இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

சித்திர புத்திர நாயனார் கோயில்

உ. தாமரைச்செல்வி


மனித வாழ்க்கையில் தெரிந்தே தவறுகளைச் செய்து கொண்டிருப்பவர்களும் உண்டு, தவறு என்றே தெரியாமல் செய்து விட்டு அதற்காக வருந்துபவர்களும் உண்டு. தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தவறு என்று ஆகிவிட்டால் அதற்கான தண்டனை கட்டாயம் உண்டு. இந்தத் தண்டனைகளிலிருந்து விடுபட இறைவனை நாடுவதே சரியான வழி. ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் அவன் செய்யும் நற்செயல்கள், தீய செயல்கள் என அனைத்துமே கணக்கிடப்பட்டு வருகின்றன. இந்தக் கணக்குகளைப் பராமரிப்பதற்காகவே சித்திரகுப்தன் என்கிற கடவுள் இருப்பதாகவும் இந்து சமய புராணங்கள் தெரிவிக்கின்றன.

மனிதன் தான் தெரியாமல் செய்த தவறுகளை உணர்ந்து, சித்திரகுப்தனிடம் அந்தத் தவறுகளை மன்னித்து அருள வேண்டினால், அவனுடைய இறப்புக்குப் பின்பு, அவனுடைய ஆன்மாவிற்குத் தீய செயல்களிலிலிருந்து விடுவிப்பு கிடைப்பதுடன், அந்த ஆன்மா நரகம் செல்லாமல் காப்பாற்றப்பட்டு சொர்க்கத்துக்கு அனுப்பப்படும் என்கிற தொன்ம நம்பிக்கையும் உள்ளது.

சித்திர புத்திர நாயனார் கோயில்

உலகில் வாழும் அனைத்து உயிர்களின் கணக்குகளையும் பராமரித்து வரும் சித்திர புத்திரருக்கென்று சில இடங்களில் மட்டுமே கோயில்கள் உள்ளன. அவற்றுள் தேனி மாவட்டம், கோடாங்கிபட்டிக்கு மேற்கே தீர்த்தத் தொட்டி எனும் பகுதியில் அமைந்திருக்கும் சித்திர புத்திர நாயனார் கோயிலும் ஒன்று. காஞ்சிபுரத்திலுள்ள சித்திர புத்திரர் கோயிலுக்கு அடுத்து சிறப்பு பெற்ற கோயிலாக இக்கோயில் இருந்து வருகிறது.

தல வரலாறு

தேனி மாவட்டம், கோடாங்கிபட்டியைச் சேர்ந்த பேச்சிமுத்துப் பிள்ளை என்பவரின் முன்னோர் கனவில் தோன்றிய சித்திர புத்திரன் தனக்கென்று தனியாக கோயில் ஒன்றைக் கட்டி வழிபட்டு வந்தால், அவருடைய குடும்பத்தினருக்கு நல்வாழ்வு அளிப்பதாகவும், தன்னுடைய கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்லும் அனைத்து பக்தர்களுக்கும், அவர்கள் வாழ்க்கையில் தெரியாமல் செய்த தீயசெயல்களை நீக்கி, நற்பலன்களை அடைந்திட தான் உதவுவதாகவும் தெரிவித்திருக்கிறார். பேச்சிமுத்துப் பிள்ளை குடும்பத்தினர், சித்திர புத்திரர் கனவில் குறிப்பிட்டுச் சொன்ன இடத்தில் சித்திரபுத்திரருக்காகத் தனியாகக் கோயில் ஒன்றைக் கட்டினர். இந்தக் குடும்பத்தினர் ஆறு தலைமுறைகளாகத் தொடர்ந்து சித்திரபுத்திரரைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்டு தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.



கோயில் அமைப்பு

சுமார் அறுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலின் உள்ளே அமர்ந்த நிலையில், கிழக்குத் திசையை நோக்கிய நிலையில் சித்திர புத்திர நாயனார் சிலையுடன் கூடிய கருவறை அமைந்துள்ளது. கருவறையை ஒட்டிய முன் சுவற்றில் விநாயகர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தென்பகுதியில் சீலைக்காரியம்மன் சிலை ஒன்று உள்ளது. கோயிலுக்கு அருகில் விருப்பாட்சி ஆறுமுக நாயனார் திருக்கோயில் உள்ளது.


