இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

மதுரை செல்லத்தம்மன் கோயில்

உ. தாமரைச்செல்வி


கோபக் குணமுடையவர்களுக்கு அவர்களின் கோபத்தைக் குறைத்து, மன அழுத்தம், இரத்தம் அழுத்தம் போன்ற நோய்களிலிருந்து விடுபட்டு நல்வாழ்வு வாழ்ந்திடவும் அருள்கிறார் மதுரை சிம்மக்கல் பகுதியில் கண்ணகியின் கோபத்தைக் குறைத்துக் கோயில் கொண்டிருக்கும் செல்லத்தம்மன்.

தல வரலாறு

சோழநாட்டிலிருக்கும் காவிரிப்பூம்பட்டினத்தில் கோவலன், கண்ணகி திருமணம் நடக்கிறது. மணமக்கள் தனி வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர். யாழ் இசைப்பதில் வல்லமை கொண்ட கோவலன் ஆடல், பாடல்களிலும் விருப்பம் கொண்டவன். பூம்புகாரில் ஆடல் தொழில் செய்து வந்த மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக் கண்டு மனம் மகிழ்ந்த அவன், பின்னர் மாதவியின் வீட்டுக்குச் சென்று அவளுடன் வாழத் தொடங்குகிறான். கோவலனின் செல்வம் அனைத்தும் குறைந்து போகிறது. மாதவியுடன் மனம் வேறுபட்டு, அவளை விட்டுப் பிரிந்து மீண்டும் கண்ணகியிடம் வந்து சேர்கிறான்.

தான் இழந்த பொருள் அனைத்தையும் மீட்டுவிடும் நோக்கத்தில், கண்ணகியை அழைத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வெளியேறி, மதுரை நோக்கிச் செல்கிறான். அங்கு கோவலன் வணிகம் செய்வதற்காகக் கண்ணகி தனது காற்சிலம்புகளில் ஒன்றினைக் கழற்றிக் கொடுக்கிறாள். கோவலன் கண்ணகியை மாதரி எனும் ஆயர்குலப் பெண்ணிடம் அடைக்கலமாக இருக்கச் சொல்லிவிட்டு, அந்தச் சிலம்பை விற்பதற்காக நகருக்குள் செல்கிறான்.

நகருக்குள் சென்ற கோவலன், தான் கொண்டு சென்ற சிலம்பை அங்கிருந்த அரண்மனைப் பொற்கொல்லனிடம் காட்டுகிறான். அந்தப் பொற்கொல்லன் முன்பே அரசியின் சிலம்புகளில் ஒன்றைத் திருடி இருந்தான். அந்தக் குற்றத்தை மறைக்க இதுதான் சரியான நேரம் என்று எண்ணிய அவன் அந்தச் சிலம்புடன் அரண்மனைக்குச் செல்கிறான். அப்போது அரசவையில் ஆடல் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியினைக் கண்டு அரசன் தன்னை மறந்து விட்டான் என்று நினைத்து, அரசி மனம் வேறுபட்டு அந்தப்புரம் சென்று விடுகிறாள்.

அரசியைச் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அரசன் அந்தப்புரம் செல்லும் வழியில், பொற்கொல்லன் அரசனைக் கண்டு, அரசியின் சிலம்பு காணாமல் போன குற்றத்தில் கோவலனைத் திருடனாக்கிக் குற்றம் சுமத்துகிறான். இந்நிலையில் அரசன் அது குறித்து முழுமையாக விசாரிக்காமல் கோவலனுக்கு மரண தண்டனை அளித்து விடுகிறான். கோவலனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இச்செய்தி அறிந்த கண்ணகி கோபத்துடன் பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்று வழக்கு உரைக்கிறாள். இந்த வழக்கின் முடிவில் உண்மையறிந்த பாண்டிய மன்னன், தனது தவறான தீர்ப்பை நினைத்து வருந்தி, அவன் அமர்ந்திருந்த அரியணையிலிருந்து கீழே விழுந்து உயிர் துறக்கிறான். அரசனைத் தொடர்ந்து அரசியும் தனது உயிரை விடுகிறாள். அதன் பின்பும் கண்ணகியின் கோபம் குறையவில்லை, தனது கற்பின் வலிமையால் மதுரை மாநகரத்தையே நெருப்புக்கு இரையாக்குகிறாள். அந்தக் கோபத்துடனே அங்கிருந்து வெளியேறி, நீண்ட தூரம் நடந்து சென்ற அவள் சேரநாட்டை அடைகிறாள். அங்கிருந்த குன்றில் வேங்கை மர நிழலில் நின்று கொண்டிருக்கிறாள். அவளைக் கண்ட வேடுவர்களிடம், தான் அடைந்த துன்பம் கொண்ட தனது வாழ்க்கையினை முழுமையாகக் கூறுகிறாள். அதன் பின்னர், அங்கு வானோர் வடிவில் வந்த கோவலனோடு கண்ணகி தெய்வ விமானமேறி வானகம் சென்றார்.

