இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


20. திடுக்கிட வைத்த ஆடை!

நள்ளிரவுதான் ஊட்டிக்கு வந்திறங்கியதால், அமுதா காலையில் கண் விழித்த போது மணி ஒன்பதை தொட்டிருந்தது. முந்தையநாள் அதிகாலை முதல் தொடர்ந்த பஸ் பயணமும், அதைத் தொடர்ந்து செய்த கார் பயணமும் அவளை மிகுந்த களைப்பிற்கு உள்ளாக்கி இருந்தது.

தனக்கு அருகில் படுத்திருந்த குணசீலனைப் பார்த்தாள். அவனைக் காணவில்லை.

“அவரு எங்கே போய் இருப்பாரு?” என்று அவள் கண்களால் வேகமாக தேடிய போது, குளித்து முடித்துவிட்டு ஃப்ரெஸ் ஆக வெளிப்பட்டான் குணசீலன்.

“முழிச்சிட்டீயா அமுதா? அடிச்சிப்போட்ட மாதிரி தூங்கிட்டு இருந்த. அதான்... கொஞ்ச நேரம் தூக்கட்டுமேன்னு விட்டுட்டேன். பைப்ல வெதுவெதுன்னு வெந்நீர் வந்துட்டு இருக்கு. வேகமாகப் போய் குளிச்சிட்டு வந்துடு. இப்பக் குளிக்கலன்னா... இன்னிக்கு முழுவதுமே நீ குளிக்க முடியாது.”

“ஏன்... தண்ணீர் வராதா?”

“தண்ணீர் வரும். ஆனா... ஐஸ் வாட்டர் ஆகியிருக்கும். நாமதான் குளிக்க முடியாது!”



“ஓ... அப்படியா? சரி... உடனே குளிச்சிட்டு வந்திடுறேன்...” என்ற அமுதா, வேகமாக பாத்ரூமிற்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள்.

அடுத்த இருபதாவது நிமிடத்தில் பாத்ரூமிற்குள் இருந்து அமுதா வெளியே வந்த போது, அவள் மீது வியப்பான பார்வையை வீசினான் குணசீலன்.

உடல் முழுக்க மஞ்சள் தேய்த்துக் குளித்து, சிகப்பு நிற நைட்டியில் வெளிப்பட்ட அமுதா, ஊட்டி ரோஸ் கார்டனில் பூத்த நடமாடும் ரோஜாவாகத் தெரிந்தாள்.

“வாவ்... வாட் எ பியூட்டி? அமுதா... இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்கத் தெரியுமா? என் கண்ணே பட்டுடும் போல இருக்கு...”

குணசீலனின் பாராட்டு மழை அமுதாவை நனைக்கவே இல்லை. அவன் சொன்னதற்கு, எந்தப் பதிலும் சொல்லாமல் அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள்.

“ஏன் அமுதா? நீ ரொம்ப அழகா இருக்கேன்னு வாய் நிறைய சொல்றேன். பதிலுக்கு எதுவும் பேசாவிட்டாலும், கொஞ்சமாவது சிரிச்சு வைக்கலாம் இல்லீயா?”



மறுபடியும் அமுதாவிடம் மவுனம்!

“நான் சொல்றது உன் காதுல விழுதா, இல்லையா?” சற்று குரல் உயர்த்திக் கேட்டான் குணசீலன்.

“என்னங்க ஆச்சு, உங்களுக்கு? திடீர்னு எங்கிட்ட கோபப்படுறீங்க?”

அமுதா இப்படிக் கேட்டதும் அமைதியாகிப் பேசினான் குணசீலன்.

“இல்லை அமுதா. நான் நார்மல் ஆகத்தான் இருக்கேன். நீதான் மவுனமா இருக்க. என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?”

“என்னங்க அப்படிக் கேட்டுட்டீங்க? நமக்கு கல்யாணம் ஆகி பத்து நாள்கூட ஆகல. இப்போ, நான் உங்ககூட ரொம்ப தொலைவுல தன்னந்தனியா இருக்கேன். அப்படி இருக்கும்போது, எங்கிட்ட பயம், பதற்றம் இல்லாம இருக்குமா?”

“அது ஓ.கே., வேற காரணம் ஏதும் இல்லையா?”

“இப்போதைக்கு இல்லதான்!”

“இப்போதைக்குன்னா...?”

‘ஏங்க... நான் என்ன சொன்னாலும் நீங்க கேள்விக் கேட்டுட்டே இருப்பீங்களா? சும்மா விளையாட்டுக்குக் கூட உங்ககிட்ட பதில் சொல்லக்கூடாதா?”

“ஓ... விளையாட்டுக்குத்தான் அப்படிச் சொன்னாயா? நான் வேற மாதிரி நினைச்சிட்டேன்.”

“வேற மாதிரின்னா?”

“ஏன்... நானும் உன்கிட்ட விளையாடக்கூடாதா?”



குணசீலனின் அந்தப் பேச்சு அமுதாவின் மவுனத்தை கலைத்தது. லேசாக சிரித்து வைத்தாள்.

அமுதா சிரித்த அதே கணம், அங்கிருந்த போன் மெதுவாக சிணுங்கியது. ரிசீவரை எடுத்த குணசீலன், அதை இடது காதுக்குள் கொடுத்தான்.

“குட்மார்னிங் ஸார்... ரிஸப்ஷனிஸ்ட் அனிதா பேசுறேன் ஸார். நீங்க இன்னிக்கு டிராவலுக்குக் கேட்ட கார் வந்திடுச்சு. உங்களுக்காக டிரைவர் வெயிட் பண்ணிட்டு இருக்காரு.”

“இன்னும் பத்து நிமிஷத்துல கீழே வந்துடுறேன்...” என்ற குணசீலன் போன் இணைப்பை அவசரமாகத் துண்டித்தான்.

“அமுதா... நான் ஏற்கனவே புக் பண்ணின டிராவல்ஸ் கார் கீழே ரெடியா நிக்குது. முதல்ல ஹோட்டலுக்கு போய் திருப்தியா சாப்பிட்டுட்டு, இன்னிக்கு முழுக்க ஊட்டியைச் சுற்றிப் பார்க்கப் போறோம். நாம இங்கே வந்திருக்கிறது ஹனிமூன்ங்றதுனால உனக்காகவே ஸ்பெஷலா டிரெஸ் வாங்கிட்டு வந்திருக்கேன், உனக்குத் தெரியாம! இது, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி, பல ஆசைக் கனவுகளோட நானே எடுத்தது. இந்த டிரெஸ்ல என் மனைவி எப்படியெல்லாம் இருப்பான்னு கனவெல்லாம் கண்டிருக்கேன். அந்தக் கனவு இன்னிக்கு நனவாகப் போகுது...” என்றுச் சொல்லிப் பூரித்த குணசீலன், தனது சூட்கேசுக்குள் இருந்து அந்த டிரெஸ்ஸை எடுத்து அமுதாவிடம் நீட்டினான்.

அதைப் பிரித்துப் பார்த்த அமுதாவின் முகத்தில் பலத்த அதிர்ச்சி!

அவள் கையில் இருந்தது, நவநாகரீகப் பெண்கள் விரும்பும் ஜீன்ஸ், டீ-சர்ட்!

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5t.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License