இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


12. மோட்டலில் நடந்த கலாட்டா!

மதுரையை நெருங்கிக் கொண்டிருந்தது, குணசீலனும், அமுதாவுக்கு பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேருந்து. திடீரென்று, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி இடது ஓரமாக திரும்பி, அங்கிருந்த மோட்டல் முன்பு நின்றது அந்த பஸ்.

"கால் மணி நேரம்தான் பஸ் இங்கே நிற்கும். ஓட்டல்ல சாப்பிடுறவங்க, இறங்கி சாப்பிட்டுட்டு வேகமா வந்திடுங்க. பஸ்ச தவறவிட்டா நாங்க பொறுப்பு இல்ல."

யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல், வழக்கமாக மோட்டல் வந்தவுடன் தான் சொல்லும் டயலாக்கை சொல்லிவிட்டு டிரைவருடன் ஓசி சாப்பாடு சாப்பிட இறங்கிக் கொண்டார் கண்டக்டர்.

"அமுதா... ஓட்டல் முன்னாடி வண்டி நிக்குது. போய் சாப்பிட்டுட்டு வருவோம்."

தூக்கக் கலக்கத்தில் இருந்த அமுதாவை தட்டியெழுப்பினான் குணசீலன்.

"அம்மாதான், விடியகாலமே எழுந்திருச்சி கஷ்டப்பட்டு புளியோதரை செஞ்சு குடுத்துருக்காங்கல்ல; வேற ஏன் ஓட்டலுக்கு போய் சாப்பிடனும்னு சொல்றீங்க?"

"பஸ்சுக்குள்ள சாப்பாட்டை ப்ரீயா வெச்சு சாப்பிட முடியாது. ஓட்டலுக்குப் போயிட்டு, அங்கே ஏதாவது சைடு டிஸ் வாங்கி, இதை சாப்பிடுவோம். ஓ.கே.யா?"

"அப்படீன்னா ஓ.கே.?"



புளியோதரை கட்டியிருந்த சிறிய பேக்கை மட்டும் எடுத்துக் கொண்டு இருவரும் கீழே இறங்கினார்கள். விசாலமான ஒரே ஹாலாக குட்டித் திருமண மண்டபம் போன்று இருந்தது அந்த மோட்டல். எல்லா டேபிள்களிலும் பயணிகள் ஆர்டர் கொடுத்துவிட்டு உணவுக்காக காத்திருந்தார்கள்.

எந்த டேபிள் காலியாக இருக்கிறது என்று கண்களால் தேடினான் குணசீலன். ஓரிடத்தில் இரண்டு சீட் மட்டும் காலியாக இருக்க, அங்கே இருவரும் போய் அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் புளியோதரை பார்சலை பிரித்ததும்தான் தாமதம், மோட்டல் சர்வர் அவசரமாக வந்து அப்படியொரு வார்த்தை சொன்னான்.

"ஸார்... இங்கே பார்சல் சாப்பாடு கொண்டு வந்து சாப்பிடக்கூடாது. இங்கேதான் வாங்கி சாப்பிடணும். நீங்க எழுந்திருச்சி வெளியே போங்க."

சர்வரின் இந்தப் பேச்சு குணசீலனை ஆத்திரப்படுத்தனாலும், அமைதியாகப் பேசினான்.

"நாங்க ஓசிக்கு இங்கே உட்கார்ந்து சாப்பிட வரல. சைடு டிஸ் என்ன இருக்கோ அதைச் சொல்லுங்க. ஆர்டர் பண்ணி, அதையும் சேர்த்து சாப்பிடுறோம்."

"மட்டன், சிக்கன், மீன் எல்லாமே இருக்கு. உங்களுக்கு அதுல என்ன வேணும்?"

சர்வர் இப்படிக் கேட்டதும், குணசீலனின் காதுக்கு அருகில் மெதுவாகப் பேசினாள் அமுதா.

"அதெல்லாம் ஆர்டர் பண்ணாதீங்க. நூறு ரூபா, இருநூறு ரூபான்னு பில்லைப் போட்டு தீட்டிடுவானுவ."

"அப்போ, என்னதான் ஆர்டர் பண்ணணும்?"

"பேசாம இரண்டு வடை மட்டும் ஆர்டர் பண்ணுங்க. அது போதும்..." என்றாள் அமுதா.

"ஹலோ சர்வர். இரண்டு வடை மட்டும் போதும்."

"இரண்டு வடை மட்டும் தானா? பில் கம்மியாதான் வரும். வேறு ஏதாவது வேணும்னாலும் ஆர்டர் பண்ணுங்க. கொண்டு வர்றேன்."

"அப்படீன்னா... ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் குடுங்க."

"சரி, இதோ கொண்டு வந்துடுறேன்..." என்று சொல்லிவிட்டுப் போன சர்வர், அடுத்த சில நிமிடங்களில் இரண்டு சிறிய கின்னங்களில் சாம்பாரில் மிதந்த வடைகளோடும், மினரல் வாட்டர் பாட்டிலோடும் வந்து நின்றான்.



"என்னங்க... வடை கேட்டா, சாம்பார் வடை கொண்டு வர்றீங்க?"

"எங்க ஓட்டல்ல இப்படித்தாங்க குடுப்போம்."

"சரி, வெச்சிட்டுப் போங்க. பில்லை கொண்டு வாங்க."

இரண்டு பேரும் சாப்பிட்டு முடிப்பதற்கு முன்பாகவே பில்லை கொண்டு வைத்தான் சர்வர். பில்லைப் பார்த்த மாத்திரத்தில் சட்டென்று எழுந்து விட்டான் குணசீலன்.

