இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
ஆன்மிகத் தொடர்கள்

அய்யா வைகுண்டர்

நெல்லை விவேகநந்தா


14. அய்யா அஞ்சி ஓடினாரா?

சாமித்தோப்பு பூவண்டர் தோப்பில் வழக்கம் போல் தன்னை சந்திக்க வந்தவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார் அய்யா வைகுண்டர். அவர், யதார்த்தமாக பார்வையை திருப்பியபோது சில இளைஞர்கள் வேகமாக அவரை நோக்கி ஓடி வந்தனர். பொதுமக்களிடம் உபதேசிப்பதை நிறுத்தி விட்டு, அவர்கள் எதற்காக ஓடி வருகிறார்கள் என்பதை அறிய மவுனமானார்.

ஓடி வந்த இளைஞர்கள் வைகுண்டர் முன்பு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றனர்.

“ஏன் இந்த ஓட்டம்? அவ்வளவு அவசரமான காரியமா?” அய்யா கேட்டார்.

“அப்படித்தான் அய்யா. திருவிதாங்கூர் மன்னர், தங்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். உங்களைக் கைது செய்வதற்காக சமஸ்தான ஆட்கள் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்...” என்று மூச்சு கூட விட முடியாமல் சொன்னார்கள் வந்தவர்கள்.

அதைக் கேட்ட மாத்திரத்தில் அய்யாவை காண வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அய்யா முகத்திலோ எந்த சலனமும் தெரியவில்லை. எப்போதும் தவழும் மகிழ்ச்சி மாத்திரமே அவர் முகத்தில் தெரிந்தது.

சிறிது நேரம் மவுனமாக நகர்ந்தது.

அதன்பிறகு அப்படியொரு சம்பவம் நடைபெறும் என்று அய்யாவைக் காண வந்தவர்கள் கூட எதிர்பார்க்கவில்லை.

அதுவரை மவுனமாக இருந்த அய்யா வைகுண்டர், திடீரென்று எழுந்து ஓட ஆரம்பித்தார். தென் திசை கடல் நோக்கி அவரது ஓட்டம் அமைந்திருந்தது. அய்யாவின் இந்தச் செயல், இறைவனாக அவரைப் பார்த்த பொதுமக்களுக்கு விநோதமாக தெரிந்தது. அவரது செய்கையைக் கண்டு மனம் வெதும்பினர்.

ஆதிக்க ஜாதியினரோ, 'தன்னை இறைவனின் அவதாரம் என்கிறான்... ஆனால், கைது செய்ய வருபவர்களைக் கண்டு அஞ்சி ஓடுகிறானே...' என்று ஏளனம் செய்தனர். அய்யா வழியை பின்பற்றியவர்களையும் கிண்டலடித்தனர்.



“பதறி இவன் போறான் படை வருகுது என்று சொல்லிக்
கதறி மிக ஓடுகிறான் கள்ள சுவாமி இவனும்
சாமி என்றால் நருட்குத் தோற்று மிக ஓடுவானோ...
நாம் இவனை நம்பி நடந்ததுவும் வீணாச்சே...
பேயனுட பேச்சை பிரமாணமாயக் கேட்டு
ஞாயமது கெட்டோம் நாமெல்லாம் என்று சொல்லி
நீசக்குலத்தோர் நெடுந்தூரம் வைதனர் காண்...”

- என்று, மேற்கண்ட சம்பவம் பற்றி குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு.

அடுத்த ஒரு மணி நேரத்தில் சமஸ்தான படைவீரர்கள் வைகுண்டரை கைது செய்ய பூவண்டர் தோப்புக்குள் புகுந்தனர். அங்கே அவர் இல்லாததால் கண்ணில் கண்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினர். அய்யாவுக்காக ஏற்படுத்தப்பட்ட குடிலையும் தீ வைத்துக் கொளுத்தினர்.

அதோடு அவர்களது அட்டகாசம் நின்று விடவில்லை. அய்யாவைத் தேடி வந்தவர்கள் மீதும் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். சிலரது கை, கால்கள் ஊனமாக்கப்பட்டன.

இந்த களேபரங்கள் நடந்து முடிந்த சிறிது நேரத்தில் அய்யா வைகுண்டர் பூவண்டர் தோப்புக்கு திரும்பி வந்தார். அங்கே நடந்த கொடூரங்களைக் கண்டு வேதனை அடைந்தார்.