கண்ணகி வழிபாடு


தனது கணவனைக் கொன்றவர்களின் அநீதியை உலகுக்குத் தெரிவிப்பதற்காக கண்ணகி, தனது கற்புத்திறனின் வலிமையால் மதுரையை எரித்துச் சாம்பலாக்கி விடுகிறாள். பின்னர், அங்கிருந்து நடந்தே செல்லும் அவள் சேரநாட்டிலிருக்கும் ஒரு குன்றைச் சென்றடைகிறாள். அங்கிருந்த வேங்கை மர நிழலில் நிற்கும் கண்ணகியிடம், அங்கிருந்த வேடுவர்கள் அவளைப் பற்றிக் கேட்கின்றனர். அவள் காவிரிப்பூம்பட்டினத்தில் தொடங்கி அங்கு வந்தது வரையிலான தனது துன்பக்கதையினைக் கூறுகிறாள். அப்போது, அங்கு அவள் கணவன் கோவலன் வானுலகோருடன் தெய்வம் விமானத்தில் வந்து அவளை அழைத்துச் செல்கின்றனர். இதனைக் கண்ட வேடுவர்கள் அவளைத் தெய்வமாகப் போற்றி வணங்குகின்றனர்.

இந்தச் செய்தியறிந்த சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்து வந்து, அதைக் கங்கைக் கரையில் நீராட்டி, அக்கல்லிலிருந்து கண்ணகி சிலை ஒன்றைச் செய்து, தனது தலைநகரான வஞ்சி மாநகரில் அமைத்த கோயிலில் நிறுவுகிறான். இந்த விழாவிற்கு குடகக் கொங்கரும் மாளுவ வேந்தனும் கடல்சூழிலங்கை கயவாகு வேந்தனும் வந்திருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இதைத் தொடர்ந்து கண்ணகிக்கு இங்கு மட்டுமில்லாமல் இலங்கை போன்ற நாடுகளிலும் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப் பெற்று வருகின்றன. கண்ணகி, பத்தினித் தெய்வம், கற்புக்கடவுள் எனும் பெயரில் வழிபாடு செய்யப்பட்டு வருகிறாள்.


பிற்காலத்தில், கண்ணகியின் கற்புத்திறனை உணர்ந்த மக்கள், அவளைத் தெய்வமாக நினைத்து வழிபடத் தொடங்கினர். மதுரையில் அவள் தங்கியிருந்த இடத்தில் அவளுக்குச் சிலை அமைத்துக் கோயில் கட்டி வழிபாடுகளைச் செய்யத் தொடங்கினர். இக்கோயில் அமைக்கப்பட்ட நேரத்தில், கோயில் இருந்த பகுதியில் அடிக்கடி தீ விபத்துகள் நடந்தன. கண்ணகியின் சிலை கோபத்துடன் இருப்பதாலேயே இது போன்ற தீ விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன என்று அங்கிருந்த மக்கள் நினைக்கத் தொடங்கினர்.

இது குறித்து, மக்கள் அனைவரும் அப்போது ஆட்சியிலிருந்த மன்னன் செண்பகப் பாண்டியனிடம் தெரிவித்தனர். மன்னன் தனது அமைச்சர்களுடன் இது குறித்துப் பேசினான். அமைச்சர்களிடமிருந்து சரியான ஆலோசனை எதுவும் கிடைக்காத நிலையில், மன்னன் கவலையடைந்தான். இந்நிலையில் ஒருநாள் இரவில் அவன் கனவில் தோன்றிய சிவபெருமான், அந்த இடத்தில் பார்வதி சிலையினை வைத்துக் கோயிலை மாற்றி அமைக்கும்படி தெரிவித்தார். அதன் பிறகு மன்னன், அம்பாள் சிலை ஒன்றை வடிவமைக்கச் செய்து, அந்த அம்பாளையே முதன்மை தெய்வமாக்கி அந்தக் கோயிலை மாற்றியமைத்தான். அதன் பின்னர் அந்தப்பகுதியில் தீ விபத்துகள் இல்லாமல் போயின.