வழிபாடு

சித்திர புத்திரன் கோயிலில் பேச்சிமுத்துப் பிள்ளை குடும்பத்தின் வழித் தோன்றல்களால் அமைக்கப்பட்ட அறக்கட்டளை மூலம் கோயிலில் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சித்திரை நட்சத்திர நாளிலும், சித்திரை மாதத்தில் அனைத்து நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமியன்று சித்திர புத்திரருக்குச் சிறப்புப் பூசைகளுடன் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது, சித்திர புத்திர நாயனார் தோற்றம் குறித்த வரலாற்றுக் கதைகள் படிக்கப்படுகின்றன. அன்றைய தினம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குச் சித்திரைக் கஞ்சி வழங்கப்படுகின்றது.

சித்திர புத்திரன் வரலாறு

இந்த உலகின் தீய மற்றும் நற்செயல்களான பாவ புண்ணியங்களைக் கணக்கிடுவதற்காகச் சிவபெருமான் ஒரு தங்கப்பலகையில் சித்திரம் ஒன்றை வரைந்தார். இந்த சித்திரத்தைக் கண்ட பார்வதி தேவி, அந்தச் சித்திரத்தை உயிர்ப்பிக்க வேண்டினார். சிவபெருமானும் பார்வதி தேவியின் வேண்டுதலுக்காக அந்தச் சித்திரத்தை உயிர்ப்பித்தார். சித்திரை மாதம் முழுநிலவு (பவுர்ணமி) நாளில் சித்திரத்திலிருந்து உயிர்ப்பு பெற்றதால் அவர் சித்திர புத்திரன் என்ற பெயரைப் பெற்றார்.

சிவபெருமான் அவரிடம், மூவுலகிலும் உயிருடன் இயங்கும் அனைத்து உயிர்களின் தீய மற்றும் நற்செயல் குறித்த கணக்குகள் குறித்த விவரங்களையும் கணக்கிட்டுத் தனக்குத் தெரிவிக்கும்படி கட்டளையிட்டார்.

அதன்படி, சித்திரபுத்திரனும் சிவபெருமானின் இருப்பிடமான கயிலாயமலையிலிருந்து அனைத்து உயிர்களின் கணக்குகளையும் பராமரித்து, சிவபெருமானிடம் தெரிவித்து வந்தார் என்று அவரது பிறப்பு குறித்து ஒரு வரலாறு தெரிவிக்கிறது.

இந்திரன் தனக்கு குழந்தைப் பேறு அளிக்க வேண்டுமென்று இந்திராணியுடன் சேர்ந்து, பல தான தருமங்கள் செய்து சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் மற்றும் இந்திராணி ஆகியோரின் தவத்தை எடுத்துச் சொல்லி, சித்திர புத்திரனை இந்திரனுக்கு மகனாக இருந்து, அவனுடைய குழந்தை இல்லை எனும் கவலையைத் தீர்க்கும்படி அருள் புரிந்தார்.

அதைத் தொடர்ந்து, சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில், முழுநிலவு நாளன்று காமதேனுவின் வயிற்றில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு சித்திர புத்திரன் பிறந்தார். இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்ட இந்திரன் மற்றும் இந்திராணி ஆகியோர் தங்கள் குழந்தையாக எண்ணி வளர்த்து வந்தனர். இந்திரனின் மகனாக வளர்ந்த சித்திர புத்திரன், சிவபெருமானைத் தொடர்ந்து வழிபட்டு வந்தார். சித்திர புத்திரன் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு, அனைத்து உயிரினங்களின் செயல்பாடுகள் குறித்த கணக்குகளையும் எழுதிப் பராமரிக்கும் பணியை வழங்கினார் என்றும் ஒரு வரலாறு தெரிவிக்கிறது.

