இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

கைலாசபட்டி கைலாசநாதர் கோயில்

உ. தாமரைச்செல்வி


சைவசமயக் கடவுளான சிவபெருமான் தனது மனைவியான பார்வதிதேவியுடன் இருக்கும் கைலாயமலைக்கு நேரடியாகச் சென்று வழிபட்டால் வாழ்வில் அனைத்து நற்பலன்களையும் பெறமுடியும் என்கிற தொன்ம நம்பிக்கை பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இருப்பினும் கைலாயமலைக்குச் செல்லும் அதிகத்தொலைவு, நெடும்பயணம், மலைவழிப் பயணம், அங்கு நிலவும் அதிகக் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் கைலாயமலையைச் சுற்றி வந்து சிவபெருமானை வணங்குவது என்பது பலருக்கும் சாத்தியமில்லாததாகவே இருந்து வருகிறது. கைலாயமலையில் வசிக்கும் கைலாயநாதரை அருகிலிருக்குமிடத்திலேயே வழிபட்டு நற்பலன்களை முழுமையாகப் பெற்றிட வேண்டும் என்கிற நோக்கத்தில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கைலாயநாதர் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கைலாய மலை

இந்து சமயம், புத்த சமயம், சமண சமயம் மற்றும் திபெத்தியர்களின் ஆதிசமயமான பொம்பா சமயம் போன்றவை கைலாயமலையைப் புனிதத்தலமாகக் கருதுகின்றன. இமயமலைத் தொடர்களில் ஒன்றாக இருக்கும் இந்தக் கைலாயமலையை நொடித்தான் மலை என்றும் அழைப்பதுண்டு. சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபெத் நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் இம்மலை புனிதமலையாகக் கருதப்படுவதால் இங்கு மலையேற்றத்துக்கு அனுமதி இல்லை. ஆனால், இம்மலையைச் சுற்றி 52 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாதையின் வழியாக இம்மலையைச் சுற்றி வருவது புனிதக் கடமையாகக் கருதப்படுவதால் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இம்மலைப்பாதையில் பொம்பா சமயத்தினர் வலமிருந்து இடமாகவும், இந்து சமயத்தினர் இடமிருந்து வலமாகவும் இம்மலையைச் சுற்றி வருகின்றனர்.

இந்து சமயப்பிரிவுகளில் ஒன்றான சைவசமயக் கடவுளான சிவபெருமான் தனது மனைவியான பார்வதிதேவியுடன் கைலாயமலையில் இருப்பதான தொன்ம நம்பிக்கை பன்னெடுங்காலமாக இருக்கிறது. சைவசமயத்துக்குத் தொண்டாற்றிய சமயக்குரவர் நால்வருள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் எனும் மூவராலும் பாடல் பெற்ற தலங்களில் கைலாயமும் ஒன்று. சைவசமயத்தினர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது கைலாயமலையைச் சுற்றி வந்து சிவபெருமானையும், பார்வதிதேவியையும் வணங்கிட வேண்டுமென்பது புனிதக்கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.



கைலாயமலைக்குச் செல்லும் அதிகத்தொலைவு, நெடும்பயணம், மலைவழிப்பயணம், அங்கு நிலவும் அதிகக் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் கைலாயமலைக்குச் சென்று வழிபடுவது அனைவருக்கும் இயலாததாகவே இருந்து வருகிறது. இதனால் கைலாயநாதரை அருகிலிருக்குமிடத்திலேயே வழிபட்டு நற்பலன்களைப் பெற்றிட வேண்டும் என்கிற நோக்கத்தில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கைலாயநாதர் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அகத்திய முனிவரின் சீடர்களுள் ஒருவரான உரோமசரிஷியால் உருவாக்கப்பட்டு வழிபடப்பட்ட நவகைலாயக் கோயில்கள் முதன்மை பெறுகின்றன. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு காலங்களில், காஞ்சிபுரம், திங்களூர், நெடுங்குடி, தாரமங்கலம், வானகரம், கோவளம், நல்லூர், முடியனூர், கைலாசபட்டி என்று பல்வேறு ஊர்களில் கைலாசநாதர் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.


கைலாசபட்டி கைலாசநாதர் கோயில்

இப்படி அமைக்கப்பட்ட கைலாசநாதர் கோயில்களில் பெரியகுளம் அருகிலுள்ள கைலாசபட்டி கைலாசநாதர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மாறவர்மன் எனும் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. தற்போது புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் கைலாசநாதர், பெரியநாயகியம்மன் ஆகியோருக்கு அருகருகே தனிக்கோயில்கள் இருக்கின்றன. இக்கோயில்களின் கருவறை வெளிப்புறச் சுற்றுச்சுவர்களில் பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, கணபதி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி, விஷ்ணுதுர்க்கை போன்ற சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன. இக்கோயில் வளாகத்தினுள் விநாயகர், வள்ளி தெய்வானையுடனான முருகன், பைரவர், சூரியன், சந்திரன், சண்டிகேசுவரர், நவக்கிரகங்கள், சப்தகன்னியர் போன்றவர்களுக்கும் சிறிய அளவிலான தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சப்தகன்னியர்

