இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

சாஸ்தா வழிபாடு

உ. தாமரைச்செல்வி


திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருக்கும் பல்வேறு கிராமங்களில் சாஸ்தா கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர நாளில் சாஸ்தா கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்நாளில், இம்மாவட்டத்து மக்கள் தங்களுக்குரிய சாஸ்தா கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த மாவட்டங்களிலிருந்து, தங்கள் வாழ்வாதாரங்களுக்காகப் பிற ஊர்களுக்கு இடம் பெயர்ந்து சென்றவர்களும், இந்நாளில் சாஸ்தா கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். எப்படித் தொடங்கியது இந்த சாஸ்தா கோயில் வழிபாடு? என்பது குறித்துத் தெரிந்து கொள்ள வாருங்கள்…

சாஸ்தா தோற்றம்

தாங்கள் செய்த வேள்விகளின் வழியாகக் கிடைத்த பலன்களை நல்வழிக்குப் பயன்படுத்தாத சில முனிவர்கள், தங்களிடமிருக்கும் பலன்களைப் பெரிதாக நினைத்ததுடன், தங்களை விட உயர்ந்தவர்கள் எவருமில்லை என்று அகந்தையும் கொண்டனர். அகந்தை கொண்ட முனிவர்களெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து மிகப்பெரிய வேள்வி ஒன்றை நடத்தி, முப்பெருங்கடவுள்களின் சக்தியையும் தாங்கள் பெற்று விட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

தாருகா வனத்தில் ஒன்று கூடிய அவர்கள், முப்பெருங்கடவுள்களின் சக்தியைப் பெறுவதற்கான வேள்வியைச் செய்யத் தொடங்கினர். அந்த வேள்வி நிறைவடைந்தால், அவர்களது அகந்தை மேலும் அதிகரிப்பதுடன், தங்களுக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும் என்று நினைத்த இறைவன் சிவபெருமானும், விஷ்ணுவும் அந்த வேள்வியைத் தடுக்கத் திட்டமிட்டனர்.

அவர்கள் திட்டத்தின்படி, இறைவன் சிவபெருமான் பிட்சாடனர் வேடமும், விஷ்ணு மோகினி வேடமும் கொண்டு அந்த இடத்திற்குச் சென்றனர்.

பிட்சாடனராக வேடமிட்ட சிவபெருமான், முனிவர்களின் குடில்கள் அமைந்திருந்த பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த முனிவர்களின் மனைவிகளிடம் தனக்குப் பிச்சையிடுமாறு கேட்டார். சிவபெருமானின் பிச்சாடனர் தோற்றத்தைக் கண்ட அவர்களது மனதில், தங்கள் கணவரை விட இவர் அழகாக இருக்கிறாரே என்கிற தவறான எண்ணமும், தடுமாற்றமும் ஏற்பட்டது.

இது போல், மோகினித் தோற்றத்தில் சென்ற விஷ்ணு, முனிவர்கள் வேள்வி நடத்திக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்று அவர்களின் முன்பாகப் போய் நின்றார். மோகினியின் தோற்றத்தில் மயங்கிய முனிவர்களின் மனம் வேள்வியிலிருந்து வெளியேறி, மோகினியின் அழகில் அலைபாயத் தொடங்கியது.

முனிவர்கள் மற்றும் அவர்களது மனைவிகளின் மனங்களில் ஏற்பட்ட தவறான எண்ணங்களால் வேள்வியினைத் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. முனிவர்களுக்குத் தாங்கள் செய்யவிருந்த தவறும் நன்றாகத் தெரிந்தது. அவர்கள் தங்களது வேள்வியை உடனே நிறுத்தி விட்டனர்.

இந்நிலையில், பிச்சாடனர் உருவத்திலிருந்த சிவபெருமானும், மோகினி உருவத்திலிருந்த விஷ்ணுவும் அங்கிருந்த நீர்நிலை ஒன்றின் அருகில் சந்தித்துக் கொண்டனர். மோகினியின் அழகில் மயங்கிய பிச்சாடனர், மோகினியுடன் இணைந்தார். அதனால், மோகினியின் கையில் குழந்தை ஒன்று தோன்றியது.