"என்ன பில்லுங்க போட்டு இருக்கீங்க? இரண்டு வடைக்கும், மினரல் வாட்டர் பாட்டிலுக்கும் சேர்த்து 70 ரூபாயா? சென்னையில சரவணபவன் ஓட்டல்ல ஒரு சாப்பாடே 60 ரூபாய்தான். மினரல் வாட்டர் ஃப்ரீயாவே குடுப்பாங்க. நீங்க என்னன்னா பகல்லையே கொள்ளையடிக்குறீங்க?"

"ஸார்... வாய்க்கு வந்தத எல்லாம் பேசாதீங்க. சாம்பார் வடை எங்க ஓட்டல்ல 25 ரூபா. நீங்க இரண்டு ஆர்டர் பண்ணி இருக்கீங்க. அதுக்கு 50 ரூபா ஆச்சு. மினரல் வாட்டர் 20 ரூபா. மொத்தம் 70 ரூபா. நீங்க இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா, நீங்க வந்த பஸ் உங்கள விட்டுட்டு போயிடும். பேசாம பணத்தை குடுத்துட்டு ஊருக்குப் போய் சேர்ற வழியப் பாருங்க..."

சர்வர் இப்படிச் சொன்னதும் கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டான் குணசீலன்.

"என்னங்க... அவசரப்படாதீங்க. இங்கே இப்படித்தான் ஏமாத்துவாங்க. அது தெரிஞ்சுதான் நான் முதல்லயே, பஸ்ல உட்கார்ந்தே சாப்பிடுவோம்னு சொன்னேன். நீங்கதான் கேட்கல. முதல்ல காச அவனுவ மூஞ்சியில தூக்கி எறிஞ்சிட்டு வாங்க."

அமுதா இப்படிச் சொன்னதும், பில்லுக்கான பணத்தைக் கொடுக்க பர்ஸை வேகமாக திறந்தான் குணசீலன். பத்து ரூபாய் தாள்கள் இல்லாததால் 100 ரூபாய் நோட்டை நீட்டினான்.

சில்லரை கொண்டு வராமல் ஏமாற்றி விடலாம் என்று சந்தேகப்பட்ட குணசீலன் சர்வரைப் பின்தொடர்ந்து சென்றான். பில்லுக்கான பணத்தைக் கொடுத்த சர்வர், 5 ரூபாயை எடுத்துக்கொண்டு 25 ரூபாய் மட்டும் குணசீலனிடம் கொடுத்தான்.

"25 ரூபாய்தான் இருக்கு. இன்னும் 5 ரூபாய் எங்கே?"

சர்வரிடம் கேட்டான் குணசீலன்.

"என்ன ஸார்... உங்களோட பெரிய ரோதனையா போயிடுச்சு? 5 ரூபா டிப்ஸ் ஸார்."

"டேய்... அத நான்தானே உனக்கு தரணும்?"

"அதைத்தான் நானே எடுத்துக்கிட்டேன்."



இதற்கு மேல் பேச்சுக்கொடுத்தால், அந்த சர்வரை ஓங்கி அறைய வேண்டியது இருக்கும் என்று எண்ணிய குணசீலன் அமுதாவுடன் அங்கிருந்து அவசரமாக வெளியேறி பஸ்சுக்குள் போய் உட்கார்ந்து கொண்டான். மோட்டல் என்கிற பெயரில் அங்கே நடந்த பகல் கொள்ளையை அவனால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

"என்னங்க... இதுக்குப் போய் ஏன் டென்ஷன் ஆகுறீங்க? நல்லவேளை நீங்க மட்டன், சிக்கன், மீனுன்னு ஆர்டர் பண்ணாம விட்டீங்க. அதை மட்டும் ஆர்டர் பண்ணியிருந்தா, 300, 400 ரூபாய பிடுங்கிட்டு விட்டுருப்பானுவ."

அமுதா இப்படிச் சொன்னதும் அவள் முகத்தை உன்னிப்பாகப் பார்த்தான் குணசீலன்.

"உனக்கு எப்படி இங்கே இப்படியெல்லாம் ஏமாத்துவாங்கன்னு தெரியும்?"

எதையோ சொல்ல வந்தவள், சட்டென்று அந்த வார்த்தையை தொண்டைக் குழியிலேயே அடக்கிக் கொண்டு வேறு பதிலைச் சொன்னாள்.

"இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நாங்க மதுரைக்கு போனப்போ, இந்த மாதிரிதான் ஒரு ஓட்டல்ல சாப்பிட்டோம். அங்கே எங்களை நல்லா ஏமாத்திட்டாங்க. அந்த அனுபவத்துலதான் சொன்னேன்."

முகத்தைத் தற்காலிக சோகமாக்கிக்கொண்டு சொன்ன அமுதாவை திடீரென்று ரசித்தான் குணசீலன்.

அந்த நேரத்தில் பஸ்சை டிரைவர் இயக்க... அமுதா மீது லேசாக முட்டிக் கொண்டு, அந்தக் கோபத்துக்கு மத்தியிலும் சிலிர்த்துக் கொண்டான். ஆனால், அமுதாவின் நெஞ்சுக்குள்தான் மறுபடியும் முடிந்துபோன காதல் ஞாபகம்.

இதுபோன்ற மோட்டல்களில் நடக்கும் ஏமாற்று வேலைகள் பற்றி தன்னிடம் சொன்னது, தனது முன்னாள் காதலன் அசோக்தான் என்பது அவளுக்கு மட்டும்தானே தெரியும்

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5l.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License