இவரைப் பலரும் சித்திர குப்தன் என்றே தங்கள் பேச்சு வழக்கில் குறிப்பிடுகின்றனர். சித்திரம் என்றால் வியப்புக்குரியது என்றும், குப்தம் என்றால் மறைபொருள் (ரகசியம்) என்றும் பொருள் உண்டு. உலகில் எப்படிப்பட்ட மறைபொருளையும் கண்டறிந்து கணக்கெழுதி விடும் இவரது கணக்கெழுதும் முறை வியப்புக்குரியதாக இருப்பதால் இவரை சித்திர குப்தன் என்று அழைப்பதிலும் தவறில்லை என்கின்றனர்.



சித்திரை முழுநிலவு வழிபாடு

ஒவ்வொரு ஆண்டும் சித்திர புத்திரன் அவதரித்த சித்திரை முழுநிலவு நாளன்று சித்திரை நோன்பு கொண்டாடப்படுகிறது. சித்திரை நோன்பு எனும் விரதத்தைப் பெண்கள்தான் அதிகமாகக் கடைப்பிடிக்கின்றனர். இந்நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து விரதமிருக்கின்றனர். சித்திர புத்திரன் காமதேனுப் பசுவின் கர்ப்பத்திலிருந்து பிறந்ததால், பசுவின் பால் மற்றும் அதன் பாலிலிருந்து பெறப்படும் எந்தப் பொருள்களையும் இந்த விரத நாளில் பயன்படுத்தக் கூடாதென்பது ஒரு கட்டுப்பாடாக உள்ளது. மேலும் இந்நாளில் சித்திரை நோன்பு மேற்கொள்பவர்கள் அன்று தங்கள் உணவில் உப்பையும் சேர்த்துக் கொள்வதில்லை. வீடுகளில் மாக்கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி, வாசனைப் பொருள் கலந்த பொங்கல் வைத்துப் பூசை செய்து,

சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்

என்கிற சித்ரகுப்த சுலோகத்தைச் சொல்லி வணங்குகின்றனர்.

இந்தப் பூசையைச் செய்பவர்கள் சித்திர புத்திரர் கோயிலுக்குச் சென்று ஏழை மாணவர் ஒருவருக்கு ஏடு, எழுதுகோல் போன்ற எழுது பொருட்களைத் தானமாக வழங்கிட வேண்டும் அல்லது ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்திட வேண்டும். சித்திர புத்திரர் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவபெருமான் கோயிலுக்குச் செல்லலாம்.

சித்திரை நோன்பின் பலன்

மனிதன் உயிருடன் இருக்கும் போது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்றவாறு அவனுடைய இறப்புக்குப் பின்பு, அவனுடைய ஆன்மாவானது அதற்கான பலன்களை அடைகிறது. அவன் செய்த நற்செயல்களுக்கு நற்பலன்களையும், தீயசெயல்களுக்குத் தண்டனைகளையும் அந்த ஆன்மா அடைகிறது.

இந்தப் பூமியில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவன் சிவபெருமான் சித்ர குப்தரைக் கொண்டு கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து, தான் தெரியாமல் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டியும், இனி எந்தத் தவறையும் செய்யப் போவதில்லை என்பதை உறுதியாகக் கொண்டும் சித்திர புத்திரரை வழிபட வேண்டும். இப்படி வழிபடுவதால், இறப்புக்குப் பின்பு, ஆன்மாவிற்குத் தீய செயல்களிலிலிருந்து விடுவிப்பு கிடைப்பதுடன், அந்த ஆன்மா நரகம் செல்லாமல் காப்பாற்றப்பட்டு சொர்க்கத்துக்கு அனுப்பப்படும் என்கிற தொன்ம நம்பிக்கை உள்ளது. மேலும் சித்ரகுப்தனை வணங்குபவர்கள் கேதுவால் ஏற்படும் தொல்லைகளிலிலிருந்து விடுபடுவர்.



அமைவிடம்

தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தீர்த்தத் தொட்டி எனும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் நகரப் பேருந்துகள் இந்நிறுத்தத்தில் நிறுத்தப்படுகின்றன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p21.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License