இருவரது சேர்க்கையிலும் தோன்றிய அந்தக் குழந்தைக்கு இருவரது சக்திகளும் கிடைத்தன. அந்தக் குழந்தையைப் பார்த்த சிவபெருமான், பிற்காலத்தில் அவர் பூலோக மக்களின் காவல் தெய்வமாகப் புகழ் பெறுவார் என்று வாழ்த்தினார். சிவன், விஷ்ணு இருவரும், தங்களுக்குப் பிறந்த குழந்தைக்குத் துணையாகத் தங்களது பாதுகாவலர்களில் சிலரையும், அந்தக் குழந்தை சொல்லும் பணிகளைச் செய்வதற்காக இயக்கியர்கள் என்கிற மாடன், மாடத்தியர்களையும் கொடுத்தனர்.

குழந்தையாக இருந்த அவர், வளர்ந்து இளம்பருவத்தை அடைந்த போது, சிவபெருமான் வாழ்த்தியபடி சாஸ்தா எனும் பெயரில் கிராம மக்களின் காவல் தெய்வமாக உயர்ந்தார்.


அய்யனார்

பொதுவாக அமைதியான தோற்றத்திலேயே சாஸ்தா இருக்கிறார். அவர் கோபத்துடன் வீரமான தோற்றத்திலிருக்கும் நிலையில் அவரை அய்யனார் என்று அழைக்கின்றனர். பிச்சாடனருடன் இணைந்த மோகினியின் கையில் தோன்றிய குழந்தை என்பதால், இவரைக் கையனார் என்று அழைத்து, இந்தப் பெயரே, பின்னர் ஐயனார் என்று மருவி விட்டதாகச் சிலர் சொல்கின்றனர். சாஸ்தா என்பதை "ஐயன்” என்றும் சொல்வதனடிப்படையில், அந்தச் சொல்லுடன் மரியாதைக்குரிய "ஆர்” எனும் விகுதியும் சேர்ந்து "ஐயனார்” என்றாகி விட்டது என்றும் சிலர் சொல்கின்றனர்.

கோயில்கள்

சாஸ்தாவிற்குப் பல இடங்களில் கோயில்கள் அமைக்கப்பட்டன. அக்கோயில்களில் இருக்கும் சாஸ்தா மார்பில் பூணூல் அணிந்து, சிவபெருமான் அணிந்திருக்கும் அனைத்து அணிகலன்களையும் அணிந்து கொண்டிருப்பார். இளம் வயதுத் தோற்றத்தில், வலது கையில் தண்டம் ஒன்றை வைத்திருக்கும் இவர், இடது கையை, இடது காலின் மீது சார்த்தியபடி வைத்திருப்பார். இடது காலை மடித்துப் பீடத்தின் மேல் வைத்துக் கொண்டு, வலது காலைத் தொங்க விட்ட நிலையில் அமர்ந்திருப்பார். சில இடங்களில் குதிரை அல்லது யானையின் மீது அமர்ந்த நிலையிலும் இருப்பதுண்டு. இது போல், சில இடங்களில் சாஸ்தா நின்ற நிலையிலும் இருக்கிறார்.

சாஸ்தா தேவலோகத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும், அவர் பூலோகத்தில் தோன்றியவர் என்பதால், அவருக்குத் தேவலோகத்தைச் சேர்ந்த புஷ்கலா எனும் தேவியும், பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவி எனும் தேவியுமாக இரண்டு தேவியர்கள் உடனிருக்கின்றனர். பல சாஸ்தா கோயில்களில் சாஸ்தாவுடன் பூர்ணாதேவி, புஷ்கலா தேவி என்று இரண்டு தேவியர்களும் இருக்கின்றனர்.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்திருக்கும் சிறிய அளவிலான சாஸ்தா கோயில்களில் சாஸ்தாவிற்கு எனத் தனிச்சிலைகள் எதுவுமில்லாமல், முக்கோண வடிவிலான பீடம் மட்டும் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில்களில், பங்குனி உத்திரத் திருவிழா நாளில் பீடத்தின் முன்பாக சாஸ்தாவின் உருவம் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

பொதுவாக சாஸ்தா கோயில்களில், அவருக்குப் பாதுகாவலாகச் சுடலை மாடன், கருப்பசாமி ஆகிய துணைக்கடவுள்களில் ஒருவரும், இயக்கியர்கள் என்று அழைக்கப்படும் சிறு காவல் தெய்வங்கள் இருபத்தொன்று பேர்களும் இருப்பது போன்ற அமைப்பு செய்யப்பட்டுள்ளன.