மகிசாசுரன் கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாக வேண்டுமென்று வரம் பெற்றிருந்தான். தான் பெற்ற வரத்தால் தன்னை யாராலும் அழிக்க முடியாது என்று கருதிய மகிசாசுரன் தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் பல்வேறு வழிகளில் துன்புறுத்தி வந்தான். மகிசாசுரனால் துன்பமடைந்த தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்களைக் காத்தருள வேண்டினர். மகிசாசுரனைக் கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிக்க முடியும் என்பதால் சிவபெருமான் பார்வதிதேவியிடம் மகிசாசுரனை அழித்து அனைவரையும் காத்தருளும்படி வேண்டினார். பார்வதிதேவி தன்னிடமிருந்து பிராம்மி, மாகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்தகன்னியர்களைத் தோற்றுவித்து மகிசாசுரனை அழித்தார். மகிசாசுரன் கொல்லப்பட்டதால் சப்தகன்னியர்களைக் கொலைப்பாவம் சூழந்தது. சப்தகன்னியர்கள் சிவபெருமானிடம் தங்கள் பாவத்தைப் போக்கிட வேண்டினர்.



சிவபெருமான் சப்தகன்னியர்கள் பூலோகம் சென்று தன்னைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால் அந்தப் பாவம் விரைவில் விலகும் என்று சொல்லி அனுப்பி வைத்தார். சப்தகன்னியர்களுக்குப் பாதுகாப்பாகத் தன்னுடைய வடிவான வீரபத்திரனை உடன் அனுப்பி வைத்தார். வீரபத்திரன் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து, சப்தகன்னியர்களுக்கு உபதேசம் செய்து சிவபெருமானை வணங்கி வரச் செய்தார். குறிப்பிட்ட கால முடிவில் சப்தகன்னியர்களின் கொலைப்பாவமும் நீங்கியது. இவர்களுக்குத் துணையாக விநாயகரும் இருந்தார். இதனால், சப்தகன்னியர்கள் சிலைகளுடன், தட்சிணாமூர்த்தி, விநாயகர் சிலைகளும் சேர்ந்து இங்கு இடம் பெற்றிருக்கின்றன. சில கோயில்களில் தட்சிணாமூர்த்தி பெண் வடிவில் வீரபத்திரை எனும் பெயரிலும், விநாயகர் பெண் வடிவில் விநாயகி எனும் பெயரில் சிலைகளாக அமைக்கப்பட்டிருப்பதுண்டு. இங்குள்ள பாறைகளுக்கிடையிலான கைலாய தீர்த்தத்தில் தட்சிணாமூர்த்தியின் உபதேசத்தின்படி சப்தகன்னியர்கள் நீராடி கைலாசநாதரை வணங்கி மகிசாசுரனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்றதாக தொன்ம நம்பிக்கை உள்ளது.


முழுநிலவு நாட்களில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி என்பவர் இந்தக் கோயிலின் தலமரமாக இருக்கும் அத்திமரத்தினடியில் அமர்ந்து தியானம் செய்து கைலாசநாதரை வணங்கி வருவதான தொன்ம நம்பிக்கையும் இருக்கிறது. இதனால் இம்மலைக்குத் தியானமலை என்று மற்றொரு பெயரும் இருப்பதாகக் கூறுகின்றனர்.

இக்கோவிலின் அடிவாரத்தில் குடைவரையாக உருவாக்கப்பட்ட வெள்ளை விநாயகர் சிலையுடனான சிறிய கோயில் ஒன்றும் உள்ளது. பிள்ளையார்பட்டிக்கு அடுத்தபடியாக இங்குதான் குடைவரையாக அமைக்கப்பட்ட வெள்ளை விநாயகர் இருக்கிறார். இந்த விநாயகருடன் சந்திரலிங்கம் ஒன்றும் இங்கு இருக்கிறது.

சிறப்புகள்

* சித்திரை முதல் நாளன்று கைலாசநாதர் கோயில் கருவறையிலுள்ள லிங்க வடிவத்தின் மீது சூரியஒளி விழுவது இக்கோயிலின் தனிச்சிறப்பாக இருக்கிறது.

* இந்தக் கோயிலில் முழுநிலவு நாட்களில் கிரிவலம் செய்து கைலாசநாதரையும், பெரியநாயகியம்மனையும் வழிபட்டு, கைலாயம் சென்று வழிபட்டால் கிடைக்கும் அனைத்துப் பலன்களையும் பெற முடியும்.

* இங்குள்ள கைலாசநாதர், பெரியநாயகியம்மனைத் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வருபவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத உயர்பதவிகள் கிடைக்கும்.

* இக்கோயிலின் அடிவாரத்திலுள்ள சந்திரலிங்கத்தையும், வெள்ளைவிநாயகரையும் வழிபட்டால் தீராத நோய்கள் நீங்கும்.



அமைவிடம்

தேனியிலிருந்து பெரியகுளம் செல்லும் வழியில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் கைலாசபட்டி எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து மேற்கு நோக்கி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கைலாசநாதர் கோயில் அமைந்திருக்கிறது.

(தினத்தந்தி - ஆன்மிகம் இதழில் வெளியான கட்டுரை)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p35.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License