இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை - தொடர்
சங்க இலக்கியத் தொடர்கதைகள்

ஆதிமந்தி ஆட்டனத்தி- பகுதி - 6.

வாசுகி நடேசன்


“மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே” - ஆதிமந்தியார்.

(குறுந்தொகை பாடல் 31)


ஆதி மந்தி கண்களில் காவிரி ஆறு புகுந்து கொண்டது போலும். அவள் உள்ளம் வேதனையால் வெதும்பிக் கொதித்துக் கொண்டிருந்தது. அவளால் ஆட்டனத்தியை ஒருகணப் பொழுது கூட நினைக்காமல் இருக்க முடியவில்லை,

ஆட்டனத்தி பேரழகன். மலையை ஒத்த தோள்களையுடையவன். அவன் ஊர்த் திருவிழாவின் போது, மள்ளரோடு கழல்கள் அணிந்த தன் கால்களால் சுழன்று சுழன்று ஆடிய அழகு கண்டு மலைத்து நின்றாள் ஆதிமந்தி. அன்று, அவன் நினைவால் அவளால் துணங்கைக் கூத்தில் கூட சரிவரப் பங்குகொள்ள முடியவில்லை. ஓரத்தில் நின்று துணங்கைக் கூத்தினை ரசித்துக் கொண்டிருந்த ஆட்டனத்திக்கு ஆதிமந்தி தன் மீது தனிக்கவனம் கொண்டுள்ளாள் என்பதை உணர்வது கடினமாக இருக்கவில்லை. மூங்கிலின் பளபளப்போடு அமைந்த தோள்களும், காந்தல் கண்களும் சிறுத்த இடையுமாய் அழகோவியமாய் ஆடும் அவளின் கடைக்கண் பார்வைக்காக அங்குள்ள இளைஞர்கள் ஏங்கியிருக்கையில் அவள் தன் மீது காதல் பார்வையை எறிந்தது அவனுக்குப் பெருமையைத் தந்தது.

இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டன. முதல் சந்திப்பிலேயேத் தாம் யுகம் யுகமாய் காதலராய் இருந்தவர்கள் என உணரத்தலைப்பட்டனர்.

அவர்கள் காதல் திருமணத்தில் முடிந்தது. அன்றில் பறவைகளைக் காணாதவர்கள் கூட, இவர்களை அன்றில் பறவைகளுக்கு உதாரணமாகக் கூறினர். காதலால் அன்பின் எல்லையைத் தொட்டுவிடத் துடித்துக் கொண்டிருந்த வேளையில்தான் அந்தக் கொடுமையான நாள் அவர்கள் வாழ்வில் குறுக்கிட்டது.

அன்று ஆடிப்பெருக்கு. காவிரி அன்னைக்கு சோழன் கரிகால் வளவன் பெருவிழா எடுக்கிறான். கழாஅர் என்ற காவிரிக் கழிமுகத்தை அண்டி அமைந்த ஊரில் இந்திர விழா கொண்டாடப்பட இருந்தது. அதில் கரிகாலன் முன், நீரில் நடனமாடும் வாய்ப்பு ஆட்டனத்திக்குக் கிடைக்கிறது. அவனுக்கு இணையாகக் காவிரி என்ற நடன மாது ஆடுகிறாள்.


கரிகாலன் ஆரவாரமிக்க தனது சுற்றத்துடன் காவிரிக்கரையில் வீற்றிருக்கிறான். பாணரது இசை எட்டுத்திக்கும் முழங்குகிறது,

அழகிய கச்சினை உடுத்தியவனாய் தனது கழல்கள் நீரின் மேலே தெரியும்படி இடுப்பில் கட்டியிருந்த பொன்னாலான மணி ஒலிக்கவும், தனது உடலைப் பலவாறு வளைத்து காண்பவர்கள் மகிழும்படி தன் இணையான காவிரியுடன் இணைந்து நடனமாடுகிறான் அத்தி. அவன் ஆட்டத்தின் சிறப்பால் ஈர்க்கப்பட்டு அவனை தன்னுள் அடக்கிவிடத் துணிந்தது போல காவிரி திடீரென மிகுதியாய் பெருக்கெடுக்கிறது. அத்தியையும் காவிரியையும் புது வெள்ளம் அடித்துச் செல்கிறது.