இந்தக் கோயிலில் அமைக்கப்பட்ட பார்வதி சிலை, அந்த மன்னன் பெயரைக் கொண்டு செண்பகத்தம்மன் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அந்தப் பெயர் மருவி செல்லத்தம்மன் என்று ஆகிவிட்டது என இக்கோயிலின் தலவரலாற்றைச் சொல்கின்றனர்.


கோயில் அமைப்பு

ஒரு அசுரனைக் கொன்ற நிலையில், கையில் கொன்றை மலர் ஒன்றினைப் பிடித்தபடி வடக்கு நோக்கி செல்லத்தம்மன் இருக்கிறார். கோயிலின் முன் மண்டபத்தில் கிழக்கு நோக்கி செல்லத்தம்மன் உற்சவ அம்பிகைக்குத் தனிச்சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அமைக்கப்பட்டுள்ள சன்னதியில் வடக்கு நோக்கியபடி துர்க்கையம்மன், இடைச்சியம்மன் (மதுரை வந்த கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த மாதரி, இடைச்சியம்மன் எனும் பெயரில் இடம் பெற்றிருக்கிறார்) சிலைகள் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து கிழக்கு நோக்கி, கையில் சிலம்புடன் இருக்கும் பெரிய அளவிலான கண்ணகி சிலை இருக்கிறது. இதையடுத்து, மீனாட்சி, சிவபெருமான், அய்யனார், காலபைரவர், ஐயப்பன் சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன. வெளிப்பகுதியில் செல்லத்தம்மனுக்கு எதிராகப் பேச்சியம்மன் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், கோயில் வளாகத்தில் நாகர், கருப்பசாமி போன்றவர்களுக்கும் தனிச்சன்னதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

வழிபாடு

இக்கோயிலில் செல்லத்தம்மனுக்கு நாள்தோறும் வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. செல்லத்தம்மனுக்கு வழிபாடு நடந்து முடிந்த பின்பு கண்ணகிக்கும் தனி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. கோபம் குணமுடையவர்கள் தங்களின் கோபத்தைக் குறைக்க வேண்டியும், மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயிலிருந்து விடுபட வேண்டியும் செல்லத்தம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்து வணங்குகின்றனர். இது போல், கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் கணவன், மனைவியர் ஒன்றுபட்டு வாழ்ந்திட இங்குள்ள கண்ணகிக்கு எலுமிச்சை மாலை, தாலிப்பொட்டு அணிவித்து வேண்டுகின்றனர். திருமணமாகாத பெண்கள், தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டுமென்று செல்லத்தம்மன், கண்ணகி என இருவரையும் வேண்டிச் செல்கின்றனர்.

சிறப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தை பிரம்மோற்சவ விழாவின் போது நடைபெறும் சிவபெருமான், அம்பாள் திருக்கல்யாண நிகழ்வின் போது, செல்லத்தம்மன், மீனாட்சியம்மன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். அங்கு சிவபெருமான் சன்னதி முன்பாக இருக்கும் ஆறுகால் மண்டபத்தில் வைக்கப்படுகிறார். அப்போது, சிவபெருமான் சன்னதியிலிருந்து எடுத்து வரப்படும் பட்டுச்சேலை செல்லத்தம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. பின்பு திருமாங்கல்யம் சூட்டப்படுகிறது. மறுநாள் செல்லத்தம்மன் திருமணப்பட்டுடன் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அமைவிடம்

மதுரை மாநகரின் மத்தியப் பகுதியான சிம்மக்கல் பகுதியில் இக்கோயில் அமைந்திருக்கிறது. மதுரை நகரில் இயக்கப்படும் பெரும்பான்மையான நகரப் பேருந்துகள் சிம்மக்கல் பகுதி வழியாகவே செல்கின்றன.

(தினத்தந்தி - ஆன்மிகம் இதழில் வெளியான கட்டுரை)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p32.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License