சாஸ்தா வழிபாடு

சாஸ்தா கோயில்களில் அவர் தோன்றியதாகக் கருதப்படும் பங்குனி உத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோயில்களில் பங்குனி உத்திர நாளில் காலை ஐந்து மணிக்குத் தொடங்கும் வழிபாடு, இரவு பன்னிரண்டு மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

சாஸ்தா கோயில் வழிபாடுகள் அனைத்தும் குலதெய்வ வழிபாடு போன்றே தனித்து அமைந்திருக்கிறது. இருப்பினும், பல சமூகத்தினர் இணைந்து வழிபடும் கோயில்களாகவே சாஸ்தா கோயில்கள் இருக்கின்றன. பங்குனி உத்திர நாளில் சாஸ்தா கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்தால், அந்தக் குடுமபத்தினரின் துன்பங்கள் அனைத்தும் தொலைந்து, அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

இதனால், சாஸ்தாவிற்குச் சர்க்கரைப் பொங்கலிட்டு வழிபடும் பக்தர்கள், கோயிலில் சைவ உணவினையே உண்கின்றனர். சில சாஸ்தா கோயில்களில் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல், கருப்பசாமி, சுடலை மாடன் போன்ற துணைக்கடவுளுக்கு ஆடு, கோழி போன்றவைகளைப் பலியிட்டு, அந்த இறைச்சியைக் கொண்டு அசைவ உணவு தயாரிக்கப்பட்டுப் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

சாஸ்தா கோயில் வழிபாடு என்பது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களிடமே அதிகம் காணப்படுகிறது. இம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், இம்மாவட்டங்களிலிருந்து வெளியூர்களில் சென்று வசிப்பவர்களும் சாஸ்தா வழிபாட்டிற்காக ஆண்டுதோறும், பங்குனி உத்திர நாளில் தங்களுடைய சாஸ்தா கோயில்களுக்கு வந்து சாஸ்தாவை வழிபட்டு மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கின்றனர்.

சாஸ்தாவின் பெயர்கள்

சாஸ்தா என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், கிராமங்களில் அமைக்கப்பட்டிருக்கும் மருதவுடையார் சாஸ்தா, பொய்சொல்லா மெய்யான் சாஸ்தா, தென்னம் பாண்டி சாஸ்தா, பூந்தலை உடையார் சாஸ்தா, இளங்காமணி சாஸ்தா, சுந்தரபாண்டிய சாஸ்தா, கால்வாய் நம்பி சாஸ்தா, சொக்க கூத்தர் சாஸ்தா, சின்னதம்பி சாஸ்தா, முதலாமுடையார் சாஸ்தா, தீரன் சாஸ்தா, மயிலேறும் பெருமாள் சாஸ்தா, அழகர் சாஸ்தா, புங்கமுடையார் சாஸ்தா, கரும்புளிசாஸ்தா, சேரந்தையர் சாஸ்தா, பெரும்படை சாஸ்தா, குருக்காட்டூர் சாஸ்தா என்று சாஸ்தாவிற்குப் பல பெயர்களும், கரையடி காத்த அய்யனார், அடைக்கலம் காத்த அய்யனார், நீர்காத்த அய்யனார், அருஞ்சுனை காத்த அய்யனார், சொரிமுத்து அய்யனார், கலியணான்டி அய்யனார், வீரப்ப அய்யனார், கற்குவேல் அய்யனார், செண்பகமூர்த்தி அய்யனார், சமணர்மலை அய்யனார், சிறை மீட்டிய அய்யனார், நிறைகுளத்து அய்யனார், செல்லப்பிள்ளை அய்யனார், வணங்காமுடி அய்யனார், பலவேசம் அய்யனார், பொய் சொல்லாத மெய் அய்யனார், செம்புலி அய்யனார் என்று அய்யனாருக்குப் பல பெயர்களும் ஏற்பட்டிருக்கின்றன. சாஸ்தா மற்றும் அய்யனாரின் பெயருக்கு முன்னால் அமைந்திருக்கும் முன்னொட்டுப் பெயர்கள் அந்தக் கோயிலைத் தோற்றுவித்தவரின் பெயரையோ அல்லது கோயில் இருக்குமிடத்தின் பெயரையோ அல்லது ஏதாவதொரு சிறப்பு ஒன்றைக் கொண்டு அமைந்திருக்கின்றன.

அஷ்ட சாஸ்தாக்கள்

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகமாக வழிபடப்படும் கிராமக் கடவுளான சாஸ்தாவின் உருவம் எட்டு வகையாக வடிவமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த எட்டு வகையான சாஸ்தாக்களையும் வடமொழிப் பயன்பாட்டில் ”அஷ்டசாஸ்தா” என்று சொல்கின்றனர்.

