இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
சங்க இலக்கியக் கதைகள்

காத்திருப்பது இனிது

முனைவர் ப. பாண்டியராசா


அன்றைக்குப் பார்த்து என்னவோ முல்லையின் வீட்டில் இரவுச் சாப்பாட்டுக் கடை முடியவே வெகுநேரம் ஆயிற்று. அது ஒருவாறு முடிந்தவுடன் முத்தம்மாள் பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்து விட்டாள். அம்மாக்காரியோ வெற்றிலை உரலை எடுத்து வைத்துப் பாக்கைப் போட்டு இடிக்கத் தொடங்கிவிட்டாள். அப்பாவோ மினுக் மினுக் என்று எரிகின்ற விளக்கு வெளிச்சத்தில் ஏதோ ஏட்டுக்கட்டை எடுத்துப் பிரித்துக் கொண்டிருந்தார்.

முல்லைக்கு இருப்புக்கொள்ளவில்லை. அன்றைக்கு இரவு அவளின் ‘அவன்’ வருவதாகத் திட்டம். வீட்டுக் கொல்லைப்புறத்தில் மரத்தடியில் அவர்கள் சந்திப்பது வழக்கம்.

“எனக்குத் தூக்கம் வருது” என்று பொய்யாகக் கொட்டாவிவிட்டு முல்லை படுக்கை அறையில் பாயை விரித்துப் படுத்துவிட்டாள். தூக்கம் வந்தால்தானே! ஒருவழியாக வீட்டில் அங்கங்கே இருந்த விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டன. மாடக்குழியில் மட்டும் ஒரு சிறிய விளக்கை எரியவிட்டு முத்தம்மாவும் தூங்கப்போய்விட்டாள். முல்லையின் அன்னை சிறிது நேரம் கழித்து, முல்லையின் பக்கத்தில் இன்னொரு பாயை விரித்துப் படுத்துக் கொண்டாள்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. வீட்டிலுள்ளவர்கள் எல்லாரும் நன்கு தூங்கிக்கொண்டிருந்தார்கள், முல்லையைத் தவிர. வீட்டிலுள்ளவர்கள் மட்டுமா? ஊரே குளிர்காலத்தில் முடங்கிப் போய்க் கிடந்தது. ஏறக்குறைய நள்ளிரவு நேரம் இருக்கும்... முல்லை மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். ஓசையின்றி எழுந்து வெளியே வந்தாள். பின்னர் மிகவும் மெதுவாக எட்டெடுத்து வைத்துக் கொல்லைக் கதவை மிக மிக மெதுவாகத் திறந்தாள். திரும்பி வீட்டுக்குள் ஒரு பார்வை பார்த்தாள். பின்னர் மெல்ல அடியெடுத்து வைத்து வெளியே வந்து கொல்லைக்கதவை மீண்டும் சாத்தினாள். வீட்டுக்குப் பின்பக்கம் இருந்த திறந்தவெளியில் வேலியாக இருந்த நொச்சி மரத்திற்குக் கீழே வந்து நின்றாள்.

கொஞ்சங்கூட இரக்கமில்லாத வாடைக்காற்று ஊளையிட்டுக்கொண்டு பலமாக வீசியது. ஊகூம், அவன் இன்னும் வரவில்லை. நொச்சிமரத்தின் தாழ்ந்த கிளையொன்று அவன் வரும் வழியை மறைத்துக் கொண்டு இருந்தது. அவ்வப்போது அதனை விலக்கிவிட்டு அவன் வருகிறானா என்று ஆவலுடன் வழியை உற்று நோக்கிக் கொண்டு இருந்தாள்.

தொலைவில் ‘சர சர’-வென்று சத்தம் கேட்டது. அவன்தான் வந்துவிட்டானோ என்று ஆசையுடன் தொங்கிக் கொண்டிடுந்த நொச்சிக்கிளையை அவசரம் அவசரமாக விலக்கிவிட்டதில் ’படக்’கென்று அந்த கிளை முறிந்து கையோடு வந்துவிட்டது. காலையில் பார்த்து அது எப்படி முறிந்தது என்று யாராவது தூண்டித்துருவ ஆரம்பித்தால்? யாரும் என்னமும் நினைத்துக் கொள்ளட்டும் - இன்னமும் அவனைக் காணோமே! என்று அவள் கவலைப்படத் தொடங்கிய போது அவன் வந்து நின்றான்.

