இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
சங்க இலக்கியக் கதைகள்

நெஞ்சின் முகத்தில் கரி!

முனைவர் ப. பாண்டியராசா


முல்லைக்கு ஒரே மகிழ்ச்சி - திடீரென்று அப்பாவைப் பார்த்ததில். வெளியூரிலிருந்து வேறு சோலியாக வந்திருந்த அவர், வேலையை முடித்துவிட்டு மகளைப் பார்க்க வந்திருந்தார். கைகால்களையும் முகத்தையும் நடு முற்றத்தில் நன்றாக அழுத்திக் கழுவிப் பின் தோளில் கிடக்கும் துண்டால் அழுந்தத் துடைத்துவிட்டு, “உஸ், அப்பாடா!” என்று முற்றத்துப் பாதை ஓரத்தில் காலைத் தொங்கப்போட்டு அமர்ந்து கொண்டார். ஊரில் எல்லாரின் நலத்தையும் விசாரித்த முல்லை, “இருங்கப்பா, சாப்பிட்டுட்டுத்தான் போகணும்” என்று சொல்லி சமையலுக்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தாள். “மாப்பிள்ளை எப்பம்மா வேலையிலிருந்து திரும்புவார்?” என்று கேட்டார் அப்பா. “அவரெங்கப்பா வேலைக்குப் போறாரு!” என்று அங்கலாய்த்தாள் முல்லை. “ஏம்மா? என்ன ஆச்சு?” என்று வியப்புடன் கேட்ட தந்தையின் பேச்சை மாற்றினாள் முல்லை. “அவருக்குச் சொல்லி விடுறேன், வருவாரு, அவர்கிட்டயே கேளுங்க. இப்ப நம்ம கதயப் பேசுவோம்” என்று ஊர்ப் பேச்சையும் சமையலையும் தொடர்ந்தாள்.

சமையல் முடிந்ததும், எதிர்வீட்டுப் பையன் மூலம் உடனே வரச்சொல்லி கணவனுக்குச் சேதி அனுப்பினாள் முல்லை. ஊர்ச்சாவடியில் உட்கார்ந்து கொண்டு வெளியூருக்கு வேலைக்குப் போவதைப் பற்றியே பீற்றிக் கொண்டிருப்பான் அவன். என்னமோ ஏதோவென்று பதறியடித்துக்கொண்டு அவன் உடனே வந்தான். வந்தவன், உட்கார்ந்திருந்த மாமனாரைக் கண்டதும், அவசரம் அவசரமாக இடுப்பு வரை ஏற்றிக் கட்டியிருந்த வேட்டியைக் கால்வரைக் குனிந்து இறக்கிவிட்டு, “வாங்க மாமா! என்ன சொல்லாமக் கொள்ளாம” என்றவாறு நலம் விசாரித்தான். “சரி, சரி, நேரமாச்சு, சாப்பிட வாங்க” என்று முல்லை கூற, அவனும் கைகால் கழுவி வந்தபின், மாமனார், மருமகன் இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள்.

தடபுடல் சாப்பாட்டை ருசித்துச் சாப்பிட்ட அவன், சிறிது நேரம் மரியாதைக்குப் பேசியிருந்துவிட்டு, “கொஞ்சம் சாஞ்சுக்கிறேன் மாமா, நீங்களும் வாங்களேன்” என்றான். அவர், “இல்ல மாப்பிள, ஊருக்குப் போகணும், இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டுப் பொறப்படுறேன். நீங்க போங்க, நான் போகும்போது சொல்றேன்” என்று சொன்னார்.

அவன் அடுத்த அறைக்குள் நுழைந்து, பாய்விரித்துப் படுத்துக் கொண்டான். தந்தைக்கும் மகளுக்கும் நடக்கும் உரையாடலில் தன்னைப் பற்றியும் பேச்சு வருமோ என்ற எண்ணத்தோடு அவன் தூக்கத்தில் ஆழ்ந்து போனான்.

மகளின் அருகே அமர்ந்துகொண்ட தந்தை, பரிவுடன் அவள் தலையைக் கோதிவிட்டார். சோறுபோட்ட கையைத் தடவிக் கொடுத்தார். அப்புறம், “ஏம்மா, மாப்ள எந்த வேலைக்கும் போகாம சும்மா ஊரச் சுத்திக்கிட்டா திரியுறாரு?” என்று கவலையுடன் கேட்டார். “ஷ், அவர் தூங்கிட்டாரா’ன்னு பாத்துட்டு வாரேன்” என்று சொல்லிய முல்லை மெதுவாக எழுந்து சென்று அடுத்த அறையை எட்டிப்பார்த்தாள். அவன் அந்தப்பக்கம் திரும்பி ஒருக்களித்துப் படுத்துக் கிடந்தான். சற்றுநேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, திரும்பிய முல்லை, “தூங்கிட்டார்’னு நெனக்கிறேன், எதுக்கும் மெல்லவே பேசுங்க” என்று குசுகுசுத்த குரலில் அப்பாவையும் எச்சரித்தாள்.

