இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகத் தொடர்கள்
தெய்வீக்த் திருவிளையாடல்கள்

பிள்ளைக் கறி வேண்டிய இறைவன்

ஜெயவிகா


தினமும் ஒரு சிவனடியாருக்காவது அமுது படைத்து விட்டு உண்பதுதான் சிவத் தொண்டரான பரஞ்ஜோதியார் குடும்பத்தின் வழக்கம். அன்று என்னவோ சிவனடியார் யாரும் அவர்களது இல்லத்திற்கு வருவதாக தெரியவில்லை. பக்கத்தில் எங்கேனும் சிவனடியார்கள் இருக்கிறார்களா என்பதை அறிய, பரஞ்ஜோதியார் வெளியில் சென்றார்.

ஆனால், எந்த சிவனடியாரும் அவரது பார்வைக்குக் கிடைக்கவில்லை.

மிகுந்த களைப்போடு வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அடுத்து என்ன செய்வது? என்பது போல் யோசித்தார்.

அப்போது, வீட்டிற்குள் இருந்து அவரது மனைவி வெளியே வந்தாள்.

“என்னங்க... இவ்வளவு நேரமா எங்கே போனீங்க?”

“ஒரு சிவனடியாராவது நம் பார்வைக்குக் கிடைக்க மாட்டாரா என்று தேடிப் போய் இருந்தேன். யாரும் கிடைக்காததால் வரத் தாமதமாகி விட்டது”.

“அந்தக் கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். சிறிது நேரத்திற்கு முன்புதான் நம் வீட்டிற்கு ஒரு சிவனடியார் வந்தார். அவரது தோற்றம் சற்று பயத்தை ஏற்படுத்தினாலும், மிகச் சிறந்த சிவனடியார் போன்று தெரிந்தது. நம் ஊரை ஒட்டியுள்ள ஆத்தி மரத்தடியில் இருப்பதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். அவரை அழைத்து வாருங்கள்...” என்றாள், கணவனைப் போலவே சிவநெறி வழுவாத பரஞ்ஜோதியாரின் மனைவி.

“சரி... நான் அவரை அழைத்து வருகிறேன். வீட்டில் நல்ல உணவு தயாரித்து வை!”

“ஆமாங்க... இப்போது நீங்கள் அவரை அழைத்து வரவேண்டியதுதான் பாக்கி...” என்றாள் அவள்.



ஆத்தி மரத்தடி நோக்கிச் சென்ற பரஞ்ஜோதியார், அங்கு காத்திருந்த சிவனடியாரை சரியாக அடையாளம் கண்டு கொண்டார்.

சிவனடியாரை பார்த்த மாத்திரத்தில் பரஞ்ஜோதியாருக்கும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நெற்றியில் திருநீறும், கழுத்தில் உருத்திராட்சக் கொட்டை மாலையும், காவி உடையிலுமே சிவனடியார்களை பார்த்துப் பழக்கப்பட்ட அவருக்கு, அவர் மட்டும் சற்று வித்தியாசமாகத் தெரிந்தார்.

அவரது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த எலும்பு மாலையும், ஒரு கையில் திரிசூலமும், மறுகையில் மண்டையோடும் பரஞ்ஜோதியாரை சற்று மிரள வைத்தன. நடுங்கியபடியே அவர் முன் போய் நின்றார்.

“சுவாமி! நான் சிவனடியாருக்கு உணவு படைக்கும் பொருட்டு, சிவனடியாரைத் தேடிச் சென்ற நேரத்தில் தாங்கள் என் வீட்டிற்கு வந்ததாக என் மனைவி கூறினாள். தங்களை அழைத்துச் சென்று உணவு படைக்கவே இங்கே வந்திருக்கிறேன்...” என்றார்.

“உணவு படைப்பது சரி. ஆனால் நீ கொடுக்கும் உணவு எனக்கு பிடித்த உணவாக இருக்க வேண்டும்.”

“சரி சுவாமி...”

“அப்படியென்றால், நான் கேட்கும் உணவை கண்டிப்பாக நீ தருவாயா?”

“இதில் என்ன சந்தேகம் சுவாமி? உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் என் பணி. என்னிடம் இருப்பதில் நீங்கள் கேட்பது எதுவாக இருந்தாலும் நிச்சயமாக நான் தருகிறேன்...”

“சரி... நான் கேட்பது கிடைக்கும் என்பதால் வருகிறேன். எனக்கு என்ன உணவு வேண்டும் என்பதையும் இங்கேயே உன்னிடம் சொல்லி விடுகிறேன்”

“தாராளமாகச் சொல்லுங்கள் சுவாமி.”