அந்தக் குளிர்காற்றிலும் வியர்க்க விறுவிறுக்க. அவள் கோபத்துடன் இருப்பாள் என்று எதிர்பார்த்து வந்தவுடன் அவள் கைகள் இரண்டையும் வளையல்களுடன் பற்றிக் கொண்டான். அந்தக் கைகளை ’வெடுக்’ கென்று பிடுங்கிக் கொண்டாள் அவள். “என்ன? கோபமா?” என்றவன் வியப்படைந்துபோகுமாறு, தன் இரு கைகளையும் விரித்து அவன் முதுகுப்பக்கம் கொண்டுசென்று கைகளை வளைத்து அவனை இறுகக் கட்டிக்கொண்டாள் அவள். அவனும் அவளை அணைத்து இருவரின் மார்பும் ஒன்றுடன் ஒன்று நன்கு பதியும்படி இறுக்கிக் கொண்டான்.

“ரொம்ப நேரமாச்சே, காத்துக்கிடந்து உன் காலெல்லாம் வலிக்குமே’ன்னு ஓடோடி வந்தேன் தெரியுமா?” மெல்ல அவன் கிசுகிசுத்தான். என்னதான் ஊர் தூங்கிக்கிடந்தாலும் உரத்துப் பேசமுடியாதல்லவா!

“ஒங்க வேலையிலேயே மும்முரமா இருந்திருப்பீங்க, என்னயப் பத்தி நெனக்க நேரம் இருந்திருக்காது ஐயாவுக்கு” அவள் பொய்க்கோபம் காட்டினாள்.


”எந்த நேரமும் ஒன்னோட நெனப்புத்தான் எனக்கு” அவன் சமாதானப்படுத்தினான்.

“...க்கும், தெரியாதாக்கும் எனக்கு! நீங்க மட்டும்தானா, ஒங்க ஊர் ஆம்பிளய்ங்க எல்லாமே அப்படித்தானே!”

“என்ன தெரியும் ஒனக்கு, எங்க ஊர் ஆம்பிளய்ங்களப் பத்தி?”

“தெரியும், தெரியும்; காட்டுக்குள்ள வேட்டையாடப் போனா விடிய விடிய வீட்டு நெனப்பே இல்லாம காட்டுக்குள்ள திரிவாங்களாம் ஒங்க ஊரு ஆளுக; பேயாத பெருமழை பேஞ்சு ஒதுங்கக் கூட இடமில்லாமப் போகும்போதுதான் வீட்டு நெனப்பு வந்து கூட்டுக்குள்ள வந்து ஒதுங்குற மாதிரி, வீட்டுக்கு வந்து பாய விரிச்சுப் படுத்துக்கிருவாங்களாம், கேள்விப்பட்டிருக்கேன்”

”அந்த மாதிரி நானும் ஒன் நெனப்பெ இல்லாம என் வேலையிலேயே மும்முரமா இருக்கே’ன்னு சொல்றயா?”

“புரிஞ்சாச் சரி”

“காத்துக்கிடப்பாளே ஒருத்தி, காலெல்லாம் ஒளயுமே! மேலெல்லாம் வலிக்குமே’ன்னு ஓட்டமும் நடையுமா ஓடோடி வந்திருக்கேன். அந்த வலியும் வேதனையும் வந்தவுடன் என்னயக் கட்டிக்கிட்டதுல தீந்துபோச்சுல்ல, இப்ப ஒனக்குச் சந்தோசம் தானே!”


“இதக் காட்டிலும் சந்தோசம் இன்னொன்னு இருக்கு தெரியுமா?”

“அப்படியா? அது என்ன?”

“தன்னந்தனியா, நடுராத்திரியில, கூதக்காத்துல ஒடம்பெல்லாம் நடுங்க, நீ எப்ப வருவியோ, எப்படி வருவியோ’ன்னு தவிப்போட, ஊரெல்லாம் தூங்கயில, உள் மனசு ஏங்கயில, நேரம் ஆக ஆக, நெஞ்செல்லாம் படக் படக்னு அடிக்க, ஒன் நெனப்புல ஏங்கிக்கிட்டுக் காத்துக்கெடக்கேன் பாரு, அதுதான் இப்ப இருக்கிறதக் காட்டிலும் இனிப்பா இருக்கு”

இவ்வளவு கஷ்டப்பட்டாலும் அது இனிக்குது என்கிறாளே, என்று வியந்தது அவன் நெஞ்சம்.