ஆதிமந்தியால் கணவனின் பிரிவைத் தாங்கமுடியவில்லை. அவளும் அத்தியும் உயிரால் முழுமையாக இணைந்தவர்கள். அதனால் அவள் உள்ளுணர்வு தன் கணவன் உயிருடன் இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தது. ஆனாலும் அத்தி அவளைத் தேடித் திரும்பவில்லை.

“என்னை அவன் மறந்தானோ… “ அவளால் அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை. அவன் மறந்தால் என்ன? அவனை நான் மறவேன். எவ்வாறாயினும் தேடி அடைவேன் எனத் தீர்மானித்துக் கொண்டாள்.

அவள் நாடு நாடாகச் சென்றாள். ஊர் ஊராக நடந்தாள். துணங்கைக் கூத்து நடக்கும் இடங்களிலும் மள்ளர் தழுவியாடும் ஆட்டக் களத்திலும் அவள் தேடுதல் தொடர்ந்தது. கண்டவர் நின்றவர்களிடம் எல்லாம் தன் காதல் கணவனைக் கண்டீரோ என வினாவினாள். பித்துப் பிடித்தவள் போன்று கலங்கி நிற்கும் இவள் நிலை பார்ப்பவர்களிடத்தில் பேரிரக்கத்தை ஏற்படுத்தியது. இவளின் காதலின் பரிதவிப்பு கண்டவரைக் கலங்க வைத்தது.

அப்படித்தான் அந்தக் கடற்கரை ஊருக்கும் அவள் வந்தாள்.

காவிரி நதி அத்தியோடு இணையாக ஆடிய காவிரியைத் தன்னுள் இழுத்துக் கொண்டாலும் அத்தி மீது இரக்கம் கொண்டு கரை ஒதுக்கிவிட்டது. கரையில் ஒதுங்கி இருந்த அத்தியை மருதி என்ற மீனவப்பெண் கண்டாள். நதியின் இழுப்புக்கெல்லாம் அலைக்கழிக்கப்பட்டு உடலெல்லாம் புண்ணாகத் தன்னினைவற்றுக் கிடந்த அத்தியைத் தன் தோழியரின் உதவியுடன் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றாள் மருதி.

தன் குடிசையில் வைத்து அவனுக்குச் சிகிச்சை அளித்தாள். உடல் வேதனையால் தவிக்கும் அத்தியிடம் அவன் பெயரையோ அவன் வரலாற்றையோ கேட்க மருதிக்கு மனம் வரவில்லை. அத்தி மணமானவனா? இல்லையா? எனவெல்லாம் ஆராய அவள் முற்படவில்லை.

ஆனால், மெல்ல மெல்ல அத்தி பால் அவள் மனம் ஈடுபடத் தொடங்கியதை அவளால் தடுக்கவும் முடியவில்லை.

அத்தி தன்னினைவற்ற நிலையில் “மந்தி மந்தி என் அன்பே” எனப் பிதற்றிய போது மட்டும் மருதி கவலையில் ஆழ்ந்தாள்.

அவனுக்கு உணவூட்டி மருந்து இட்டு சேவை செய்யும் போதெல்லாம் தன் காதலனுக்குச் செய்யும் சேவையாகவே கருதிச் செய்யலானாள். ஆனாலும், தன் மனக் கிடைக்கையை அத்தியிடம் சொல்லும் துணிவு மட்டும் அவளுக்கு வரவில்லை.

மருதியும் அழகிதான். கருத்த கற்சிலையின் நேர்த்தியான அழகு அவளுடையது. அவள் அருகாமையும், அவள் தன் மீது காட்டும் அளவு மீறிய அன்பும் அத்தியை என்னவோ செய்தன. மருதி வார்த்தைகளால் சொல்லாவிட்டாலும், அவள் தன்னைக் காதலிக்கிறாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தே இருந்தது. சில சமயம் தானும் அவள் மீது காதலில் வீழ்ந்துவிடுவேனோ என்ற பயமும் அவனுக்கு உண்டாகிற்று. அவனுக்கு தன் மீதே வெறுப்பாக இருந்தது.