“எந்த வேலக்கும் போகாம மனுசன் என்ன செய்யுறாரு”

“அந்தக் கூத்த ஏன் கேக்குறீங்க? என்னமோ வேலை செய்ய வெளிய போறாராம்”.

“வெளியூருக்கா?”

“இல்லப்பா! அடுத்த நாட்டுக்கே!”

“கொள்ளத்தொலவெட்டு போகணுமே! ஆளரவமே இல்லாத அத்துவானக் காட்டத் தாண்டில்ல போகணும்!”

“ஆமா! அது அவருக்குப் பெரிசாப் படல”

“யம்மா, இங்கயே வெயிலு இந்தக் கொளுத்து கொளுத்துது! அந்த கட்டாந்தரைப் பூமி கங்கு மேலக் கால்வச்சது மாதிரி கொதிக்குமே’மா!”

“என்ன செய்யுறது? போய்த்தேன் ஆவேன்’னு மனுசன் ஒத்தக் கால்’ல இல்ல நிக்கிறாரு!”

“அந்த யா மரத்து உச்சிக்குள்ள காத்து புகுந்து ‘உய்ங் உய்ங்-னு ஊளை எழுப்பி அலறுமேம்’மா!”

“அப்படியா? அங்க வேற யாரும் இருக்க மாட்டாங்களா?”

“ரெண்டு பேரு இருப்பாங்க! என்னடா கெடைக்கும்’னு மேல சுத்திக்கிட்டு இருக்கிற கள்ளப்பராந்தும், அது எப்படா வரும்’னு காஞ்சுபோன மரத்துல காத்துட்டு இருக்கிற பொட்டப் பராந்தும்”

“எது? அந்தக் கறித்துண்ட பொதச்சுவச்ச மாதிரி சிவீர்’னு காத வச்சுக்கிட்டு வட்டம் போட்டுச் சுத்திவருமே அந்தப் பராந்தா?”

“ஆமா, வேற யாரு அங்கபோயி இருப்பா? அடிக்கிற வெயில்’ல அந்தப் கள்ளப்பராந்து றெக்க கூடக் கருகிப்போயிருக்கும்’னா பாத்துக்கோயேன்!”

“ஆமா, இம்புட்டயும் தாண்டிப்போகணும்’னு இந்த மனுசனுக்கென்ன தலையெழுத்தா?”

“கேட்டா, மருமகன் காசு கெடைக்குதில்ல’ம்பாரு”

“ஆனா, வீட்ட விட்டுப் போகணுமே’ன்னு யோசிக்கமாட்டாரா?” என்று கேட்ட முல்லைக்குக் கண்கள் குளமாயின.

“ஒன்னப் பூப்போலக் கண்ணுக்குள்ள வச்சுக் காப்பாத்துவேன்’னு என் கையப் பிடிச்சுச் சொன்னாரும்மா மருமகன் அன்னிக்கி” என்றார் அப்பா.

முல்லையின் வீங்கிய மார்புகள் புடைத்தெழ அவள் ஓங்கி ஒரு பெருமூச்சுவிட்டாள். இந்த ஏந்திய மார்புகளை அவன் எத்துணை ஆசையுடன் தழுவி மகிழ்ந்திருப்பான் என்று ஏக்கத்துடன் நொந்து போனாள். இந்தச் சங்கு வளையல்கள் குலுங்க அவனைத் தான் தழுவி மகிழ்ந்ததையெல்லாம் மறந்துவிட்டானோ என்று மயக்கம் கொண்டாள். தான் வளர்த்த குஞ்சின் ஏக்கம் அந்தத் தந்தைச் சேவலுக்குப் புரியாமலிருக்குமா?

“ந்தா பாரும்மா, எனக்கென்னமோ தோணுது. அவரு நிச்சயம் போகமாட்டாரு. இங்கயே இருக்கிற வேலயப் பாத்துக்கிட்டு, கஞ்சியோ கூழோ - அவரு சம்பாரிச்சுப்போட, நீ கண் கலங்காம இருப்ப’ம்மா” என்றார் ஆதரவாக.

அடுத்த அறையில் அரைத்தூக்கத்தில் அத்தனையையும் கேட்டுக்கொண்டுதான் அவன் படுத்திருந்தான். நன்கு விழிப்பு வந்ததும், ஒன்றுமே தெரியாதவன்போல், ஒரு பாவனைச் சோம்பல் முறுக்குப் போட்டுக்கொண்டே வெளியே வந்தான்.

முல்லை பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்தாள்.

“அப்பா எங்க?” என்றான் அவசரமாக.

“அது போயிருச்சு அப்பவே” என்றாள் அவள்.

“எப்ப?”

“நீ அந்தப்பக்கம் தூங்கப் போன ஒடனே இந்தப் பக்கம் எந்திருச்சுப் போயிருச்சு. கொள்ளச் சோலி கெடக்கு, இப்பப் பொறப்பட்டாத்தான் பொழுதிருக்க ஊர்போய்ச்சேர முடியும், மாப்ளகிட்ட சொல்லிரும்’மா-ன்னு சொல்லிட்டுத்தான் போச்சு”

“அப்ப நானு வேல பாக்காம இருக்கிறது; வெளியூருக்குப் போகணும்’குறது-ன்னு ஒன்னுகூட நீ சொல்லலியா?”