அப்போதுதான் ஒருவர் அய்யா அருகில் வந்தார்.

வந்தவர், அய்யாவிடம் கேட்டார், “அய்யா... நாங்கள் எல்லாம் உங்களை நம்பித்தானே இங்கே வந்தோம். ஆனால், திடீரென்று எழுந்து ஓடி விட்டீர்களே... அதற்கு நாங்கள் என்ன பொருள் எடுத்துக் கொள்ள?” என்றார் அவர்.

அவரது தோளில் கை வைத்து, அவரது கண்களில் இருந்து சிந்திய கண்ணீர்த் துளிகளை துடைத்து விட்டு அய்யா இப்படி கூறினார்.

“அவசரப்பட்டு தவறாக முடிவெடுத்து விடாதீர்கள். நான் கலியை அழித்துத் தர்மயுகத்தை நிலைநாட்டப் போகும் நேரம் நெருங்கிவிட்டது. அதை என் தந்தையிடம் சொல்லி வரவே தென் திசைக் கடல் நோக்கி ஓடினேன். கடலுக்குள் புகுந்து தந்தையிடம் சொல்லி விட்டு திரும்பி வந்துள்ளேன்...” என்றார்.

இதற்கு பிறகுதான், திடீரென்று அய்யா எழுந்து ஓடியதற்கான காரணத்தை எல்லோரும் தெரிந்து கொண்டனர். அவரைத் தவறாக எண்ணிய அவரது மக்கள், அதற்காக வருந்திக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் மீண்டும் பூவண்டர் தோப்பில் வழக்கமான பரபரப்பு தொற்றிக் கொண்டது. மக்கள் அதிக அளவில் வந்தார்கள். அப்போது, அவர்கள் எதிர்பார்க்காத மற்றுமொரு சம்பவமும் அங்கே அரங்கேறியது.



அய்யா வந்து விட்டார் என்பதை அறிந்த சமஸ்தான படைவீரர்கள் மீண்டும் ஆயுதங்களோடு பூவண்டர் தோப்புக்குள் நுழைந்தனர். அய்யாவைக் காண வந்த அனைவர் மீதும் தாக்குதல் நடத்தினர். அய்யா மீதும் அடி விழுந்தது. அதைப் பார்த்தவர்கள், படைவீரர்களுக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். ஆனால், அய்யா அவர்களை அமைதிப்படுத்தினார். “பொறுமையாக இருப்பவர்கள்தான் பெரியோர் ஆக முடியும்” என்றார். இதையடுத்து அனைவரும் அமைதி ஆனார்கள்.

“பொறுத்து இருந்தவரே பெரியோரே ஆகுமக்கா
அறுத்திடவே என்றால் அபுருவமோ என்றவனுக்கு
வம்பு செய்வதைப் பார்த்து வதைக்க வந்தேன் அக்குலத்தை
அன்பு குடி கொண்ட அதிக மக்கா நீங்களெல்லாம்
பொறுத்து இருங்கோ பூலோகம் ஆள வைப்பேன்
மறுத்து உரையாடாமல் மக்களென்ற சான்றோர்கள்...”

-என்று, அதுபற்றி குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு.

இதைத் தொடர்ந்து, அய்யா வைகுண்டரை கைது செய்தனர் படைவீரர்கள். அய்யாவின் கைகளில் விலங்கு மாட்டிய போது அனைவரும் கண்ணீர் சிந்திக் கதறினர். ஆனால், ஆதிக்க ஜாதியினரோ, ‘நமக்கு தொந்தரவு செய்த எதிரி தொலைந்தான்’ என்று ஆனந்தக் கூத்தாடினர்.

முதலில் சுசீந்திரத்தில் தங்கியிருந்த மன்னன் சுவாதித் திருநாள் முன்பு அய்யா வைகுண்டரை ஆஜர் செய்தனர். அவன், அய்யாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். சில நாட்கள் சுசீந்திரத்தில் ஓய்வெடுத்த மன்னன், அதன் பின் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றான்.

ஆனாலும், அய்யாவைப் பழி வாங்கும் முடிவில் உறுதியாக இருந்தான். அதனால், அவரிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக திருவனந்தபுரத்திற்கு இழுத்துக் கொண்டு வரவும் உத்தரவிட்டான்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p1n.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License