“நான் வடபுலத்தைச் சேர்ந்தவன். ஆறு மாதத்திற்கு ஒருமுறை உணவு உட்கொள்வதுதான் எனது வழக்கம். எனது உணவே மனித மாமிசம்தான். அதுவும், ஐந்து வயதுக்கு உட்பட்ட தலைமகனான பாலகனின் மாமிசத்தை மட்டுமே சாப்பிடுவேன். அந்த உணவைத்தான் நான் உன் இல்லத்தில் எதிர்பார்க்கிறேன்...”

அந்த சிவனடியார் சொன்ன உடன் அதிர்ந்து போய்விட்டார் பரஞ்ஜோதியார்.

அவரால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. உடல் முழுக்க வியர்த்தது. வார்த்தைகள் வர மறுத்து வாய் நடுங்கியது.



அந்த சிவனடியார் தொடர்ந்து பேசினார். “நான் விரும்பும் உணவை உன்னால் தர முடியாது என்று எனக்கு நன்றாகவேத் தெரியும். அதனால்தான் உன்னிடம் திரும்பத் திரும்ப கேட்டேன். பரவாயில்லை. நான் வேறு இல்லத்தில் எனக்கு பிடித்தமான உணவைச் சாப்பிட்டுக் கொள்கிறேன்...” என்றார் அவர்.

ஒரு வழியாக மனதைத் தேற்றிக் கொண்டு பேசினார் பரஞ்ஜோதியார்.

“அவசரப்பட வேண்டாம் சுவாமி. உங்களுக்குப் பிடித்தமான உணவுக்கு நானே ஏற்பாடு செய்கிறேன்...” என்று கூறி, அவரை தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

கணவன், சிவனடியாரோடு வருவதைக் கண்ட பரஞ்ஜோதியாரின் மனைவி முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால், பரஞ்ஜோதியாரின் முகமோ சற்று வாடிப்போய்தான் இருந்தது. சிவனடியாரை வீட்டிற்குள் அமர வைத்துவிட்டு, சமையலறைக்குள் கணவனை அழைத்துச் சென்று அதற்கான காரணத்தைக் கேட்டாள். சிவனடியார் கேட்ட உணவு பற்றி சொல்ல வாய் வர மறுத்தாலும், ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு சொன்னார். கணவன் கூறியதைக் கேட்டு அவளும் அதிர்ந்து போனாள். இருப்பினும் தருவதாக வாக்களித்தாகிவிட்டதே... என்று கருதிய அவர்கள், தங்கள் இளகிய மனதை கல்லாக்கிக் கொண்டு, தங்களது ஒரே மகனான ஐந்து வயது சீராளனை சிவனடியாருக்கு பலி கொடுத்து, உணவளிக்க முடிவெடுத்தனர்.

சீராளன் படித்து வந்த குருகுலத்திற்குச் சென்று அவனை அழைத்து வந்தார் பரஞ்ஜோதியார்.

வேகவேகமாக சிவனடியாருக்கு கறியமுது படைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிவபெருமானை மனதிற்குள் நினைத்துக் கொண்டு, ஒரே மகனை கறியாக்கி, அந்த சிவனடியாருக்கு படைத்தனர்.

இலையில் பரிமாறப்பட்ட பாலகனின் கறி உணவைச் சாப்பிட அமர்ந்த சிவனடியார், அடுத்த நொடியே கோபாமானார். “பாலகனின் கறி உணவு கேட்டால், நீ என்ன பசுவின் மாமிசத்தைக் கொண்டு கறி சமைத்து பரிமாறுகிறாயா?” என்று கோபத்துடன் கத்தினார்.

அவசரமாக மறுத்த பரஞ்ஜோதியார், “சத்தியமாக இது ஒரு பாலகனின் கறியமுதுதான்” என்று சொன்னார்.

அதை நம்ப மறுத்த சிவனடியார், “அப்படியென்றால்... தலைக்கறி எங்கே?” என்று கேட்டார்.

“தலைக்கறி உணவுக்கு ஆகாது என்று கருதி, அதை மட்டும் சமைக்காமல் விட்டுவிட்டோம். நாங்கள் செய்த இந்தக் குறையைப் பொறுத்து, தாங்கள் உணவு உண்ண வேண்டும்...” என்று அமைதியாக பதில் சொன்னாள் பரஞ்ஜோதியாரின் மனைவி.