ஆதிமந்தி மீது அவன் கொண்ட காதல் அளவில்லாதது. அதுபோல் ஆதிமந்தியும் தன் மீது கொண்ட காதல் இந்த வானிலும் பெரிது. கடலிலும் ஆழமானது என்பது அவனுக்குத் தெரியும். தான் இல்லாது ஆதிமந்தி அளவிட முடியாத துன்பமும் தவிப்பும் அடைவாளே என எண்ணும் போது அசைக்க முடியாது கிடக்கும் தனது உடலை உதறிவிட்டுக் காற்றில் பறந்து அவளிடம் செல்லவேண்டும் என மனம் தவிக்கும். இந்த மனத் தவிப்பின் போதுதான், அவன் தனது காதல் வாழ்வு பற்றி மருதிக்கு சொல்லியிருந்தான். மருதி இப்படியொரு கதை அவனிடமிருந்து பிறக்குமென்று எதிர்பார்த்தவள் போலக் காணப்பட்டாள். ஆமை தன் ஓட்டுக்குள் தன்னை மறைத்துக் கொள்வதுபோல தன் காதலையும் மறைக்க முயன்று அவள் ஒவ்வொரு தடவையும் தோற்றுப் போகிறாள்.

இந்தத் போராட்டத்துடனேயே மாதம் ஒன்று கடந்துவிட்டது. அத்தி கோலூன்றி நடக்குமளவுக்குத் தேறிவிட்டான். அவனை வீட்டிலிருக்கவிட்டு மருதி பொது மன்றுக்குப் போயிருந்தாள்.

அங்கேதான் அவள் ஆதி மந்தியைக் கண்டாள். கண்களில் கலக்கமும் முகத்தில் ஏக்கமுமாய் அவள் ஆட்டனத்தியை தேடி வந்திருப்பதையும் மருதி கண்டாள். பெரும் தவிப்புடன் “நானும் ஆடுகள மகளே என்னை வருத்ததில் ஆழ்த்திப் பிரிந்த எனது காதலனும் ஆடுகளமகனே. அவனைக் கண்டீரோ” என மருதியையே வினவிய போது ஒரு கணம் அவள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானாள்.

அத்திமீது காதல் கொண்ட மனம் இல்லை எனக் கூறச் சொன்னது. ஆனால் மனட்சாட்சியோ உண்மையை உரை என வற்புறுத்தியது. இந்தப் போராட்டத்தில் அவள் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். இறுதியில் மனச்சாட்சியே வென்றது.

மருதி பதில் கூறாது ஆதிமந்தையைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்தாள்.

அங்கு அத்தியை கண்டாள் ஆதிமந்தி. தன் காதலே தன் கணவனைத் தன்னுடன் சேர்த்து வைத்தது என அவள் உறுதியாக நம்பினாள். மகிழ்ச்சியால் ஆனந்தக் கண்ணீர் பெருக அவனை அணைத்துக் கொண்டாள். பிரிந்தவர்கள் கூடிவிட்டார்கள். அணைத்தது அணைத்தபடியே இருக்கச் சில கணங்கள் நழுவிச் செல்கிறது.

மருதி செருமி தன் இருப்பை உணர்த்திய போதே அவர்கள் இவ்வுலகுக்கு வந்தனர். ஆதிமந்தி வெட்கத்துடன் புன்னகைத்துக் கொண்டாள்.

அத்தி, மருதியின் கைகளைப் பற்றி அவளுக்கு நன்றி கூறினான். அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் அவள் கையில் விழுந்து அவள் கையைச் சுட்டது. அத்தி தன் மீது கொண்ட காதலை எரித்துவிட்டான் என்றும், அந்தச் சாம்பலின் சூடுதான் அது என்றும் மருதி எண்ணிக்கொண்டாள். அந்த எண்ணம் அவள் உள்ளத்தையே வெடித்துவிடச் செய்துவிடும் போல இருந்தது.

“எனது பொக்கிசத்தை இதுவரை காத்து என்னிடம் ஒப்படைத்துள்ளாய். உனக்கு என்ன கைமாறு நான் செய்யமுடியும்” என்று கூறி நன்றிப் பெருக்குடன் அவளை அணைத்துக் கொண்டாள் ஆதிமந்தி.

இருவரும் விடைபெற்றுச் சென்றுவிட்டனர்.


மருதி தன் காதலை மறக்க முடியாதவளாகத் தகிக்கும் வெறுமையைப் பொறுக்க முடியாதவளாக, தமையனின் வள்ளத்தை தனியே எடுத்துச் சென்றதாகவும் புயலில் அவ்வள்ளம் அகப்பட்டதாகவும் அதன்போது அவள் இறந்ததாகவும் சிலர் கூறினர்.

சிலர் மருதி வேண்டுமென்றே கடலில் சென்று தன்னை மாய்த்துக் கொண்டதாகவும் கூறினர்.

எது எவ்வாறிருப்பினும் காதல் மட்டும் அழியாது வாழ்ந்து கொண்டிருந்தது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/classicalliterature/p6.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License