“இதெல்லாம்போயி அப்பாகிட்டச் சொல்லுவனா? என்ன இப்படிக் கூறுகெட்டத்தனமா பேசுற?. வந்தாரு, ஊரப்பத்திப் பேசுனாரு, சாப்டாரு, போயிட்டாரு, அம்புட்டுதேன். ” என்று அதட்டினாள் முல்லை.

அவனுக்குக் குழப்பமாக இருந்தது. முல்லையின் அப்பா வந்துசென்றது நெசம். அவர் தன்னைப்பற்றி விசாரித்ததெல்லாம்? கனவா, மெய்யா அல்லது கயிற்றரவா? என்னதான் அவன் வீறாப்பாக வெளியூருக்குப் போவேன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தாலும் மனத்துக்குள் ஒரு தயக்கம் இருந்துகொண்டேதான் இருந்தது. சொல்லப்போனால் அவனுக்கும் அவன் நெஞ்சுக்கும் ஒரு போராட்டமே நடந்துகொண்டு இருந்தது. “போ, போ” என்று நெஞ்சம் பிடித்துத் தள்ள, அவன் உள்ளமோ முரண்டுபிடித்தது. நெஞ்சத்துக்கு வேண்டுமானால் காசு அருமையானதாக இருக்கலாம். அந்த உள்ளத்துக்குத்தானே தெரியும் இங்கிருக்கும்போது கிடைக்கும் மனைவி சுகம். இன்றைக்கு அந்த உள்ளம் மாமனார் வடிவில் வந்து பேசி அவன் மயக்கத்தைத் தெளிவாக்கிவிட்டது.

அவன் பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்த முல்லையின் பின்பக்கத்தில் வந்து அவளை ஆசையுடன் அணைத்துக் கொண்டான். அவள் விசும்பினாள். “பொறு’ம்மா. ஒன்னு சொல்றேன் கேளு. நான் வெளியூருக்கெல்லாம் போகல்ல. இங்கதான் இருக்கப்போறேன்”

“நெசம்மா?”

“நெசம்மாடா தங்கம். நாளக்கே கலப்பயத் தூக்கிக்கிட்டுக் காட்டுக்குப் போவோம். கம்பு வெதைக்க உழுதுபோடணும்” என்றான் அவன்.

கரிச் சட்டியைவிட்டுக் கைகளைத் தூக்கிப் பின்புறமாக வளைத்து அவன் கன்னத்தை இறுக்கப்பிடித்தாள் அவள்.

அவன் கன்னமெல்லாம் அடுப்புக்கரி. கன்னத்தில் மட்டுமா? “போ, போ” என்று பொடனியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டிருந்த அவன் நெஞ்சில்தான் அத்தனை கரியும்!!!

"ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற
நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்துப்
போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி
ஊன் பதித்து அன்ன வெருவரு செஞ் செவி 5
எருவைச் சேவல் கரிபு சிறை தீய
வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை
நீ உழந்து எய்தும் செய்வினை பொருட்பிணி
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
பிரியின் புணர்வது ஆயின், பிரியாது10
ஏந்து முலை முற்றம் வீங்க பல் ஊழ்
சே இழை தெளிர்ப்பக் கவைஇ நாளும்
மனை முதல் வினையொடும் உவப்ப
நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே

(அகநானூறு - பாடல் 51 - பாலை - பெருந்தேவனார் - நினை மாண் நெஞ்சம்)

அடிநேர் உரை

"ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுவழியில், சூரியனின் கதிர்கள் சுடுதலால்
மிக்க வெம்மை பரவிய - நீண்ட அடிமரத்தை உடைய யா மரத்தில்
புகுந்துகொண்டு செல்லும் காற்று முழங்கும் பொலிவற்ற உயர்ந்த கிளையில்,
புலால் விருப்பத்துடன் இருக்கும் தன் பேடையின் முகத்தைப் பார்த்து வரும்
மாமிசத்துண்டைப் பதித்து வைத்ததைப் போன்ற அச்சம்தரும் சிவந்த செவியை உடைய
ஆண் பருந்தின் சிறகுகள் கரிந்து தீய்ந்துபோக,
வேனில் நீண்டிருக்கும் - மூங்கில்கள் உயர்ந்த - அகன்ற காட்டுவெளியில்
நீ துன்புற்றதால் கிடைக்கும் வேலையினால் அடையும் சம்பாத்தியம்
பூப்போன்ற குளிர்ந்த கண்களையுடைய மாநிறத்தவளைப்
பிரிவதால் பெறுவது என்றால், அவளைப் பிரியாமல்
அவளின் நிமிர்ந்த மார்பகங்கள் விம்ம, பலமுறை
சிவந்த அணிகலன்கள் ஒலிக்க அவளைத் தழுவி, நாள்தோறும்
தலைவியுடன் இல்வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க
நினைப்பாயாக! சிறந்த நெஞ்சமே! நீ அவளைவிட்டுப் பிரிதலை மறந்து"

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/classicalliterature/p3.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License