”அட கேணப்பயலே! ’உன்னயப் பாத்ததும் நான் பட்ட கஷ்டமெல்லாம் பறந்துபோச்சு’ன்னு மட்டும் அவள் சொன்னாள்’னு வச்சுக்க, நீ இப்படியேதான வந்துகிட்டும் போய்க்கிட்டும் இருப்ப! அப்ப என்னக்கி கலியாணம் பண்ணிக்கப் போற? அதான் அவ உன்னப் பாக்குறதக் காட்டிலும் அதுக்குப் படுற கஷ்டம் இனிக்குது’ங்கிறா. அதப் புரிஞ்சுக்க” என்று அவன் மனம் இடித்துரைத்தது.

இவளின் இந்த வேதனையைப் போக்க, சீக்கிரமா இவளக் கல்யாணம் செஞ்சுக்கிற வழியப் பாக்கணும். அவன் தன் மனத்துக்குள் கூறிக்கொண்டான்.

“இன் இசை உருமொடு கனை துளி தலைஇ
மன் உயிர் மடிந்த பானாள் கங்குல்
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழை
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை 5
கூதிர் இல் செறியும் குன்ற நாட
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க பல் ஊழ்
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
நும் இல் புலம்பின் நும் உள்ளு-தொறும் நலியும் 10
தண் வரல் அசைஇய பண்பு இல் வாடை
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி
மனை மரம் ஒசிய ஒற்றி
பலர் மடி கங்குல் நெடும் புறநிலையே” (பாடல் - அகநானூறு - 58 ; திணை - குறிஞ்சி. பாடியவர் : மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் )


அருஞ்சொற்பொருள்:

உரும் = இடி; கனை துளி = பெரிய மழை; மடிந்த = உறங்கிக்கிடந்த; பானாள் = நடுராத்திரி; கங்குல் = இருள்; வேட்டம் = வேட்டை; விளிவிடம் = பாதுகாப்பான இடம்; வரி அதள் = புலித்தோல்; சேக்கை = படுக்கை; கொடிச்சியர் = குறப்பெண்கள்; ஞெமுங்க = அமுங்க; பல் ஊழ் = பல முறை; தொடி = வளையல்; நும் இல் புலம்பு = நீ இல்லாத தனிமை; ஒசிய = ஒடிய;

அடிநேர் உரை

“இனிய ஓசையுடன் கூடிய இடியுடன் பெரிய மழை பெய்ய,
உலகத்து உயிர்களெல்லாம் துயின்ற பாதியிரவில்,
காட்டில் தேடுகின்ற வேட்டை முடிவடையாமல்
புலித்தோல் விரித்த படுக்கையில், தெரிந்தெடுத்த அணிகலன்களைக் கொண்ட
தேன் மணக்கும் கூந்தலையுடைய குறப்பெண்களின் தந்தையர்
குளிரில் தம் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் குன்றுகளின் தலைவனே!
வடிவமைக்கப்பட்டதைப் போன்ற இளமையான முலைகள் அமுங்க, பலமுறை
மின்னும் வளையணிந்த முன்கை வளைந்து முதுகினைச் சுற்றிக்கொள்ள
உனது மார்பை அணைப்பதிலும் இனியதாயிற்று -
நீவிர் இல்லாத தனிமையில் நும்மை நினக்குந்தோறும் வருந்தி மெலியும்,
குளிருடன் அசைந்து வரும் பண்பு இல்லாத வாடையில்,
நீ வரப்பெறாமல் நும் வருகையைப் பார்த்துப் பதனழிந்து,
வீட்டு மரத்தில் சாய்ந்து ஒட்டிக்கொண்டு
பலரும் துயிலும் இரவில் நீண்ட நேரம் வெளியில் நின்றுகொண்டிருக்கும் என் நிலை”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/classicalliterature/p1.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License