இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

திங்களூர் கைலாசநாதர் கோயில்

மீனாட்சி சுந்தரமூர்த்தி


தஞ்சை மாவட்டத்தில் திருவையாறுக்கு அருகில் திங்களூரில் அமைந்திருக்கும் கைலாசநாதர் உடனுறை அம்பிகை பெரியநாயகி கோயில் நவக்கிரகத் தலங்களில் இரண்டாவது தலமாகவும், சந்திரனுக்குரியதாகவும் அமைந்திருக்கிறது.

தலவரலாறு

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி மந்தரமலையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி திருப்பாற்கடலைக் கடைந்த போது துன்பம் தாளாமல் வாசுகி ஆலகால விடத்தைக் கக்கியது.அனைவரையும் மூழ்கடிக்கச் செய்யும் அப்பெரும் நஞ்சினை ஈசன் விழுங்கி அனைவரையும் காத்தார். இறைவி, இறைவனின் கழுத்தைப் பிடித்துத் தடுத்தார். அதனால் நஞ்சு அங்கேயே தங்கி நஞ்சுண்டகண்டன் ஆனார் ஈசன். ஆனாலும் நஞ்சின் வெப்பத்தாக்கத்தால் தேவாசுரர் மயக்கமுற்றனர். அப்போது பாற்கடலிலிருந்து வந்த சந்திரனின் ஒளியால் அவர்கள் மயக்கம் தெளிந்தனர்.

தனிச்சிறப்புப் பெற்ற சந்திரன் உயிரினங்களை வெப்பத்திலிருந்து காப்பவன், மனிதரின் மனமதை இயக்குபவன். செடி, கொடிகளிடம் மருத்துவத் தன்மையை உண்டாக்குவதும் சந்திரனின் ஒளிக்கற்றைகளே. தட்சனின் இருபத்து ஏழு புதல்வியரை மணந்தான் சந்திரன். திருமணத்தின் போது தட்சன் அனைவரிடமும் சந்திரன் பாகுபாடின்றி அன்பு செலுத்த வேண்டும் என்று கூறியதை ஏற்றுக் கொண்டான். ஆனால் அப்படி நடக்கவில்லை, ரோகிணியிடமே அவன் மனம் சென்றது. மற்ற மனைவியரைப் புறக்கணித்தான். அவர்கள் தமது தந்தை தட்சனிடம் முறையிட தட்சன் கொடுத்த வாக்கை மறந்து பாரபட்சமாக நடந்து கொண்டதால், `உனது கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்ந்து போகக் கடவது` எனச் சாபமிட்டான். இதனால் தேய்ந்து கொண்டே வந்த சந்திரன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி சிவபெருமானை வழிபட்டு நீண்ட காலம் தவம் செய்தான் ஒரு பங்குனி மாதப் பௌர்ணமி நாளில் இறைவன் சந்திரனுக்குக் காட்சி கொடுத்து, அவனுடைய சாபம் தீர்த்தார். பதினைந்து நாள் தேய்ந்து மூன்றாம் பிறையாகி மறுபடியும் கலைகள் வளர்ந்து முழுமை அடையுமென வரமும் தந்தார். மூன்று கலைகள் கொண்ட பிறையைச் சடையில் தாங்கி அருள் தந்து ஈசன், ‘பிறை சூடிய பெருமான்’ (சந்திரசேகரன்) ஆனார். சந்திரன் தனக்கு அருள் வழங்கிய ஈசனிடம், இங்கு வரும் அன்பர்களின் குறை தீர்க்க அனுமதி வேண்டும், எல்லையிலாக் கருணைக் கடலாம் ஐயன் அம்மையோடு இங்கு விளங்க வேண்டுமென வேண்டிப் பெறுகிறான். ஒவ்வொரு பிறையாக வளர்வதை வளர்பிறை எனவும், ஒவ்வொரு பிறையாகத் தேய்வதைத் தேய்பிறை என்றும் வழங்குகிறோம். வளர்பிறையில் நமக்கு நோய்களின் தாக்கம் குறைவதும், தேய்பிறையில் அதுவும் அமாவாசையில் அதிகமாவதும் இதனால்தான் என்கிறது இக்கோயிலின் தல வரலாறு.



சந்திரனின் தன்மையும், உகந்தவையும்


1. இராசி - கடகம்

2. ஒளி - சந்திரகாந்தம் (வெள்ளை நிற அலைகள்)

3. தன்மை - குளிர்ச்சி.