ஆனாலும், சிவனடியார் விடுவதாக இல்லை. “எனக்குத் தலைக்கறிதான் வேண்டும்” என்று அடம் பிடித்தவர், “அந்தத் தலைக்கறி கிடைக்கா விட்டால் வெளியேறிவிடுவேன்...” என்று எச்சரித்தார்.

பரஞ்ஜோதியாரும், அவரது மனைவியும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிக்க... சமையலறைக்குள் இருந்து வெளியே வந்தாள் பணிப்பெண்.

“அம்மா... இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தே நான் தலைகறியை தனியாக சமைத்தேன். அதை இப்போது அடியாருக்கு பரிமாறுங்கள்...” என்றாள்.

முகத்தில் சிறிது மகிழ்ச்சியை வரவழைத்துக் கொண்டு தம்பதியர் இருவரும் சிவனடியாருக்கு அந்தத் தலைக்கறி உணவைப் பரிமாற முயன்றனர்.

அப்போது மீண்டும் கோபமானார் சிவனடியார்.

“நான் தனியொரு ஆளாகத் தலைக்கறி உணவு உண்பதில்லை. வேறு சிவனடியார் யாரேனும் இருந்தால் அழைத்து வரவும்...” என்றார்.

வேறு வழி தெரியாத பரஞ்ஜோதியார், வீட்டின் முற்றத்திற்கு ஓடிச் சென்று, யாரேனும் சிவனடியார்கள் வருகிறார்களா? என்று தேடிப் பார்த்தார். ஆனால், யாருமே அவர் கண்ணில் படவில்லை.

“யாருமே இல்லை” என்று அவர் சொல்ல... சிவனடியாரோ, “யாரும் இல்லை என்றால் என்ன, நீ என் அருகில் அமர்ந்து சாப்பிடு...” என்றார்.

‘என்ன கொடுமை இது? பெற்ற பிள்ளையைக் கொன்று கறி சமைத்து சாப்பிட்ட அவப்பெயரும் எனக்கு வர வேண்டுமா?’ என்று மனதிற்குள் குமுறியபடியே சிவனடியார் அருகில் அமர்ந்தார்.

சிவனடியாருக்கும், தனது கணவருக்கும் தன் பிள்ளைக்கறி உணவைப் பரிமாறினாள், பரஞ்ஜோதியாரின் மனைவி.

இப்போதாவது கறி உணவை சிவனடியார் சாப்பிட்டு விடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, மறுபடியும் ஏமாற்றமே மிஞ்சியது.

“உன் மகனை அழைத்து வா. அப்போதுதான் சாப்பிடுவேன்...” என்று மீண்டும் அடம்பிடித்தார்.

“அவனுக்கு இங்கே வேலை இல்லை...” என்று பரஞ்ஜோதியார் சொன்ன போது, “நீ அவனைக் கூப்பிடு; அவன் வருவான்...” என்றார்.

‘தவம் இருந்து பெற்ற மகன்தான் இங்கே கறி உணவாக இருக்கிறானே... எப்படி அவன் வருவான்?’ என்று மனதிற்குள் பரஞ்ஜோதியார் எண்ணினாலும், சிவனடியாரின் கோபத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக, வீட்டின் முற்றத்திற்குச் சென்று, “சீராளா...“ என்று அழைத்தார்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

எந்த மகனைக் கறி சமைத்து சிவனடியாருக்கு பரிமாறினார்களோ, அதே சீராளன் ஓடி வந்தான். அவனைப் பார்த்த பரஞ்ஜோதியார் தம்பதியருக்கு இன்ப அதிர்ச்சி. அவனை அள்ளி அணைத்து கொஞ்சினர்.

கறி உணவு வேண்டி தங்கள் இல்லம் வந்த சிவனடியாரைப் பார்க்கத் திரும்பினர். அங்கே அவர் இல்லை. கறி உணவையும் காணவில்லை.

அப்போதுதான், பிள்ளைகறி கேட்டு வந்தவர் சாதாரண அடியார் இல்லை; அந்த சிவபெருமான்தான் என்பதை உணர்ந்தனர் அவர்கள்.

அப்போது, உமாதேவியுடன் காட்சி கொடுத்தார் சிவபெருமான்.

அடியாருக்காக தனது மகனையே கறியாய்ச் சமைத்த பரஞ்ஜோதியார் 63 நாயன்மார்களுள் ஒருவராக சிறுத்தொண்டு நாயனார் என்று பெருமை பெற்றார்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p2c.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License