் மனிதனின் ஆயுளைக் குறிப்பதைப் போல ஸஹஸ்ரா சக்ரா மனிதனுக்கு ஞான திருஷ்டியையும், தெளிவான சிந்தனையைக் கொடுத்து, இறை வழியைப் நாடும் பாதையைக் காட்டுகிறது. சக்ராக்கள் மனித இயல்போடு இணைந்துள்ளது. மனிதனுடைய வாழ்க்கையை உயர்த்துவதில் பெரிதும் உதவுகிறது.

இதை அறிந்து செயல்பட்டு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/others/p2.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License