"அதிகாலை தொழுகை முடிந்ததும் அவசரமா ஓடிப் போறியே? என்ன விஷயம்?" அன்வரிடம் சேமக்கண்ணு கேட்டார்.
"கடைத் தெருவுக்குத்தான்!"
நம்ம நபி அதிகாலைத் தொழுகைக்குப் பிறகு மூணு தகவல்களை இறைவன் கிட்டேக் கேப்பாங்க. அதை நாமும் கேட்க வேண்டாமா?”
“என்னென்ன தகவல்களை நபி கேப்பாங்க?”
"பயனுள்ள கல்வி, பரிசுத்தமான உணவு, ஏற்றுக்கொள்ளப்படும் நல்லறம்"
இனிமேல் நானும் கேட்கிறேன் மாமா, ஆனா தாமதமாப் போனால் முஸ்தபா கடையில புட்டுக்கு சிறுபயறு கிடைக்காதே?”
“சிறுபயறு முக்கியமா? நபியுடைய நடைமுறை முக்கியமா?”
“நபியுடைய நடைமுறைதான் முக்கியம்!”
“அப்போ நாளையிலிருந்து அதை செயல்படுத்து!”
“சரி மாமா! ஆனா, நீங்க எங்கே உடனேப் போறீங்க?”
“எனக்கு வேண்டுதலும் முக்கியம், சிறுபயறும் முக்கியம். அதனாலே, அதிகாலையிலே இந்த வேண்டுதலைக் கேட்டுட்டு, தொழுகை முடிந்தவுடன் முஸ்தபா கடைக்குப் போயி புட்டும் சிறுபயறும் வாங்கிடுவேன்!”
“...!...?...!...?...!...?”