4. நிறம் - வெண்மை

5. வாகனம் - வெள்ளைக் குதிரை

6. தானியம் - நெல், பச்சரிசி

7. மலர் - அல்லி, வெள்ளை அரளி

8. ஆடை - வெள்ளைத் துணி

9. இரத்தினம் - முத்து

10. உலோகம் - ஈயம்

11. உணவு - தயிர் சாதம்



கோயில் அமைப்பு

இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் இராஜசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டது. கிழக்கு நோக்கியுள்ள இக்கோயிலுக்குத் தெற்கிலமைந்த வாயில் உள்ளது. மூலவரான கைலாசநாதர் கிழக்கு நோக்கியும், அன்னை பெரியநாயகி தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். வெளிச்சுற்றை வலம் வருகையில், விடம் தீர்த்த விநாயகரும், சுப்பிரமணியரும், யோகநிலையில் தட்சிணாமூர்த்தியும், கஜலட்சுமியும், மனைவியுடன் சண்டிகேசுவரரும் இருக்கின்றனர். இக்கோயிலில் சந்திரன் மேற்கில் இறைவனைப் பார்த்தபடி தனிச் சந்நிதியில் இருக்கின்றார். திருக்கோவிலின் உள்மண்டபத்தில் இடப்புறம் அப்பூதியடிகள், அவர் மனைவி, மூத்த திருநாவுக்கரசு. இளைய திருநாவுக்கரசு ஆகியோரின் சிலைகள் அமைந்துள்ளன. இங்குள்ள குளம், ‘சந்திர தீர்த்தம்’ எனப்படுகிறது.

வழிபாடுகள்

இக்கோயிலில் காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன. இங்கு ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். இக்கோயிலில் சந்திரன் சாபம் நீங்கிய பங்குனி மாதப் பௌர்ணமி நாளில், ஒவ்வொரு ஆண்டும் சந்திரனின் ஒளி கைலாசநாதர் மீது விழுகிறது. அன்று இறைவிக்கும் இறைவனுக்கும் சிறப்பு அபிடேகமும், சந்திரனுக்கு இலட்சார்ச்சனையும் நடைபெறும். மகா சிவராத்திரி, பிரதோஷம், மார்கழி மாதத் திருவாதிரை, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகியவை முக்கியமான விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. பங்குனி உத்திரத்தன்று காலை ஆறு மணிக்கு சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழுவதால் அன்று சூரிய வழிபாடும், மறுநாள் பௌர்ணமிப் பிரதமையில் மாலை சந்திர ஒளி லிங்கத்தின் மீது விழுவதால் சந்திர வழிபாடும் நடைபெறும்.

வெள்ளை நிற ஆடை உடுத்தி, முத்து மாலை அணிந்து, பௌர்ணமி விரதமிருந்து, வெள்ளை நிற மலர்கள் சாற்றி வழிபட வேண்டும். சந்திர தோஷம் உள்ளவர்கள் சந்திர தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், இறைவியையும், சந்திரனையும் நெய்விளக்கு ஏற்றி வழிபட நலம் உண்டாகும். நீர் தொடர்பான நோய்களுக்குச் சந்திரனே காரணமாவார் என்பதால், காலரா, நுரையீரல் தொற்று போன்ற நோய்கள் குணமாக சந்திரனை வழிபடலாம். மேலும், இக்கோயிலில் வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்கும். மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவை அகலும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்கி அன்பு பெருகும். அறிவுத்திறன் பெருகும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.



கூடுதல் சிறப்புகள்

* இது சந்திர தோஷப் பரிகாரத் தலமாகும்.

* இது தேவாரப்பாடல் பெற்றது. அப்பரும், சுந்தரரும் பாடிப் பரவிய பேறுடையது.

* 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதியடிகள் பிறந்து ஈசன் புகழ் சாற்றியது.


நிலாச்சோறூட்டல்

சந்திரனுக்கான இக்கோயிலில் குழந்தைக்கு முதல் சோறூட்டும் விழாவும் நடைபெறுகிறது. இதனை `நிலாச்சோறூட்டல்` எனகின்றனர். அசுவினி, மிருக சீரிடம், உத்திரம், சதயம், சுவாதி, திருவோணம், ரேவதி நட்சத்திர நாட்களில் சந்திர ஓரையில் சோற்றுடன் நெய்யும், பாலும், தேனும் கலந்து நிலவையும், பசுவையும் காட்டி குழந்தைக்கு ஊட்டுவதால் எந்த நோயும் வராது, அப்படியே வந்தாலும் மருந்து தந்தவுடன் குணமாகி விடும். சந்திரன் சூரியனிடமிருந்து வாங்கும் ஒளியை நீருடன் சேர்த்துக் குளிர்ச்சியாக மாற்றி அளிப்பவன். ஆதலால் குழந்தைக்கு நீரினின்று காப்பும், அவனிடமுள்ள மருத்துவத் தன்மையால் நோயும் அண்டாது என்கின்றனர்.