சந்திரனைப் போல் குளிர்ச்சியான அருளை வழங்கி இல்லற வாழ்க்கையை இனிமையாக்ககக் கூடியவராக இருக்கும் வடிவிலான சாஸ்தாவை “சம்மோகன சாஸ்தா” என்றும், திருமணத் தடைகளை நீக்கித் திருமணத்தை விரைவில் நடத்திட உதவும் வடிவிலிருக்கும் சாஸ்தாவை “கல்யாண வரத சாஸ்தா” என்றும், இறை பக்தியுடன் ஆன்மிகப் பணியில் மகிழ்ச்சி தேடுபவர்களுக்கு உதவும் வடிவிலான சாஸ்தாவை “வேத சாஸ்தா” என்றும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைகளை அளித்து, அக்குழந்தைகளின் வழியாகக் குடும்பத்தில் மகிழ்ச்சியடையச் செய்யும் வடிவில் அமைக்கப்பட்ட சாஸ்தாவை “சந்தான ப்ராப்தி சாஸ்தா” என்றும் சொல்கின்றனர்.

வாழ்க்கையில் வரும் அனைத்து தோசங்களையும் நீக்கிப் பெரும் மகிழ்ச்சியளிக்கும் வடிவில் அமைந்த சாஸ்தாவை “மகா சாஸ்தா” என்றும், கல்விச் சிறப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் வடிவத்திலான சாஸ்தாவை “ஞான சாஸ்தா” என்றும், சனிக்கிரகத் தோசத்தினால் வரும் துன்பங்களிலிருந்து காத்தருளும் சாஸ்தாவை “தரும சாஸ்தா” என்றும், தீயசக்திகளிடமிருந்து காக்கும் கடவுளாகக் குதிரை மீது அமர்ந்த நிலையில் இருக்கும் சாஸ்தாவை “வீர சாஸ்தா” என்றும் அழைக்கின்றனர்.

இந்த எட்டு சாஸ்தாக்களையும் வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து வளங்களும் கிடைப்பதுடன், மகிழ்ச்சியும் சேர்ந்து கிடைக்கும் என்பது சாஸ்தாவை வழிபடுபவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

மஹத்பூதமே சாஸ்தா

தசரதர் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த வேள்வியின் போது, அந்த வேள்வித் தீயிலிருந்து கையில் குழந்தைப்பேறு அளிக்கும் பாயாசத்துடன் ஒருவர் தோன்றினார். அப்படித் தோன்றியவரை அங்கிருந்தவர்கள் "மஹத்பூதம்” என்று அழைத்தனர் என்று வால்மீகி தான் எழுதிய இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளார். வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மஹத்பூதமே சாஸ்தா என்று சிலர் சொல்கின்றனர். பூதமாகத் தோன்றிய சாஸ்தாவுக்குப் பூதநாதன், பூதத்தான் என்கிற பெயர்களும் இருக்கின்றன என்றும் சொல்கின்றனர்.

சங்ககாலத்தில் சாஸ்தா

சங்கப் பாடல்களில் இடம் பெற்றிருக்கும் புலவர்களில், பாண்டியன் கீரன் சாத்தன், அரசன்கிழார் மகனார் பெருஞ்சாத்தன், ஒக்கூர் மாசாத்தியார், பிரான் சாத்தனார், பெருந்தோள் குறுஞ்சாத்தன், மோசி சாத்தனார், மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார் என்று பலரின் பெயர்களில் “சாத்தன்” என்ற பெயர் இடம் பெற்றிருக்கிறது. சாஸ்தாவின் தமிழ்ப் பெயரே சாத்தன் என்று சொல்பவர்களும் இருக்கின்றனர். இந்தப் புலவர்களில் ஒக்கூர் மாசாத்தியார் மட்டும் பெண் புலவர் என்பதால், அவர் சாத்தன் என்ற சொல்லின் பெண்பாலான "சாத்தி” என்ற பெயரைக் கொண்டிருந்தார் என்றும் சொல்கின்றனர்.

கணியான் கூத்து - சாஸ்தா வரலாறு

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருக்கும் குலதெய்வக் கோயில்களில் நடைபெறும் கொடை விழாவில் (கோடை காலங்களில் நடத்தப்படும் விழா என்பதால், முன்பு கோடை விழா என்று அழைக்கப்பட்டுப் பிற்காலத்தில் கொடை விழா என்று மாற்றமடைந்திருக்கலாம்) கணியான் கூத்து என்கிற ஒரு கிராமியக்கலை இடம் பெறுகிறது. இந்தக் கணியான் கூத்தில் குலதெய்வத்தின் வரலாற்றுக்கு முன்பாக சாஸ்தாவின் வரலாறுதான் முதலில் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p25.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License