தலப்பெருமை

திருநாவுக்கரசர் திங்களூர் இறைவனை வணங்க வருகிறார். ஊரில் நுழைந்தவுடன் திருநாவுக்கரசர், தமது பெயரில் பாடசாலை, தண்ணீர்ப் பந்தல், அன்னசத்திரம், கோசாலை (பசுக்களைப் பராமரிக்கும் இடம்), தருமசாலை எனப் பலவும் கண்டு எதிர்ப்பட்டவரை, இவற்றை அமைத்தவர் யாரென கேட்கிறார். அவர்கள் கருணை உள்ளம் கொண்ட செல்வந்தர் அப்பூதியடிகள் எனச் சொல்லி, அவரது வீட்டினையும் காட்டுகின்றனர். நாவரசர் அங்கு சென்று திருவைந்தெழுத்து சொல்லக் கண்ட அப்பூதியடிகள் சிவனடியாரென வணங்கி வரவேற்கிறார்.

நாவரசர் அறச்சாலைகளைத் தம் பெயரில் நிறுவிடாது வேறோர் பெயரில் அமைத்தது ஏன் என்று கேட்டதும், அப்பூதியடிகள் சினமுற்று, `அப்பர் (திருநாவுக்கரசர்) பெருமை அறியீரோ! உழவாரப்பணி புரியும் அவர், கடலில் மிதந்தும், சுண்ணாம்புக் காளவாயில் குளிர்ச்சியும், இடற வந்த யானை வணங்கவும், ஈசனால் அருளப் பெற்ற பெருமையும் உடையவர். அவரே நான் போற்றும் ஆசான், அவர் பெயர் விளங்கச் செய்வதே என் பணி` என்கிறார்.

திருநாவுக்கரசர் அவரைக் கண்டிருக்கிறீரோ? எனக் கேட்க, அப்பூதியடிகள் இல்லை, என்கிறார்.

`அந்த எளியவன் நானே` என்றிட, ‘நான் செய்த தவம் என்னே`என மனைவி பிள்ளைகளுடன் நாவரசரைப் பணிந்து, இல்லின் உள்ளே அமர்த்தி அமுதுண்ண வேண்டுகிறார் அப்பூதியடிகள். அப்பரும் இசைந்து கைலாசநாதரை வணங்கச் செல்கிறார். அப்பூதியடிகளின் மனைவியார் நேர்த்தியாக உணவு சமைத்து, தம் புதல்வனை அழைத்து வாழையிலை கொண்டு வரச் சொன்னார். தோட்டத்தில் வாழையிலை எடுக்கும் போது, அங்கிருந்த பாம்பு ஒன்று அவனைத் தீண்டுகிறது. மைந்தன் மயங்கிய நிலையில் அன்னையிடம் இலைகளைத் தந்து நடந்தது கூறி இறந்து போகிறான். மனைவியின் கதறல் கேட்டு வந்த அப்பூதியாரும் ஆறாத் துயரம் அடைந்து, பின் அப்பர் பசியோடு அமுதுண்ண வரும் வேளையில் இதனை உரைப்பது சரியன்று என்று மனைவியையும் தேற்றி மகனைப் பாயில் சுருட்டி வைக்கிறார்.

அவ்வேளையில் அப்பரும் வரக் கண்ணின் நீர் மறைத்து வணங்கி அமுது படைக்கின்றார் அம்மையார். உணவுண்ண அமர்ந்த அப்பர் அனைவருக்கும் திருநீறளித்து,` மூத்தவன் எங்கே வரச்சொல்லும்` என்கிறார். அப்பூதியடிகள் அவன் இப்போது வரமாட்டான், அமுது செய்யுங்கள்` என வேண்டுகிறார். நாவரசர் ஏன் எனக் கேட்க, அவ்வளவில் உடைந்துபட்ட அம்மையார் அரவு தீண்டி பாலகன் இறந்ததைச் சொல்கிறார். துடித்துப் போன அப்பர் மைந்தனைக் கையிலேந்தி வந்து கைலாசநாதரின் திருமுன் கிடத்தி,

‘ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே`

எனத் தொடங்கி, இரண்டு கொலாம், மூன்று கொலாம் என்று பத்து கொலாம் எனப் பதிகம் பாடிப் பணிந்து விடம் தீர்க்க வேண்டுகிறார். அவ்வளவில் பாலகன் விடம் நீங்கி, உறங்கி எழுந்தவன் போல் எழுந்தான். அவனோடு வந்து மீண்டும் அமர்ந்து அமுதுண்டார் அப்பர். இது அப்பூதியடிகளின் பெருமை உலகறியச் செய்யவும், நாவரசர் புகழ் ஓங்கவும் ஈசன் நிகழ்த்திய விளையாடல் இது.

அன்று முதல் இன்று வரை இவ்வூரில் எவருக்குப் பாம்பு கடித்தாலும் சந்திர தீர்த்தத்தின் நீரைப் பருகினால் விடம் ஏறாது எனவும், எவரும் அரவு தீண்டி இறப்பதில்லை எனவும் சொல்லப்படுகிறது.



அமைவிடம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், திருப்பழனம் அருகிலிருக்கும் திங்களூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோயிலுக்குச் செல்ல கும்பகோணம், திருவையாறு போன்ற இடங்களிலிருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p40.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License